Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

John Chapters

John 11 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

John Chapters

John 11 Verses

1 லாசர் என்னும் ஒருவன் பிணியுற்றிருந்தான். அவன் பெத்தானியா ஊரினன். அதுவே மரியாள், அவளுடைய சகோதரி மார்த்தாள் இவர்களுடைய ஊர். -
2 இந்த மரியாள்தான், முன்னொருநாள் ஆண்டவருக்குப் பரிமளத்தைலம் பூசி, அவருடைய பாதங்களைக் கூந்தலால் துடைத்தவள். பிணியுற்றிருந்த லாசர் அவளுடைய சகோதரன். -
3 அவனுடைய சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, "ஆண்டவரே, இதோ! நீர் நேசிக்கிறவன் பிணியுற்றுள்ளான்" என்று தெரிவித்தார்கள்.
4 இயேசு இதைக் கேட்டு, "இப்பிணி சாவில்வந்து முடியாது, கடவுளின் மகிமைக்காகவே இப்படி ஆயிற்று; இதனால் கடவுளுடைய மகன் மகிமை பெற வேண்டியிருக்கிறது" என்றார்.
5 மார்த்தாள், அவளுடைய சகோதரி மரியாள், லாசர் இவர்களிடம் இயேசு அன்பு கொண்டிருந்தார்.
6 அவன் பிணியுற்றிருந்த செய்தியைக் கேட்ட பின்பு, அவர் அங்கேயே இரண்டு நாள் தங்கிவிட்டார்.
7 அந்த இரண்டு நாள் கழித்துத் தம் சீடரிடம், "மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்" என்றார்.
8 அவருடைய சீடர், "ராபி, இப்போதுதான் யூதர்கள் உம்மைக் கல்லால் எறியப்பார்த்தார்களே; நீர் மீண்டும் அங்குப் போகிறீரா ?" என,
9 இயேசு மறுமொழியாகக் கூறினார்: "பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் உண்டன்றோ ? பகலில் நடப்பவன் இடறி விழுவதில்லை; ஏனெனில், அவன் இவ்வுலகின் ஒளியைக் காண்கிறான்.
10 இரவில் நடப்பவனோ இடறி விழுகிறான்; ஏனெனில், அவனிடம் ஒளியில்லை."
11 இதைக் கூறியபின் அவர் அவர்களிடம், "நம் நண்பன் லாசர் தூங்குகிறான், அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பச் செல்லுகிறேன்." என்றார்.
12 அவருடைய சீடரோ, "ஆண்டவரே, தூங்கினால் நலம் அடைவான்" என்றனர்.
13 இயேசு குறிப்பிட்டது அவனுடைய சாவையே. அவர்களோ வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக நினைத்தார்கள்.
14 அப்போது இயேசு, "லாசர் இறந்துவிட்டான்.
15 உங்களுக்கு விசுவாசம் உண்டாகும் என உங்கள்பொருட்டு, நான் அங்கு இல்லாமற்போனதுபற்றி மகிழ்கிறேன். வாருங்கள், அவனிடம் செல்வோம்" என்று தெளிவாகச் சொன்னார்.
16 திதிமு என்னும் தோமையார் உடன்சீடரிடம், "நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்" என்றார்.
17 இயேசு அங்கு வந்தபொழுது, லாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது.
18 பெத்தானியா யெருசலேமுக்கு அருகில் உள்ளது. இரு ஊருக்கும் ஏறக்குறைய இரண்டு கல் தொலை.
19 சகோதரன் இறந்ததற்காக மார்த்தாள், மரியாள் இவர்களுக்கு ஆறுதல் அளிக்க யூதர் பலர் வந்திருந்தனர்.
20 இயேசு வந்திருப்பதைக் கேள்வியுற்றதும் மார்த்தாள் அவரை எதிர்கொண்டு போனாள்.
21 மரியாளோ வீட்டிலேயே இருந்தாள். மார்த்தாள் இயேசுவிடம், "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்.
22 இப்பொழுதுகூட நீர் கடவுளிடமிருந்து கேட்பதெல்லாம் அவர் உமக்கு அருள்வார் என்று எனக்குத் தெரியும்" என்றாள்.
23 இயேசு அவளை நோக்கி, "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்" என்றார்.
24 அதற்கு மார்த்தாள், "இறுதிநாளில் எல்லாரும் உயிர்த்தெழும்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்" என்றாள்.
25 அவளிடம் இயேசு, "உயிர்ப்பும் உயிரும் நானே. என்னில் விசுவாசங்கொள்பவன் இறப்பினும் வாழ்வான்.
26 உயிர் வாழ்கையில் என்னில் விசுவாசம் கொள்பவன் என்னும் ஒருபோதும் சாகான். இதை விசுவசிக்கிறாயா ?" என்று கேட்டார்.
27 அவளோ, "ஆம் ஆண்டவரே, நீர் மெசியா; இவ்வுலகிற்கு வரும் கடவுளின் மகன் நீர்தான் என்று நான் விசுவசிக்கிறேன்" என்றாள்.
28 இப்படிச் சொன்னபின் மார்த்தாள் தன் சகோதரி மரியாளை அழைக்கச் சென்றாள். அவளிடம் வந்து, "போதகர் வந்துவிட்டார். உன்னை அழைக்கிறார்" என்று காதோடு காதாய்ச் சொன்னாள்.
29 அதைக் கேட்டதும் மரியாள் விரைந்தெழுந்து அவரிடம் போனாள்.
30 இயேசு ஊருக்குள் இன்னும் வரவில்லை. தம்மை மார்த்தாள் எதிர்கொண்ட இடத்திலேயே இருந்தார்.
