Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ecclesiastes Chapters

Ecclesiastes 1 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ecclesiastes Chapters

Ecclesiastes 1 Verses

1 தாவீதின் மகனும் யெருசலேம் மன்னனுமாகிய சங்கப் போதகனின் வாக்கியங்களாவன:
2 வீணிலும் வீண் என்று உரைத்தான் சங்கப் போதகன். வீணிலும் வீண், எல்லாமே வீண் என்கிறான்.
3 சூரியன் முகத்தே மனிதன் உழைத்து மேற்கொள்ளும் எல்லா முயற்சியினாலும் அவனுக்கு வரும் பயன் என்ன?
4 ஒரு தலைமுறை போகிறது; மறு தலைமுறை வருகிறது. பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கின்றது.
5 சூரியன் உதிக்கிறது; பின்னர் மறைந்து, தான் உதித்த இடத்திற்கே திரும்பச் சென்று, அங்கிருந்து மறுபடியும் உதயமாகி,
6 தெற்கே சாய்ந்து வடக்கே ஏறிப்போகும். காற்று சுழன்று சுழன்று அடித்துத் தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வருகிறது.
7 எல்லா ஆறுகளும் கடலில் ஓடி விழுந்தும் கடல் நிரம்பிக் கரைபுரளாது; ஆறுகள் தாங்கள் உற்பத்தியான இடத்திற்கு மறுபடி திரும்பி ஓடும்.
8 எல்லாக் காரியங்களும் கண்டுபிடிக்க அரியனவாய் இருக்கின்றன. அவை எத்தகையன என்று மனிதரால் சொல்ல முடியாது. காண்கிறதனால் கண் நிறைவடைவதுமில்லை; கேட்கிறதனால் செவி நிறைவு பெறுவதுமில்லை.
9 முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே இனிமேலும் செய்யப்படும்.
10 சூரியன் முகத்தே புதியது ஒன்றும் இல்லை. இதைப் பார்; இது நவீனம் என்று எவனும் சொல்ல இயலாது. ஏனென்றால், அது நமக்கு முன் சென்ற பழங்காலங்களிலும் இருந்தது.
11 முன் இருந்தவைகளின் ஞாபகம் இப்பொழுது இல்லை. அப்படியே பின்வரும் காரியங்களைப் பற்றியும் இனி இறுதிக் காலத்தில் இருப்பவர்களுக்கு ஞாபகம் இராது.
12 சங்கப் போதகனாகிய நான் யெருசலேமில் இஸ்ராயேலின் அரசனாய் இருந்தேன்.
13 அப்போது சூரியன் முகத்தே நிகழ்கின்றவற்றையெல்லாம் ஞானமுடன் விசாரித்து ஆராய எனக்குள் தீர்மானித்தேன். மனுமக்கள் இந்தக்கடும் தொல்லையில் அலுவலாய் இருப்பதற்குக் கடவுள் அதை மனிதர்களுக்கு நியமித்திருக்கிறார்.
14 சூரியன் முகத்தே உண்டாகின்ற காரியங்களை யெல்லாம் கவனித்துப் பார்த்தேன். இதோ, எல்லாம் விழலும் மனத்துக்குத் துயரமுமாய் இருக்கின்றன.
15 அக்கிரமிகள் மனந் திரும்புதல் அரிது. அறிவில்லாதவர்களுடைய கணக்கு எண்ணில் அடங்காதது.
16 நான் என் உள்ளத்திலே சொல்லிக் கொண்டது என்ன வென்றால்: இதோ, நான் பெரியவனானேன்; எனக்குமுன் யெருசலேமில் இருந்த எல்லாரையும்விட ஞானத்திலே தேர்ச்சி அடைந்தேன்; எத்தனையோ காரியங்களை ஆராய்ந்து பார்த்தேன்; எத்தனையோ கண்டுபிடித்தேன்;
17 இறுதியில், ஞானத்தையும் அறிவுக் கலையையும் மதியீனத்தையும் அறிய வேண்டுமென்று முயன்றேன்; ஆனால், அதுவும் வீண் தொல்லையும் மனத்துயரமுமாய் இருக்கின்றதென்று கண்டேன்.
18 ஏனென்றால், அதிக ஞானத்தால் அதிகச் சலிப்பு உண்டாகும். படிக்கப் படிக்கத் தொல்லையும் அதிகரிக்கும்.

Ecclesiastes 1:9 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×