Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

John Chapters

John 6 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

John Chapters

John 6 Verses

1 இதன்பின், இயேசு கலிலேயாக் கடலின் அக்கரைக்குச் சென்றார். - அதற்குத் திபெரியாக் கடல் என்றும் பெயர்.
2 அவர் பிணியாளிகளுக்குச் செய்துவந்த அருங்குறிகளைக் கண்டதனால், பெருங்கூட்டம் அவரைப் பின்தொடர்ந்தது.
3 இயேசு மலைமேல் ஏறி, அங்குத்தம் சீடர்களோடு அமர்ந்தார்.
4 யூதர்களின் திருவிழாவாகிய பாஸ்கா அண்மையிலிருந்தது.
5 இயேசு ஏறெடுத்துப்பார்த்து, பெருங்கூட்டம் ஒன்று தம்மிடம் வருவதைக் கண்டு, "இவர்கள் எல்லாருக்கும் உணவளிப்பதற்கு எங்கிருந்து அப்பம் வாங்குவது ?" என்று பிலிப்புவைக் கேட்டார்.
6 தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிக்கவே இவ்வாறு கேட்டார்.
7 அதற்குப் பிலிப்பு, "இருநூறு வெள்ளிக்காசுக்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கொரு சிறு துண்டுகூட வராதே" என்றார்.
8 அவருடைய சீடருள் ஒருவரும், சீமோன் இராயப்பருடைய சகோதரருமான பெலவேந்திரர்,
9 "இங்கே ஒரு பையனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பமும் இரண்டு மீனும் உள்ளன. ஆனால், இத்தனை பேருக்கு இது எப்படி போதும் ?" என்று சொன்னார்.
10 இயேசுவோ, "மக்களைப் பந்தியமர்த்துங்கள்" என்றார். அங்கே நல்ல புல்தரை இருந்தது. எல்லாரும் அமர்ந்தனர். அவர்களுள் ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.
11 இயேசு அப்பங்களை எடுத்து, நன்றிகூறி, பந்தியமர்ந்தவர்களுக்குப் பகிர்ந்தளித்தார். அவ்வாறே மீன்களையும் கொடுத்தார். வேண்டியமட்டும் வாங்கியுண்டார்கள்.
12 அவர்கள் வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி மீதியான துண்டுகளைச் சேர்த்துவையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார்.
13 அவர்களும் அவ்வாறே சேர்த்து, மக்கள் எல்லாரும் உண்டபின், ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினர்.
14 இயேசு செய்த இந்த அருங்குறியைக் கண்டு, மக்கள், "உலகிற்கு வரப்போகும் இறைவாக்கினர் உண்மையிலே இவர்தாம்" என்றார்கள்.
15 ஆகவே, அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டுபோய், அரசனாக்க விரும்புகின்றனர் என்பதை அறிந்து, இயேசு அவர்களை விட்டு விலகித் தனியாக மீண்டும் மலைக்குச் சென்றார்.
16 இரவானதும் அவருடைய சீடர் கடலுக்கு வந்து, படகு ஏறி, அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்குப் புறப்பட்டனர்.
17 ஏற்கெனவே இருண்டிருந்தது. இயேசுவோ இன்னும் அவர்களிடம் வந்துசேரவில்லை.
18 புயற்காற்றெழுந்தது; கடல் பொங்கிற்று.
19 அவர்கள் ஏறக்குறைய மூன்று நான்கு கல் தொலைவு படகு ஓட்டியபின், இயேசு கடல்மேல் நடந்து படகுக்கருகில் வருவதைக் கண்டு அஞ்சினர்.
20 அவரோ, "நான்தான், அஞ்சாதீர்கள்" என்று அவர்களுக்குச் சொன்னார்.
21 அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினர். ஆனால் படகு அதற்குள் அவர்கள் சேரவேண்டிய கரை போய்ச் சேர்ந்தது.
22 பின்தங்கியிருந்த மக்கள் மறுநாளும் கடலின் அக்கரையிலேயே இருந்தனர். முந்தின நாள் அங்கே ஒரு படகுதான் இருந்தது என்பதும், அதில் சீடர் மட்டும் போனார்களேயன்றி, இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதும் அவர்கள் நினைவுக்கு வந்தது.
23 ஆண்டவர் நன்றிகூறித் தந்த அப்பத்தை உண்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து வேறு படகுகள் இதற்குள் வந்து சேர்ந்தன.
