Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 89 Verses

1 யெகோவாவின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; [QBR] உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என்னுடைய வாயினால் அறிவிப்பேன். [QBR]
2 கிருபை என்றென்றைக்கும் உறுதிப்பட்டிருக்கும்; [QBR] உமது உண்மையை வானங்களிலே நிறுவுவீர் என்றேன். [QBR]
3 என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடு உடன்படிக்கை செய்து, [QBR] என்னுடைய ஊழியனாகிய தாவீதை நோக்கி: [QBR]
4 என்றென்றைக்கும் உன்னுடைய சந்ததியை நிலைநிறுத்தி, [QBR] தலைமுறை தலைமுறையாக உன்னுடைய சிங்காசனத்தை நிறுவுவேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா) [QBR]
5 யெகோவாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், [QBR] பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும். [QBR]
6 வானத்தில் யெகோவாவுக்கு சமமானவர் யார்? [QBR] பலவான்களின் மகன்களில் யெகோவாவுக்கு ஒப்பானவர் யார்? [QBR]
7 தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், [QBR] தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் பயப்படத்தக்கவர். [QBR]
8 சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, [QBR] உம்மைப்போல வல்லமையுள்ள யெகோவா யார்? [QBR] உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது. [QBR]
9 தேவனே நீர் கடலின் பெருமையை ஆளுகிறவர்; [QBR] அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கச்செய்கிறீர். [QBR]
10 நீர் ராகாபை [* ராகாப் ஒரு கற்பனையான கடல் பிராணி. யோபு 9:13, 26:12, ஏசாயா 51:9 [BR] 87:4. ல் குறிப்பிடப்பட்ட ராகாப் புராணக் கதைகளிகளின் கடல் பாம்பு ஆகும்] வெட்டப்பட்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்; [QBR] உமது வல்லமையான கரத்தினால் உம்முடைய எதிரிகளைச் சிதறடித்தீர். [QBR]
11 வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, [QBR] பூலோகத்தையும் அதிலுள்ள எல்லோரையும் [QBR] நீரே அஸ்திபாரப்படுத்தினீர். [QBR]
12 வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்; [QBR] தாபோரும் [† தாபோர் ஒரு மலை. கலேலியா ஏரியின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் உயரம் 555 அடிகளாகும்] எர்மோனும் [‡ எர்மோன் ஒரு மலையின் பெயர். கலேலியா ஏரியின் வடகிழக்கில் 75 கி. மீ. தூரத்தில் இருக்கிறது. இதின் உயரம் 8,940 அடிகளாகும்] உம்முடைய பெயர் விளங்கக் கெம்பீரிக்கும். [QBR]
13 உமக்கு வல்லமையுள்ள கை இருக்கிறது; [QBR] உம்முடைய கை பராக்கிரமமுள்ளது; [QBR] உம்முடைய வலதுகை உன்னதமானது. [QBR]
14 நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; [QBR] கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும். [QBR]
15 கெம்பீரசத்தத்தை அறியும் மக்கள் பாக்கியமுள்ளவர்கள்; [QBR] யெகோவாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள். [QBR]
16 அவர்கள் உம்முடைய பெயரில் நாள்தோறும் சந்தோஷப்பட்டு, [QBR] உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள். [QBR]
17 நீரே அவர்களுடைய பலத்தின் மகிமையாக இருக்கிறீர்; [QBR] உம்முடைய தயவினால் எங்களுடைய கொம்பு உயரும். [QBR]
18 யெகோவாவால் எங்களுடைய கேடகமும், [QBR] இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு. [QBR]
19 அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: [QBR] உதவிசெய்யக்கூடிய சக்தியை ஒரு வல்லமையுள்ளவன்மேல் வைத்து, [QBR] மக்களில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன். [QBR]
20 என்னுடைய ஊழியனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; [QBR] என்னுடைய பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம் செய்தேன். [QBR]
21 என்னுடைய கை அவனோடு உறுதியாக இருக்கும்; [QBR] என்னுடைய கை அவனைப் பலப்படுத்தும். [QBR]
22 எதிரி அவனை நெருக்குவதில்லை; [QBR] துன்மார்க்கமான மகன் அவனை ஒடுக்குவதில்லை. [QBR]
23 அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்கி, [QBR] அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன். [QBR]