31 மரியாளின் வீட்டில் அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர், அவள் விரைந்தெழுந்து வெளியே சென்றதைக் கண்டு, அழுவதற்குத்தான் கல்லறைக்குச் செல்லுகிறாள் என்றெண்ணி அவளோடு போனார்கள்.
32 இயேசு இருந்த இடத்திற்கு மரியாள் வந்ததும், அவரைக் கண்டு காலில் விழுந்து, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்" என்றாள்.
33 மரியாள் அழுவதையும், அவளோடு வந்த யூதர் அழுவதையும் இயேசு கண்டபொழுது,
34 மனம் குமுறிக் கலங்கி, "அவனை எங்கே வைத்தீர்கள் ?" என்று கேட்க, "ஆண்டவரே, வந்து பாரும்" என்றார்கள்.
35 அப்போது இயேசு கண்ணீர் விட்டார்.
36 அதைக் கண்ட யூதர்கள், "அவன்மேல் இவருக்கு எவ்வளவு நேசம், பாருங்கள்!" என்றனர்.
37 அவர்களுள் சிலர், "குருடனுக்குப் பார்வையளித்த இவர், இவன் சாகாமலிருக்கச் செய்ய முடியவில்லையா ?" என்றனர்.
38 இயேசு மீண்டும் மனம் குமுறியவராய்க் கல்லறைக்குச் சென்றார். அது ஒரு குகை; அதைக் கல் ஒன்று மூடியிருந்தது.
39 "கல்லை எடுத்து விடுங்கள்" என்றார் இயேசு. செத்தவனுடைய சகோதரி மார்த்தாள் அவரை நோக்கி, "ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே! " என்றாள்.
40 அதற்கு இயேசு, "உனக்கு விசுவாசம் இருந்தால், கடவுளின் மகிமையைக் காண்பாய் என்று நான் சொல்லவில்லையா ?" என்றார்.
41 அப்பொழுது கல்லை அப்புறப்படுத்தினர். இயேசு கண்களை ஏறெடுத்து, "தந்தாய், நீர் எனக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
42 நீர் என்றும் எனக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். ஆனால், சூழ்ந்து நிற்கும் கூட்டத்தின் பொருட்டே நான் இப்படிச் சொல்கிறேன். நீரே என்னை அனுப்பினீர் என்று இவர்கள் விசுவசிக்கவே இப்படிச் சொல்கிறேன்" என்றார்.
43 இதைச் சொன்னபின், உரத்த குரலில், "லாசரே, வெளியே வா" என்றார்.
44 என்றதும் இறந்தவன் வெளியே வந்தான். அவனுடைய கை கால்கள் துணியால் சுற்றிக் கட்டுண்டிருந்தன. அப்போது இயேசு, "கட்டவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்" என்றார்.
45 மரியாளிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரில் விசுவாசங்கொண்டனர்.
46 சிலரோ பரிசேயர்களிடம் சென்று இயேசு செய்ததெல்லாம் அறிவித்தனர்.
47 தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, "இந்த ஆள் பல அருங்குறிகளைச் செய்கிறானே, என்ன செய்யலாம் ?
48 இவனை இப்படியே விட்டுவிட்டால் எல்லாரும் இவனில் விசுவாசம்கொள்வர். உரோமையர் வந்து நம் புனித இடத்தையும் நம் இனத்தையும் அழித்துவிடுவார்களே" என்றனர்.
49 அவ்வாண்டின் தலைமைக்குருவாயிருந்த கைப்பாஸ், சங்கத்தில் எழுந்து மற்றவர்களை நோக்கி, "உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை.
50 நம் இனம் முழுவதுமே அழிந்துபோகாதபடி ஒருவன் மட்டும் மக்களுக்காக இறப்பது நலம் என்பதை நீங்கள் உணரவில்லையே" என்றார்.
51 இதை அவர் தாமாகச் சொல்லவில்லை. அவ்வாண்டின் தலைமைக் குருவாயிருந்தபடியால், இயேசு தம் இனத்தினருக்காக இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டு இறைவாக்காகக் கூறினார்.
52 உள்ளபடி அவர் இறப்பது தம் இனத்தினருக்காக மட்டுமன்று. சிதறிக் கிடந்த கடவுளின் மக்களை ஒன்றாய்ச் சேர்ப்பதற்காகவுமே.
53 அவரைக் கொல்ல அன்றே முடிவுசெய்தனர்.
54 அதுமுதல் இயேசு யூதர்களிடையே வெளிப்படையாக நடமாடவில்லை. பாலைவனத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குப் போய், எப்பிராயீம் என்ற ஊரில் தம் சீடருடன் தங்கியிருந்தார்.
55 யூதர்களுடைய பாஸ்கா விழா அண்மையிலிருந்தது. பாஸ்காவுக்கு முன்னே, பலர் துப்புரவுச் சடங்கு செய்வதற்காக நாட்டுப் புறங்களிலிருந்து யெருசலேமுக்குப் போனார்கள்.
56 அங்கே இயேசுவைத் தேடினார்கள். "அவர் திருவிழாவுக்கு வருவாரா ? வரமாட்டாரா ? என்ன நினைக்கிறீர்கள் ?" என்று கோயிலில் கூடிவந்தவர்களிடையே பேச்சு நடந்தது.
57 தலைமைக் குருக்குளும் பரிசேயரும் அவரைப் பிடிக்கவிரும்பி, அவர் இருக்குமிடம் யாருக்காவது தெரிந்தால், தங்களிடம் வந்து அறிவிக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தனர்.

John 11:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×