24 இயேசுவும் அவருடைய சீடர்களும் அங்கு இல்லாததைக் கண்டு, மக்கள் அப்படகுகளில் ஏறிக் கப்பர்நகூமுக்கு அவரைத் தேடிவந்தார்கள்.
25 கடலின் இக்கரையில் அவரைப் பார்த்து, "ராபி, எப்பொழுது இங்கு வந்தீர் ?" என்று கேட்டனர்.
26 இயேசு மறுமொழியாக: "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் என்னைத் தேடுவது அருங்குறிகளைக் கண்டதாலன்று, அப்பங்களை வயிறார உண்டதால்தான்.
27 அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்; முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள். அதை மனுமகன் உங்களுக்குக் கொடுப்பார்; ஏனெனில், அவருக்கே தந்தையாகிய கடவுள் தம் அதிகாரத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்" என்றார்.
28 அவர்கள் அவரை நோக்கி, "கடவுளுக்கேற்ற செயல்களைச் செய்ய நாங்கள் என்ன செய்யவேண்டும் ?" என,
29 இயேசு, "அவர் அனுப்பியவரை விசுவசிப்பதே கடவுளுக்கேற்ற செயல்" என்றார்.
30 அவர்கள், "உம்மை நாங்கள் விசுவிசிக்க ஓர் அருங்குறி பார்க்கவேண்டும்; என்ன அருங்குறி செய்வீர் ? என்ன செயல் ஆற்றுவீர் ?
31 ' அவர்கள் உண்பதற்கு வானத்திலிருந்து உணவு அருளினார் ' என்று எழுதியுள்ளதற்கேற்ப எங்கள் முன்னோர் பாலைவனத்தில் மன்னாவை உண்டனரே" என்று கேட்டனர்.
32 இயேசு அவர்களை நோக்கி, "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: வானத்திலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோயீசன் அல்லர்; வானத்திலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.
33 ஏனெனில், வானினின்று இறங்கி வந்து உலகிற்கு உயிர் அளிப்பவரே கடவுள் தரும் உணவு" என்றார்.
34 அவர்களோ, "ஆண்டவரே, இவ்வுணவை எப்பொழுதும் எங்களுக்குத் தாரும்" என்றனர்.
35 அதற்கு இயேசு கூறினார்: "நானே உயிர் தரும் உணவு. என்னிடம் வருகிறவனுக்குப் பசியே இராது; என்னில் விசுவாசங்கொள்பவனுக்கு என்றுமே தாகம் இராது.
36 ஆனால், நான் உங்களுக்குச் சொன்னதுபோல, நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவசிப்பதாயில்லை.
37 தந்தை எனக்குத் தருவதெல்லாம் என்னிடம் வந்துசேரும். என்னிடம் வருபவனையோ நான் தள்ளிவிட்டேன்.
38 ஏனெனில், என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன்.
39 என்னை அனுப்பினவருடைய விருப்பமோ: அவர் எனக்குத் தந்ததில் எதையும் நான் அழியவிடாமல், கடைசி நாளில் உயிர்ப்பிக்க வேண்டுமென்பதே.
40 ஆம், என் தந்தையின் விருப்பம் இதுவே: மகனைக் கண்டு, அவரில் விசுவாசம் கொள்பவன் எவனும் முடிவில்லா வாழ்வு பெறவேண்டும்; நானும் அவனைக் கடைசி நாளில் உயிர்ப்பிப்பேன்."
41 "வானினின்று இறங்கிவந்த உணவு நானே" என்று அவர் சொன்னதால் யூதர்கள் முணுமுணுத்து,
42 "சூசையின் மகனாகிய இயேசு அன்றோ இவன் ? இவனுடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியுமே! ' நான் வானினின்று இறங்கி வந்தேன் ' என்று இவன் சொல்வதெப்படி ?" என்றார்கள்.
43 அதற்கு இயேசு கூறியது: "உங்களுக்குள்ளே முணுமுணுக்கவேண்டாம்.
44 "என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவனும் என்னிடம் வர இயலாது; நானும் அவனைக் கடைசி நாளில் உயிர்ப்பிப்பேன்.
45 ' கடவுளிடமிருந்தே அவர்கள் எல்லாரும் கற்றுக்கொள்வர் ' என்று இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது; தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட எவனும் என்னிடம் வருகிறான்.
46 தந்தையை யாரேனும் நேரடியாகக் கண்டார் என்றல்ல, கடவுளிடமிருந்து வந்தவர் தவிர வேறு ஒருவரும் கண்டதில்லை. இவர் ஒருவரே தந்தையைக் கண்டுள்ளார்.
