1
|
பெண் வயிற்றில் பிறந்த மனிதன் சில நாட்களே வாழ்கிறான், அவையும் தொல்லை நிறைந்த நாட்களாய் இருக்கின்றன. |
2
|
அவன் பூவைப் போல் பூத்து வாடிப் போகிறான், நிலையாமல் நிழலைப் போல் ஓடி மறைகிறான். |
3
|
இப்படிப்பட்டவன் மேல் உம் கண்களைத் திருப்பி, உம்மோடு வழக்காடக் கொண்டு வருகிறீரோ? |
4
|
அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைக் கொண்டுவர யாரால் முடியும்? எவனாலும் முடியாது. |
5
|
மனிதனுக்குரிய நாட்களோ மிகச் சில; அவன் மாதங்களின் கணக்கும் உம்மிடமே உள்ளது; கடந்து போகாமல் அவனுக்கு எல்லைகளும் குறித்தீர். |
6
|
கூலியாள் நாள் முடிவில் மகிழ்வது போல் அவனும் மகிழும்படி உமது பார்வையை அவனிடமிருந்து அகற்றியருளும். |
7
|
மரத்தைப் பொருத்த மட்டில் எப்பொழுதும் நம்பிக்கையுண்டு; அது வெட்டுண்டால் மறுபடியும் தளிர்க்கும்; அதனுடைய தளிர்கள் தொடர்ந்து கிளைக்கும். |
8
|
மரத்தின் வேர்கள் நிலத்தில் பழையதாக ஆயினும், அதன் அடித்தண்டு மண்ணில் அழுகிப் போனாலும், |
9
|
மழை வாசனை அடித்ததும் அது தளிர்விடும்; இளமரம் போலவே கிளைகளை விடும். |
10
|
ஆனால் மனிதன் செத்தால் அப்படியே கிடக்கிறான்; கடைசி மூச்சுக்குப் பின் அவன் எங்கே? கடல் தண்ணீர் வடிந்து போகலாம், |
11
|
ஆறுகளெல்லாம் வறண்டு வற்றிப்போகலாம், |
12
|
ஆனால் மனிதன் துஞ்சினால், மறுபடி எழுகிறதில்லை; வானம் தேய்ந்து போனாலும் அவன் விழிக்க மாட்டான், அவனது உறக்கத்திலிருந்து எழமாட்டான். |
13
|
பாதாளத்தில் என்னை மறைக்கமாட்டீரா! உம் சினம் தணியும் வரை என்னை ஒளிக்கமாட்டீரா! குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகாவது என்னை நினைக்கமாட்டீரா! |
14
|
அவ்வரம் கிடைக்குமாயின்- ஆனால் செத்தவன் எங்கே மறுபடி உயிர் பெறுவான்? எனக்கு விடுதலை எப்பொழுது வருமோவென்று என் போராட்ட நாட்களிலெல்லாம் நான் காத்திருப்பேன். |
15
|
அப்போது, நீர் என்னைக் கூப்பிடுவீர், நான் பதில் கொடுப்பேன்; உம் கைகளின் படைப்பாகிய என்னை நீர் காணவிழைவீர். |
16
|
என்னுடைய காலடிகளை இப்போது கணக்குப் பார்க்கின்ற நீர், இனி என் பாவங்களை வேவு பார்க்கமாட்டீர். |
17
|
என் மீறுதலைப் பையிலிட்டுக் கட்டி முத்திரை போடுவீர், என் அக்கிரமத்தை மூடி மறைப்பீர். |
18
|
ஆனால், மலை விழுந்து தவிடு பொடியாகிறது, பாறை தன் இடத்தை விட்டுப் பெயர்கிறது. |
19
|
நீரோட்டம் கற்களைத் தேய்த்து விடுகிறது, வெள்ளப் பெருக்கு நிலத்து மண்ணை அடித்துச் செல்கிறது; அவ்வாறே மனிதனின் நம்பிக்கையை நீர் அழித்து விடுகிறீர். |
20
|
என்றென்றைக்கும் நீரே அவனை மேற்கொள்ளுகிறீர், அவனோ கடந்து போகிறான்; நீர் அவன் தோற்றத்தைக் கெடுத்து விரட்டி விடுகிறீர். |
21
|
அவன் மக்கள் உயர்வடைந்தாலும் அவன் அறியான்; அவர்கள் தாழ்வுற்றாலும் அவனுக்குத் தெரியவராது. |
22
|
தன் சொந்த உடலின் நோவையே அவன் உணருகிறான், தனக்காக மட்டுமே அவன் புலம்பி அழுகிறான்." |
Job 14:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...