Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Isaiah Chapters

Isaiah 11 Verses

1 யெஸ்ஸேயின் தண்டிலிருந்து ஒரு தளிர் கிளம்பும், அவன் வேரிலிருந்து ஒரு கிளை தோன்றும்:
2 ஆண்டவருடைய ஆவி அவர்மேல் தங்கும், ஞானமும் மெய்யுணர்வும் தரும் ஆவி, ஆலோசனையும் வல்லமையும் தரும் ஆவி, அறிவும் ஆண்டவரைப் பற்றிய அச்சமும் தரும் ஆவி, இந்த ஆவி அவர் மேல் தங்கும்.
3 ஆண்டவருக்கு அஞ்சுவதில் அவர் மகிழ்ந்திருப்பார். அவர் தம் கண்ணால் கண்டதைக் கொண்டு மட்டும் தீர்ப்பிடமாட்டார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் தீர்ப்புச் செய்ய மாட்டார்.
4 ஆனால், நீதி பிறழாமல் எளியோரைத் தீர்ப்பிடுவார், நாட்டின் ஏழைகளுக்கு நடுவு நிலையோடு தீர்ப்புச் சொல்வார், தமது வாய் மொழியால் உலகத்தைச் சாடுவார், தமது மூச்சினால் தீயோரை அழிப்பார்.
5 நீதி அவருக்கு அரைக் கச்சை, உண்மை அவருக்கு இடைக் கச்சை.
6 அந்நாளில், செம்மறியோடு ஓநாய் தங்கியிருக்கும், வெள்ளாட்டுக் குட்டியோடு சிறுத்தைப் புலி படுத்துறங்கும், கன்றும் சிங்கமும் ஒன்றாய் மேயும், சிறு பிள்ளை ஒன்று அவற்றை நடத்தும்.
7 பசுவும் கரடியும் கூடி மேயும், பசுவின் கன்றும் கரடிக் குட்டியும் ஒன்றாய் இளைப்பாறும், சிங்கமும் எருதைப் போல வைக்கோல் தின்னும்.
8 பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டு விரியன் வளையில் தன் கையை விடும்;
9 நம் பரிசுத்த மலையெங்கும் தீங்கு செய்வதோ, கேடு விளைவிப்பதோ யாதுமிராது; ஏனெனில் தண்ணீர் கடலை நிரப்பியிருப்பது போல், ஆண்டவரைப் பற்றிய அறிவு நாட்டை நிரப்பும்.
10 அந்நாளில், யெஸ்ஸேயின் தளிர் மக்களினங்களுக்கொரு விருதுக்கொடியாய் விளங்கும்; புறவினத்தாரெல்லாம் அவரைத் தேடிச் செல்வர், அவருடைய இருப்பிடம் மகிமையுள்ளதாய் இருக்கும்.
11 அந்நாளில் ஆண்டவர் இரண்டாம் முறையாகத் தம் கையை நீட்டுவார்; நீட்டி அசீரியாவிலிருந்தும் எகிப்திலிருந்தும் பாத்துரோசிலிருந்தும், எத்தியோப்பியாவிலிருந்தும் ஏலாமிலிருந்தும் சென்னாரிலிருந்தும், ஏமாத்திலிருந்தும் கடலிலுள்ள தீவுகளிலிருந்தும் தம் மக்களுள் எஞ்சியிருப்போரை மீட்டுக் கொள்வர்.
12 மக்களினங்களுக்கு ஒரு கொடியை ஏற்றுவார், இஸ்ராயேலில் வெளியேற்றப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பார்; யூதாவிலிருந்து சிதறுண்டு போனவர்களை உலகின் நான்கு மூலைகளினின்றும் ஒன்று கூட்டுவார்.
13 எப்பிராயீமின் பொறாமை அகன்றுபோகும், யூதாவுக்குத் துன்பம் விளைப்போர் அழிவுறுவர்; எப்பிராயீம் யூதாவின் மேல் அழுக்காறு கொள்ளாது, யூதாவும் எப்பிராயீமுக்குத் துன்பம் தராது.
14 ஆனால் மேற்கிலுள்ள பிலிஸ்தியர் மேல் இருவரும் பாய்வர், கீழ்த்திசை நாட்டினரை இருவரும் சேர்ந்து கொள்ளையிடுவர்; இதுமேயாவுக்கும் மோவாபுக்கும் எதிராகக் கையுயர்த்துவர், அம்மோன் மக்கள் அவர்களுக்கு அடிபணிந்திருப்பர்.
15 ஆண்டவர் எகிப்து நாட்டின் வளைகுடாவை முற்றிலும் வற்றச் செய்வார்; வற்றச்செய்யும் காற்றினால் ஆற்றின்மேல் தம் கையை நீட்டுவார்; கால் நனையாமல் மனிதர் கடக்கும்படி அவ்வாற்றை ஏழு கால்வாய்களாய்ப் பிரித்து விடுவார்.
16 எகிப்து நாட்டிலிருந்து இஸ்ராயேல் மக்கள் வந்த போது எவ்வாறு அவர்களுக்கு வழி உண்டானதோ, அவ்வாறே அவர் மக்களுள் எஞ்சினோர் வருவதற்கு அசீரியாவிலிருந்து நெடுஞ்சாலை ஒன்று அமைக்கப்படும்.
×

Alert

×