47 உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: விசுவசிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்.
48 நானே உயிர் தரும் உணவு.
49 பாலைவனத்தில் உங்கள் முன்னோர் மன்னாவை உண்டனர்; ஆயினும் இறந்தனர்.
50 ஆனால், நான் குறிப்பிடும் உணவை உண்பவன் சாகான். இதற்காகவே இவ்வுணவு வானினின்று இறங்கியது.
51 நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு. இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான். நான் அளிக்கும் உணவு உலகம் உய்வதற்காகப் பலியாகும் என் தசையே."
52 "நாம் உண்பதற்கு இவன் தன் தசையை எவ்வாறு அளிக்கக்கூடும் ?" என்று யூதர் தமக்குள் வாக்குவாதம் செய்துகொண்டிருக்க,
53 இயேசு அவர்களை நோக்கிச் சொன்னார்: "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுமகனின் தசையை உண்டு, அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய உங்களுக்குள் உயிர் இராது.
54 என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான். நானும் அவனைக் கடைசி நாளில் உயிர்ப்பிப்பேன்.
55 என் தசை மெய்யான உணவு, என் இரத்தம் மெய்யான பானம்.
56 என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் என்னில் நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்.
57 உயிருள்ள தந்தை என்னை அனுப்பினார், நானும் அவரால் வாழ்கின்றேன். அதுபோல் என்னைத் தின்பவனும் என்னால் வாழ்வான்.
58 வானினின்று இறங்கிவந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவுபோல் அன்று: அவர்களோ இறந்தார்கள்; இவ்வுணவைத் தின்பவனோ என்றுமே வாழ்வான்."
59 கப்பர்நகூமிலுள்ள செபக்கூடத்தில் போதிக்கையில் இதையெல்லாம் சொன்னார்.
60 அவருடைய சீடருள் பலர் இதைக் கேட்டு, "இந்தப் பேச்சு மிதமிஞ்சிப்போகிறது, யார் இதைக் கேட்பார் ?" என்றனர்.
61 இதைப்பற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்துகொண்டு, "இது உங்களுக்கு இடறலாக உள்ளதோ ?
62 இதற்கே இப்படியென்றால், மனுமகன் முன்னர் இருந்த இடத்திற்கு ஏறிச்செல்வதை நீங்கள் கண்டால் என்ன சொல்வீர்களோ!
63 "உயிர் அளிப்பது ஆவியே, ஊனுடல் ஒன்றுக்கும் உதவாது. நான் சொன்ன சொற்கள் உங்களுக்கு ஆவியும் உயிருமாகும்.
64 "ஆனால், விசுவசியாதவர் சிலர் உங்களிடையே இருக்கின்றனர்" என்று அவர்களுக்குச் சொன்னார். ஏனெனில், விசுவசியாதவர் யார், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் யார் என்று இயேசு தொடக்கத்திலிருந்தே அறிந்திருந்தார்.
65 மேலும், " 'என் தந்தை அருள்கூர்ந்தாலொழிய எவனும் என்னிடம் வர இயலாது' என இதன்பொருட்டே நான் உங்களுக்குச் சொன்னேன் " என்றார்.
66 அன்றே அவருடைய சீடருள் பலர் அவரை விட்டுப் பிரிந்தனர். அதுமுதல் அவர்கள் அவரோடு சேரவில்லை.
67 இயேசு பன்னிருவரை நோக்கி, "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா ?" என்றார்.
68 அதற்குச் சீமோன் இராயப்பர், "ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம் ? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
69 நீரே கடவுளின் பரிசுத்தர்; இதை நாங்கள் விசுவசிக்கிறோம்; இதை நாங்கள் அறிவோம்" என்று மறுமொழி கூறினார்.
70 இயேசு அவர்களை நோக்கி, "பன்னிருவராகிய உங்களை நான் தேர்ந்துகொண்டேன் அன்றோ ? ஆயினும், உங்களுள் ஒருவன் பேயாய் இருக்கிறான்" என்றார்.
71 அவர் இதைச் சொன்னது சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசைப்பற்றியே. ஏனெனில், பன்னிருவருள் ஒருவனாகிய அவன் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தான்.

John 6:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×