Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Joshua Chapters

Joshua 19 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Joshua Chapters

Joshua 19 Verses

1 இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது. அவனுடைய கோத்திரத்திற்கு அதன் வம்சங்களின்படி கிடைத்த காணியாட்சியாவது
2 யூதா புதல்வரது காணியாட்சியின் நடுவே அமைந்திருக்கும் பெற்சபே, சபே, மேலதா,
3 ஆஸர்சுவல், பாலா, ஆசம்
4 எல்தொலாத், பேத்துல், அற்மா, சிலெக்,
5 பெத்மார்க்சாபத், ஆஸர் சூசா,
6 பெத்லேபாவோத், சரோகன் என்ற பதின்மூன்று நகர்களும் அவற்றைச் சார்ந்த ஊர்களும்
7 ஆயின், ரெம்மோன், ஆத்தார், ஆசான் என்ற நான்கு நகர்களும் அவற்றையடுத்த ஊர்களும்
8 மேற்சொன்ன நகர்களைச் சுற்றிலும் தெற்கே இருக்கிற பாலாவாத்- பேவர்- இராமாத் வரையுள்ள எல்லாச் சிற்றூர்களும். இவை சிமியோன் புதல்வரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த காணியாட்சியாகும்.
9 யூதா புதல்வரின் பங்கு வீதம் அவர்களுக்கு மிகப் பெரியதாயிருந்ததால், மேற்சொன்ன நகர்களும் ஊர்களும் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப் பெற்றன. எனவே, சிமியோன் புதல்வர் யூதா புதல்வர் நடுவே காணியாட்சி பெற்றனர்.
10 மூன்றாம் சீட்டு சபுலோன் புதல்வருக்கு விழுந்தது. அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த பங்கு வீதத்தின் எல்லை சரீத் வரை நீண்டிருந்தது.
11 அது கடலும் மேரலாவும் தொடங்கித் தெபசேத்துக்குப் போய் ஜெக்கொனாவுக்கு எதிரே ஓடும் ஆறு வரை போகும்.
12 சாபேதிலிருந்து கிழக்கே கெசலேத்தாபோரின் எல்லை வரை திரும்பி, தாபரத்துக்குப் போய், ஜப்பேவுக்கு ஏறி,
13 அங்கிருந்து கெத்தப்பருக்கும் தக்கசீனுக்கும் கீழ்ப்புறத்தைக் கடந்து, ரெம்மோன், அம்தார், நோவா என்ற ஊர்களுக்குப் போய், அனத்தோனின் வடபக்கத்தைச் சுற்றிவந்து,
14 ஜெப்தாயேல் பள்ளத்தாக்கிலும்,
15 காத்தேதிலும் நவாலோலிலும் செமெரோனிலும் ஜெரலாவிலும் பெத்லேகேமிலும் முடியும். அப்பன்னிரு நகர்களும் அவற்றை அடுத்த ஊர்களும், சிற்றூர்களும்,
16 சபுலோன் புதல்வருக்கு அவர்கள் வம்சங்களின்படி சொந்தமாயின.
17 நான்காம் சீட்டு இசாக்காருக்கு அவன் வம்சங்களின்படி விழுந்தது.
18 அவர்களின் காணியாட்சியாவது: ஜெஸ்ராயேல்,
19 கசலோத், சூனம், அப்பராயீம், சேகோன்,
20 அனகரத், இராபோத், கேசியோன், ஆபேஸ்
21 இராமத், எங்கன்னிம், எங்கதா, பெத்பெசேஸ் முதலியன.
22 பிறகு, அவ்வெல்லை தாபோருக்கும் செகேசிமாவுக்கும் பெத்சமேசுக்கும் வந்து யோர்தானில் முடியும். அதற்குள் பதினாறு நகர்களும் அவற்றையடுத்த ஊர்களும் உண்டு.
23 இந்நகர்களும் இவற்றை அடுத்த சிற்றூர்களும் இசாக்கார் புதல்வருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த காணியாட்சியாகும்.
24 ஐந்தாம் சீட்டு ஆசேர் புதல்வரின் கோத்திரத்திற்கு அவரவர் வம்சங்களின்படி விழுந்தது.
25 அவர்களுக்குக் கிடைத்த எல்லையாவது:
26 அல்காத், காலீ, பேதன், அக்சப், எல்மலக், அமாத், மெசால் இவைகளே. பின்பு கடலருகே உள்ள கார்மேலுக்கும் சீகோருக்கும் லபனாத்துக்கும் சென்றது.
27 கிழக்கே பேத்தாகோனுக்குத் திரும்பி, வடக்கே சபுலோனுக்கும் ஜெப்தாயேலின் பள்ளத்தாக்குக்கும் போய், பெத்தெமெக்குக்கும், நேகியலுக்கும் வந்து,
