Indian Language Bible Word Collections
Job 8:14
Job Chapters
Job 8 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Books
Old Testament
New Testament
Job Chapters
Job 8 Verses
1
|
அதற்குச் சுகீத்தனான பால்தாத் சொன்ன மறுமொழி பின்வருமாறு: |
2
|
எவ்வளவு நேரம் நீர் இவ்வாறு பேசுவீர்? உமது வாயிலிருந்து வரும் சொற்கள் கடும் புயல் போலிருக்கின்றனவே! |
3
|
கடவுள் நீதியைப் புரட்டுகிறாரோ? எல்லாம் வல்லவர் நேர்மையானதைப் புரட்டுவாரோ? |
4
|
உம் புதல்வர்கள் அவருக்கெதிராய்ப் பாவஞ் செய்திருப்பின், அவர்கள் பாவங்களுக்குரிய தண்டனையைப் பெற்றுவிட்டார்கள்; |
5
|
ஆனால் நீர் கடவுளைத் தேடி, எல்லாம் வல்லவரைப் பார்த்து மன்றாடினால், |
6
|
நீர் தூய்மையும் நேர்மையும் உள்ளவராய் இருந்தால், உமக்காக அவர் விழித்தெழுந்து வந்து நீதிமானுக்குரிய வீடு வாசல்களை உமக்குத் திருப்பித் தருவார். |
7
|
உமது தொடக்க நிலை மிக அற்பமானதாயினும் உம் பின்னைய நாட்கள் மிகப் பெருமை உடையனவாயிருக்கும். |
8
|
முந்தின தலைமுறையினரை நீர் விசாரித்துப் பாரும், அவர்கள் தந்தையர் கண்டறிந்ததைச் சிந்தியும். |
9
|
ஏனெனில் நாமோ நேற்றுப் பிறந்தவர்கள், நமக்கு ஒன்றுமே தெரியாது, உலகில் நாம் வாழும் நாட்கள் வெறும் நிழலே. |
10
|
ஆனால் அவர்கள் உமக்குக் கற்பிப்பார்கள், சொல்லுவார்கள், உள்ளத்திலிருந்து அவர்கள் சொல்லும் வார்த்தைகள் இவையே: |
11
|
ஈரமின்றி நாணல் வளர இயலுமோ? நீரின்றிக் கோரை ஓங்கி வளருமோ? |
12
|
அறுக்கப்படாமல் இன்னும் பூவோடு இருக்கும் போதே மற்றப் புற்களினும் விரைவில் அது வாடிப் போகிறது. |
13
|
கடவுளை மறக்கிற அனைவரின் நெறிகளும் அத்தகையனவே. கடவுள் பற்றில்லாதவனின் நம்பிக்கை அழிந்து போகும். |
14
|
அவனுடைய நம்பிக்கை வெறும் நூல் போன்றது, அவனுடைய உறுதி சிலந்திப் பூச்சியின் நூலுக்கு நிகர். |
15
|
தன் வீட்டின் மேல் அவன் சாய்ந்து கொள்ளுகிறான், அது உறுதியாய் நிற்பதில்லை; அதைப் பற்றிக் கொள்ளுகிறான், அதுவோ நிலைக்கிறதில்லை. |
16
|
கதிரவன் எரிக்கும் போதும் அவன் தளிர்க்கிறான், அவன் தளிர்கள் தோட்டமெங்கும் பரவுகின்றன. |
17
|
அவன் வேர்கள் கற்குவியலில் பின்னலிட்டு இறங்குகின்றன, பாறைகளின் நடுவில் அவன் வாழ்கிறான். |
18
|
அவனுக்குரிய இடத்தினின்று அவன் அழிக்கப்பட்டால், அவ்விடம், 'உன்னை நான் பார்த்ததே இல்லை' எனச்சொல்லி மறுக்கும். |
19
|
அவனோ வழியில் அழுகிக் கிடக்கிறான், நிலத்திலிருந்து மற்றவர்கள் முளைக்கிறார்கள். |
20
|
ஆனால் மாசற்றவனைக் கடவுள் தள்ளிவிடுகிறதில்லை, கொடியவர்களுக்குக் கைகொடுத்து உதவுகிறதில்லை. |
21
|
மீண்டும் உம் வாயில் சிரிப்பும், உம் உதடுகளில் மகிழ்ச்சியொலியும் நிறைந்திடச் செய்வார். |
22
|
உம்மைப் பகைப்பவர்கள் அப்போது வெட்கத்தால் மூடப்படுவர். கொடியவர்களின் கூடாரம் இல்லாமல் அழியும்." |