Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Hebrews Chapters

Hebrews 4 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Hebrews Chapters

Hebrews 4 Verses

1 ஆகையால், தம் இளைப்பாற்றியை அடையச் செய்வதாக இறைவன் அளித்த வாக்குறுதி நிலைத்தேயிருப்பினும், உங்களுள் எவரேனும் அதை வந்தடையத் தவறிவிடக் கூடுமோ என அஞ்சுவோமாக.
2 அவர்களைப் போலவே நமக்கும் இந்த நல்ல செய்தி அறிவிக்கப்பட்டது அவர்கள் கேட்ட வார்த்தையோ அவர்களுக்குப் பயன்படவில்லை. ஏனென்றால், கேட்டவர்கள் அவ்வார்த்தையை விசுவாசத்தோடு கேட்கவில்லை.
3 இனி அந்த இளைப்பாற்றியை அடையப்போவது விசுவாசிகளான நாமே. அதைக் குறித்துத்தான் "நான் சினங்கொண்டு, 'எனது இளைப்பாற்றியை அவர்கள் அடையவே மாட்டார்கள் ' என்று ஆணையிட்டேன்" என எழுதியுள்ளது. ஆனால் உலகம் உருவானதோடு கடவுளுடைய வேலைகள் முடிந்துவிட்டன.
4 ஏனென்றால், ஓரிடத்தில் ஏழாம் நாளைப்பற்றி, " தம் வேலைகள் எல்லாம் முடித்து, கடவுள் ஏழாம் நாள் இளைப்பாறினார் " என்று எழுதியுள்ளது.
5 மேலும் மேற்சொன்ன வசனத்தில், "அவர்கள் எனது இளைப்பாற்றியை அடையவே மாட்டார்கள் என்று" இருக்கிறது.
6 ஆகவே, அந்த இளைப்பாற்றியை அடைய வேண்டியவர்கள் இருக்கிறார்கள் என்பது திண்ணம். ஆனால் அந்த நற்செய்தியை முதன்முதல் கேட்டவர்கள் தங்கள் கீழ்ப்படியாமையால் அந்த இழைப்பாற்றியை அடையவில்லை.
7 ஆகையால்தான் 'இன்று' என வேறொரு நாளைக் குறிப்பிடுகிறார். இந்த நாளைக் குறித்தே, நீண்ட காலத்திற்குப் பின்னர் தாவீதின் நூலிலே மேலே கூறிய வசனத்தில், "இன்று நீங்கள் அவர்தம் குரலைக் கேட்பீர்களாகில் அடங்கா உள்ளத்தினராய் இராதீர்கள்" என்கிறார்.
8 யோசுவா அவர்கள் இளைப்பாற்றியை அடையச் செய்திருந்தால் அதன் பின்னர் இறைவன் வேறொரு நாளைப்பற்றிப் பேசியிருக்கமாட்டார்.
9 ஆதலால், கடவுளுடைய மக்களுக்கு இளைப்பாற்றியின் காலம் இன்னும் வர வேண்டியிருக்கிறது.
10 ஏனெனில், இறைவனின் இளைப்பாற்றியை அடைந்துவிட்டவன், அவர் தம் வேலையை முடித்து இளைப்பாறுகிறான்.
11 ஆதலால், அவர்கள் காண்பித்த கீழ்ப்படியாமையைப் பின்பற்றி யாரும் அதே குற்றத்தில் விழாதபடிக்கு அந்த இளைப்பாற்றியை அடைய ஆர்வத்தோடு முயல்வோமாக.
12 கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல்மிக்கது, இரு பக்கமும் கருக்கு வாய்ந்த எந்த வாளினும் கூர்மையானது. ஆன்மாவின் உள்ளாழத்தையும் ஆவியின் உள்ளாழத்தையும் ஊடுருவுகிறது; மூட்டு, மூளைவரை எட்டுகிறது; உள்ளத்தின் கருத்துக்களையும் எண்ணங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
13 அவரது பார்வைக்கு மறைந்திருக்கும் படைப்பெதுவும் இல்லை. யாருக்கு நாம் கணக்குக் கொடுக்க வேண்டுமோ, அவரது கண்ணுக்கு அனைத்தும் வெளிப்படையாகவும் திறந்தவையாகவும் உள்ளன.
14 ஆகையால், வானங்களையெல்லாம் கடந்து சென்ற ஒருவரை -- அதாவது, கடவுளின் மகனாகிய இயேசுவை தனிப்பெரும் தலைமைக் குருவாகப் பெற்றுள்ள நாம், நாம் அறிக்கையிடும் விசுவாசத்தை உறுதியாய்ப் பற்றிக்கொள்வோமாக.
15 நம்முடைய குறைபாடுகளைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்லர், நம் தலைமைக் குரு. மாறாக, அவர் நம்மைப்போல் ஒருவராயிருப்பதால், பாவம் தவிர, மற்றெல்லாவற்றிலும் சோதனை, துன்பங்களுக்கு உட்பட்டவரானார்.
16 தக்க வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும் இரக்கத்தைப் பெறவும், இறை அருளின் அரியணையை அணுகிச் செல்லத் துணிவோமாக.

Hebrews 4:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×