Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Timothy Chapters

1 Timothy 6 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Timothy Chapters

1 Timothy 6 Verses

1 அடிமைத்தளையில் கட்டுண்டிருப்பவர் எல்லாரும் தங்கள் தலைவர்களை முழு மரியாதைக்கு உரியவர்களாகக் கருத வேண்டும். அப்பொழுதுதான் கடவுளுடைய பெயருக்கும் போதனைக்கும் இழுக்கு ஏற்படாது.
2 விசுவாசிகளைத் தலைவர்களாகக் கொண்டுள்ள அடிமைகள், தலைவர்கள் சகோதரர்கள் தானே என்று மதிப்புக் கொடுக்காதிருந்தால் தவறு. தங்கள் ஊழியத்தால் பயன் பெறுபவர்கள் விசுவாசிகளும் கடவுளுடைய அன்பர்களுமாக இருப்பதால், அடிமைகள் இன்னும் ஆர்வத்துடன் ஊழியம் செய்யவேண்டும். நீர் தரும் போதனைகளும் அறிவுரைகளும் இதற்கேற்ப அமையட்டும்.
3 யாராவது நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நலமிக்க வார்த்தைகளிலும், பக்தி நெறிக்கு ஒத்த போதனையிலும் நிலைத்திராது மாறுபட்ட கொள்கைகளைப் போதித்தால், அவன் ஓர் அறிவிலி.
4 இறுமாப்புக் கொண்டு குருடனானவன். வீண் வாக்குவாதம் செய்வதிலும், வெறும் சொற்களைப் பற்றிச் சண்டையிடுவதிலும் பைத்தியம் கொண்டவன். இவற்றினின்று தான் பொறாமை, சண்டை, சச்சரவு, பழிச்சொல், பிறர் மீது பொல்லாத சந்தேகங்கள்.
5 சீரழிந்த மனத்தவர்களிடையே மோதல்கள் முதலியனவெல்லாம் உண்டாகின்றன. இப்படிச் சீரழிந்தவர்கள் உண்மையை இழந்தவர்களாய், பக்தி நெறியை ஆதாயம் தரும் தொழில் எனக் கருதுகிறார்கள்.
6 ஆம், பக்தி நெறி நல்ல ஆதாயம் தருவதுதான்; ஆனால் போதுமென்ற மனமுள்ளவர்களுக்கே தரும்.
7 பிறந்த பொழுது நாம் ஒன்றையும் கொண்டுவரவில்லை. இறக்கும் பொழுது எதையும் எடுத்துச் செல்லவும் முடியாது.
8 எனவே, உணவு, உடையோடு மனநிறைவுகொள்வோம்.
9 செல்வம் சேர்க்க விரும்புகிறவன் சோதனைகளில் வீழ்கிறான்; பேயின் வலையில் சிக்குகிறான். தீமை விளைவிக்கும் மதிகேடான பல்வேறு ஆசைகளில் அமிழ்ந்து விடுகிறான். இவையோ அவனைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்திவிடும்.
10 பண ஆசைதான் எல்லாத் தீமைகளுக்கும் வேர். அந்த ஆசையால்தான் சிலர் தங்களையே ஊடுருவக் குத்திக்கொள்வதுபோல் பல துன்பங்களைத் தங்கள்மேல் வருவித்துக்கொண்டார்கள்.
11 ஆனால், கடவுளின் அடியாராகிய நீர் இவையெல்லாம் தவிர்த்துவிடும். நீதி, பக்தி, விசுவாசம், அன்பு, மனவுறுதி, சாந்தம் இவற்றைக் கடைப்பிடியும்.
12 விசுவாச வாழ்வு என்னும் சீரிய பந்தயத்தில் தளராதீர். முடிவில்லா வாழ்வைக் கைப்பற்றிக் கொள்ளும். அதற்காகவே அழைக்கப் பெற்றிருக்கிறீர். அதை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில் சிறந்த விசுவாச அறிக்கை செய்தீர்.
13 அனைத்திற்கும் உயிரளிக்கும் கடவுள் முன்னிலையிலும், போஞ்சு பிலாத்தின் முன் நின்று சிறந்த விசுவாச அறிக்கையைச் செய்த இயேசு கிறிஸ்து முன்னிலையிலும் உமக்கு வலியுறுத்திச் சொல்லுகிறேன்.
14 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமாகும் வரை எக்குற்றத்திற்கும் இடம் தராமல் இக்கட்டளைகளைக் கடைப்பிடியும். அப்பிரசன்னத்தைக் கடவுள் குறித்த காலத்தில் நாம் காணச் செய்வார்.
15 அப்பேரின்பக் கடவுள் ஒரே வேந்தர், அரசர்க்கெல்லாம் அரசர். ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர்.
16 இறப்பே அறியா ஒருவர், அணுக முடியா ஒளியில் உறைபவர். அவரைக் கண்டவர் யாருமே இலர். காணக்கூடியவர் ஒருவரும் இலரே! அவருக்கே என்றென்றும் மகிமையும், வல்லமையும் உரியன, ஆமென்.
17 இவ்வுலகில் செல்வம் படைத்தவர் இறுமாப்புக் கொள்ளலாகாது. நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல், நமது இன்பத்துக்காக எல்லாவற்றையும் ஏராளமாக அளிக்கும் கடவுளில் மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும்.
18 அவர்கள் நன்மை செய்து, நற்செயல்கள் என்னும் செல்வம் சேர்ப்பார்களாக, தங்களுக்குள்ளதைப் பிறரோடு தாராள மனத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இவையெல்லாம் நீர் அவர்களுக்கு எடுத்துச் சொல்லும்.
19 அவ்வாறு அவர்கள் தங்கள் வருங்கால வாழ்விற்கான சிறந்ததொரு சேமிப்பைச் சேர்த்து வைப்பார்கள். அதைக் கொண்டு அவர்கள் உண்மை வாழ்வை அடைய இயலும்.
20 தீமோத்தேயுவே, உம்மிடம் ஒப்படைத்துள்ளதைப் பாதுகாப்பீராக. இலௌகீக வீண் பேச்சுக்கும், போலியறிவின் முரண்பாடான கருத்துக்களுக்கும் காது கெடாதீர்.
21 அந்தப் போலியறிவைக் காட்டிக்கொண்ட சிலர் விசுவாசத்தைவிட்டு விலகினர். இறையருள் உங்களோடு இருப்பதாக.

1-Timothy 6:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×