Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Timothy Chapters

1 Timothy 5 Verses

1 முதியோரிடம் கடுமையாயிராதீர். அவர்களைத் தந்தையராகக் கருதி அறிவு புகட்டும். அவ்வாறே, இளைஞரைத் தம்பியராகவும்,
2 வயது முதிர்ந்த மாதரைத் தாய்மாராகவும், இளம் பெண்களைத் தூய உள்ளத்தோடு தங்கையராகவும் கருதி நடத்தும்.
3 கைம்பெண்களுக்கு மரியாதை காட்டும். ஆதரவற்ற கைம்பெண்களையே ஈண்டுக் குறிப்பிடுகிறேன்.
4 எந்தக் கைம்பெண்ணுக்காவது பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ இருந்தால், அவர்கள் முதலில் சொந்தக் குடும்பத்தினரைப் பேணவும், பெற்றோருக்கும், பாட்டி பாட்டானுக்குமுரிய நன்றிக் கடன் ஆற்றவும் கற்றுக்கொள்ளட்டும். இதுவே கடவுளுக்கு ஏற்றது.
5 ஆதரவின்றித் தனியாய் விடப்பட்ட கைம்பெண் தன் முழு நம்பிக்கையையும் கடவுள் மேல் வைத்து, அல்லும் பகலும் செபத்திலும் மன்றாட்டிலும் நிலைத்திருப்பாளாக.
6 சிற்றின்பத்தில் மூழ்கியுள்ளவள் நடைப்பிணமே.
7 கைம்பெண்கள் யாதொரு குறைச் சொல்லுக்கும் ஆளாகாதபடி இவையெல்லாம் எடுத்துச் சொல்லும்.
8 தன் உறவினரை, சிறப்பாகத் தன் சொந்த வீட்டாரைப் பார்த்துக் கொள்ளாதவன் விசுவாசத்தை மறுதலித்தவனே. அவன் அவிசுவாசியைவிடக் கேடு கெட்டவன்.
9 அறுபது வயதுக்குக் குறையாத கைம்பெண்ணையே கைம்பெண்கள் சபையில் சேர்க்கலாம். அவள் ஒருமுறை மட்டுமே திருமணம் ஆனவளாக இருக்கவேண்டும்.
10 பிள்ளைகளை நன்றாய் வளர்த்தல், விருந்தோம்பல், இறைமக்களின் பாதம் கழுவுதல், துன்புற்றோருக்கு உதவியளித்தல் முதலிய எல்லா நற்செயல்களையும் செய்து, தன் நடத்தைக்கு நற்சான்று பெற்றவளாகவும் இருக்கவேண்டும்.
11 இளம் கைம்பெண்களை இச்சபையில் ஏற்றுக்கொள்ளாதீர். ஏனெனில், கிறிஸ்துவிடமிருந்து பிரிக்கக்கூடிய சிற்றின்ப வேட்கை எழும் போது அவர்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள்.
12 தாங்கள் கொடுத்த வாக்கை இவ்வாறு மீறுவதால் குற்றத்தீர்ப்புக்கு உள்ளாவார்கள்.
13 அதோடு வீடுவீடாகச் சென்று, சோம்பேறிகளாயிருக்கக் கற்றுக்கொள்வார்கள். சோம்பேறிகளாயிருக்க மட்டுமன்று, தகாத பேச்சுக்கெல்லாம் இடம் கொடுத்து வம்பளக்கவும், பிறர் காரியங்களில் தலையிடவும் கற்றுக்கொள்வார்கள்.
14 எனவே, இளம் கைம்பெண்கள் மீளவும் திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகளைப் பெற்று, குடும்பத்தை நடத்தவேண்டும். இதுவே என் விருப்பம். அப்பொழுது நம்மைக் குறைகூற எதிரிக்கு எவ்வித வாய்ப்பும் இராது.
15 ஏனெனில், நெறி தவறிச் சாத்தானைப் பின்சென்றவர்கள் சிலர் ஏற்கெனவே உள்ளனர்.
16 கிறிஸ்தவப் பெண் ஒருத்தியின் வீட்டில் கைம்பெண்கள் இருந்தால், அவளே அவர்களைப் பார்த்துக்கொள்ளட்டும். சபையின்மேல் அச்சுமையைச் சுமத்தக் கூடாது. ஏனெனில், ஆதரவற்ற கைம்பெண்களைத்தான் சபை பார்த்துக்கொள்ள வேண்டும்.
17 சபைகளைச் செவ்வனே நடத்தும் மூப்பர்கள், சிறப்பாகப் போதிப்பதிலும், தேவ வார்த்தை அறிவிப்பதிலும் ஈடுபட்டுழைப்பவர்கள் இருமடங்கு மதிப்புக்குரியவர்கள் ஆவர்.
18 ஏனெனில், 'போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டாதே' என்றும், 'வேலையாள் தன் ஊதியத்துக்கு உரியவனே' என்றும் மறைநூல் கூறுகிறது.
19 மூப்பர் ஒருவரை யாராவது குற்றம் சாட்டினால் இரண்டு மூன்று பேர் சாட்சி சொன்னாலன்றி ஏற்றுக்கொள்ளாதீர்.
20 ஆனால் யாராவது பாவ வழியிலேயே இருப்பதாகத் தெரிந்தால், எல்லாருக்கும் அச்சம் உண்டாகும்படி வெளிப்படையாய்க் கடிந்துகொள்ளும்.
21 கடவுள் முன்னிலையிலும், இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வானதூதர் முன்னிலையிலும் உம்மை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். ஒருதலைச் சார்பாய் எதுவும் செய்யாமல், நடுநிலைமையோடு இவற்றைக் கடைப்பிடியும்.
22 யார்மேலும் பதற்றத்தோடு கைகளை விரித்துப் பட்டம் கொடுக்காதீர். கொடுத்தால் அவர்களுடைய பாவங்களில் நீரும் பங்குகொள்வீர். உம்மைக் குற்றமற்றவராகக் காத்துக் கொள்ளும்.
23 தண்ணீர் மட்டுமே குடிப்பதை விட்டுவிடும். அடிக்கடி உமக்கு ஏற்படும் உடல் நலிவின் பொருட்டு, வயிற்றின் நலனுக்காகச் சிறிது திராட்சை இரசம் குடித்துவாரும்.,
24 சிலருடைய குற்றங்கள் வெளிப்படையானவை. தீர்ப்புக்கு அவர்கள் போகுமுன்பே அவர்களுடைய குற்றங்கள் போய் நிற்கும். வேறு சிலருடைய குற்றங்களோ பின்னரே தெரியவரும்.
25 நற்செயல்களும் வெளிப்படையானவையே. வெளிப்படையாக இல்லாவிடினும் என்றுமே மறைந்திரா.
×

Alert

×