Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Leviticus Chapters

Leviticus 2 Verses

1 ஒரு மனிதன் ஆண்டவருக்குப் பலியாகக் காணிக்கையை ஒப்புக்கொடுக்கிற போது, அவனது காணிக்கை மிருதுவான மாவாயிருந்தால், அவன் அதன்மேல் எண்ணெய் வார்த்துத் தூபவகைகளையும் இட்டு, ஆரோனின் புதல்வர்களாகிய குருக்களிடம் கொண்டு போவான்.
2 அவர்களில் ஒருவன் மிருதுவான மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடியும் தூபவகை முழுவதையும் எடுத்துக் கொண்டு, பீடத்தின் மீது நினைவுச் சின்னமாகவும் ஆண்டவருக்கு நறுமணமாகவும் வைப்பானாக.
3 பலிப்பொருளில் எஞ்சி இருப்பது ஆரோனையும் அவன் புதல்வர்களையும் சேரும். ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைப் பாகமாகையால் அது மிகப் புனிதமானது.
4 நீ படைப்பது அடுப்பில் ஏற்றிச் சமைத்த போசனப் பலியானால், அது எண்ணெய் தெளிக்கப்பட்ட புளியாத அப்பங்களாகவும், எண்ணெய் பூசப்பட்ட புளியாத பணியாரங்களாகவும் இருக்க வேண்டும்.
5 நீ படைப்பது தட்டையான சட்டியில் பொரிக்கப்பட்ட போசனப் பலியானால், அது எண்ணெயில் பிசைந்த புளியாத மிருதுவான மாவாய் இருக்க வேண்டும்.
6 அதைத் துண்டு துண்டாகப் பிட்டு, அதன்மேல் எண்ணெயை வார்ப்பாய்.
7 ஆனால், நீ படைப்பது பொரிக்கும் சட்டியில் செய்யப்பட்ட போசனப் பலியானால், அதுவும் எண்ணெயில் பிசைந்ததாய் இருக்க வேண்டும்.
8 அதை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க வரும் போது குருவின் கையில் அதைக் கொடுத்து விடுவாய்.
9 அவர் அதை ஒப்புக்கொடுத்த பின், பலியிலிருந்து ஒரு பங்கைத் தமக்கு எடுத்துக் கொண்டு, பலிப்பீடத்தின் மீது ஆண்டவருக்கு நறுமணமாய் ( அதை ) எரிப்பார்.
10 மீதியானதெல்லாம் ஆரோனுக்கும் அவன் புதல்வர்க்கும் சொந்தமாகிவிடும். அது ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கையாகையால் அது மிகவும் புனிதமானது.
11 ஆண்டவருக்குப் படைக்கப்படுவதெல்லாம் புளியாத மாவினால் தயாரிக்கப்படுவதுமன்றி, புளித்த மாவுள்ளதொன்றையும் தேனுள்ளதொன்றையும் ஆண்டவருக்குத் தகனப் பலியாக எரிக்கக் கூடாது.
12 நீங்கள் அத்தகைய பொருட்களை முதற் பலன்களாகவும் சந்திப்புக்களாகவும் ஒப்புக் கொடுக்கலாம். ஆனால், அவற்றைப் பீடத்தின் மேல் நறுமணமாக வைக்கலாகாது
13 நீ ஒப்புக்கொடுக்கும் எந்தப் போசனப் பலியையும் உப்பினாலே சுவைப்படுத்தக் கடவாய். உன் கடவுளுடைய உடன்படிக்கையின் உப்பை உன் பலியினின்று நீக்காதே. நீ படைக்கும் எல்லாவற்றோடும் உப்பையும் படைக்கக்கடவாய்.
14 நீ உன் முதற் பலன்களில் இன்னும் பச்சையான கதிர்களைப் போசனப் பலியாக ஆண்டவருக்குச் செலுத்த வந்தாலோ, அவைகளை நெருப்பிலே வாட்டி வறுத்த பின் மாவாக அரைத்தே ஆண்டவருக்குச் செலுத்தக் கடவாய்.
15 அவை ஆண்டவருக்கான காணிக்கையாதலால், அவற்றின்மேல் எண்ணெயையும் வார்த்துத் தூப வகைகளையும் இடுவாய்.
16 குருவோ அதினின்று, அரைக்கப்பட்ட கோதுமையிலும் எண்ணெயிலும் ஒரு பாகத்தையும் தூபவகை எல்லாவற்றையும் நினைவுச் சின்னமாகச் சுட்டெரிப்பார்.
×

Alert

×