28 காபுலின் இடப்புறத்திலேயும், அபிரானிலும் ரொகொபிலும் அமோனிலும் கானாவிலும் பெரிய சீதோனிலும் தொடங்கும்.
29 பிறகு அந்த எல்லை ஓர்மாவுக்குத் திரும்பி வந்து, அரண் சூழ்ந்த தீர்நகர், ஓசாநகர் வரையும் போகும். கடைசியில் அக்சிபா நாட்டில் அது கடலை அடையும்.
30 அதற்குள் அம்மா, ஆப்பேக், ரொகோப் முதலிய இருபத்திரண்டு நகர்களும் அவற்றையடுத்த ஊர்களும் அடங்கியிருந்தன.
31 இந்நகர்களும் இவற்றை அடுத்த ஊர்களும் ஆசேர் புதல்வரின் கோத்திரத்திற்கு அவரவர் வம்சங்களின்படி கிடைத்த காணியாட்சியாகும்.
32 ஆறாம் சீட்டு நெப்தலி புதல்வருக்கு விழுந்தது.
33 அவரவர் வம்சங்களின்படி, கிடைத்த எல்லைகளாவன: எலேப், சானானீமிலுள்ள எலோன், ஆதமி என்ற நேக்கேப், ஜெப்னாயேல் ஊர்கள் தொடங்கி லேக்கு வரை போய், யோர்தானில் வந்து முடியும்.
34 மேலும் அவ்வெல்லை ஆசனேத்தாபோர் நோக்கி மேற்கே திரும்பி, அங்கிருந்து உக்குக்காவுக்குச் சென்று, தெற்கே சபுலோனைக் கடந்து, மேற்கே ஆசேர் நடுவிலும், சூரியன் உதிக்கும் திசையில் யோர்தானின் பக்கத்தில் யூதா நடுவிலும் போகிறது.
35 அவர்களின் சிறந்த அரணுள்ள நகர்களாவன: அசேதிம், சேர்,
36 ஏமாத், ரெக்காத், கேனெரேத், எதெமா,
37 அரமா, அசோர், கேதெஸ், எதிராய், எனாசோர்,
38 ஜேரோன், மக்தலேல், ஓரேம், பெத்தனாத், பேத்சாமேஸ் என்ற பத்தொன்பது நகர்களும் அவற்றையடுத்த ஊர்களும்
39 மேற்சொன்ன நகர்களும் அவற்றையடுத்த சிற்றூர்களும் நெப்தலி கோத்திரத்துப் புதல்வர்களுக்கு அவரவர் வம்சங்களின்படி சொந்தமாகும்.
40 ஏழாம் சீட்டு தான் கோத்திரத்துப் புதல்வர்களுக்கு விழுந்தது. அவரவர் வம்சங்களின்படி,
41 கிடைத்த காணியாட்சியின் எல்லையாவது:
42 சாரா, எஸ்தாவோல், ஈர்சேமேஸ், அதாவது சூரியனின் நகர், செலபீன், ஐயலோன், ஜெத்தலா, ஏலோன், தெம்னா,
43 ஆக்கினேன், எல்தெக்கே, கெபெத்தோன்,
44 பலாத், யூத், பானே, பாரக்,
45 தெக்ரேமோன், மெஜார்க்கோன், அரேக்கோன்,
46 ஜொப்பனுக்கு எதிரான எல்லையுமே.
47 இந்த எல்லையோடு முடிந்தது. தானின் புதல்வர் எழுந்து புறப்பட்டுப் போய் லெசேம் நகருடன் போரிட்டு அதைக் கைப்பற்றினர். வாளினால் கொன்று குவித்து அதைச் சொந்தமாக்கி அதில் குடியேறினர். லெசேமுக்குத் தங்கள் மூதாதையின் பெயரைச் சேர்த்து லெசேம்தான் என்று பெயரிட்டு அழைத்தனர்.
48 இந்நகர்களும் இவற்றைச் சேர்ந்த சிற்றூர்களும் தான் புதல்வர் கோத்திரத்துக்கு அவரவர் வம்சங்களின்படி கிடைத்த காணியாட்சியாகும்.
49 திருவுளச் சீட்டின் மூலம் வம்ச வரிசைப்படி ஒவ்வொரு கோத்திரத்துக்கும் நாட்டை பங்கிட்டு கொடுத்த பின்பு, இஸ்ராயேல் மக்கள் நூனின் மகன் யோசுவாவுக்குத் தம் நடுவில் ஒரு சொந்தக் காணியைக் கொடுத்தனர்.
50 எபிராயீம் மலைநாட்டைச் சேர்ந்த தம்னாத் சாரா என்ற இடமே அவர் பெற்றது. யோசுவா அதைக் கேட்டிருந்தார். ஆண்டவருடைய கட்டளைப்படி மக்களும் அதை அவருக்குக் கொடுத்தனர். அவர் அங்கு ஒரு நகரைக்கட்டி அதில் குடியேறினார்.
51 குருவான எலெயசாரும் நூனின் மகன் யோசுவாவும் இஸ்ராயேல் மக்களின் வம்சத் தலைவர்களும் கோத்திரப் பெருமக்களும், சீலோவிலிருந்து சாட்சிப் பேழை வாயிலிலே ஆண்டவர் திருமுன் திருவுளச் சீட்டின் மூலம் இஸ்ராயேல் மக்களின் கோத்திரங்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுத்த காணியாட்சிகள் இவைகளே.

Joshua 19:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×