24 என்னுடைய உண்மையும் என்னுடைய கிருபையும் அவனோடு இருக்கும்; [QBR] என்னுடைய பெயரினால் அவன் கொம்பு உயரும். [QBR]
25 அவனுடைய கையை மத்திய தரைக் கடலின்மேலும், [QBR] அவனுடைய வலது கையை ஆறுகள்மேலும் ஆளும்படி வைப்பேன். [QBR]
26 அவன் என்னை நோக்கி: [QBR] நீர் என்னுடைய பிதா, என் தேவன், என்னுடைய இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான். [QBR]
27 நான் அவனை எனக்கு முதலில் பிறந்தவனும், [QBR] பூமியின் ராஜாக்களைவிட மகா உயர்ந்தவனுமாக்குவேன். [QBR]
28 என்னுடைய கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; [QBR] என்னுடைய உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும். [QBR]
29 அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், [QBR] அவன் ராஜாசனம் வானங்களுள்ளவரை நிலைநிற்கவும் செய்வேன். [QBR]
30 அவனுடைய பிள்ளைகள் என்னுடைய நியாயங்களின்படி நடக்காமல், [QBR] என்னுடைய வேதத்தை விட்டு விலகி; [QBR]
31 என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் என்னுடைய நியமங்களை மீறி நடந்தால்; [QBR]
32 அவர்களுடைய மீறுதலை சாட்டையினாலும், [QBR] அவர்களுடைய அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன். [QBR]
33 ஆனாலும் என்னுடைய கிருபையை அவனை விட்டு விலக்காமலும், [QBR] என்னுடைய உண்மையில் மீறாமலும் இருப்பேன். [QBR]
34 என்னுடைய உடன்படிக்கையை மீறாமலும், [QBR] என்னுடைய உதடுகள் சொன்னதை மாற்றாமலும் இருப்பேன். [QBR]
35 ஒருமுறை என்னுடைய பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், [QBR] தாவீதிற்கு நான் பொய்சொல்லமாட்டேன். [QBR]
36 அவனுடைய சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; [QBR] அவனுடைய சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும். [QBR]
37 சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், [QBR] வானத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று சொன்னீர். (சேலா) [QBR]
38 ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர்; [QBR] நீர் அபிஷேகம் செய்துவைத்தவன்மேல் கடுங்கோபமானீர். [QBR]
39 உமது அடியானுடன் நீர் செய்த உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, [QBR] அவனுடைய கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர். [QBR]
40 அவனுடைய மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, [QBR] அவனுடைய பாதுகாப்பான இடங்களைப் பாழாக்கினீர். [QBR]
41 வழிநடக்கிற அனைவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; [QBR] தன்னுடைய அயலாருக்கு நிந்தையானான். [QBR]
42 அவனுடைய எதிரிகளின் வலது கையை நீர் உயர்த்தி, [QBR] அவனுடைய விரோதிகள் அனைவரும் சந்தோஷிக்கும்படி செய்தீர். [QBR]
43 அவனுடைய வாளின் கூர்மையை மழுங்கச்செய்து, [QBR] அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர். [QBR]
44 அவனுடைய மகிமையை இல்லாமல்போகச்செய்து, [QBR] அவனுடைய சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர். [QBR]
45 அவனுடைய வாலிபநாட்களைக் குறுக்கி, [QBR] அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா) [QBR]
46 எதுவரைக்கும், யெகோவாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? [QBR] உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ? [QBR]
47 என்னுடைய உயிர் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; [QBR] மனிதர்கள் அனைவரையும் வீணாக படைக்கவேண்டியதென்ன? [QBR]
48 மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? [QBR] தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா) [QBR]
49 ஆண்டவரே, நீர் தாவீதிற்கு உம்முடைய உண்மையைக்கொண்டு [QBR] சத்தியம்செய்த உமது ஆரம்பநாட்களின் கிருபைகள் எங்கே? [QBR]
50 ஆண்டவரே, உம்முடைய எதிரிகள் உம்முடைய ஊழியக்காரர்களையும், [QBR] நீர் அபிஷேகம் செய்தவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால், [QBR]
51 யெகோவாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், [QBR] வலுமையான மக்கள் எல்லோராலும் நான் என்னுடைய மடியில் சுமக்கும் [QBR] என்னுடைய நிந்தையையும் நினைத்தருளும். [QBR]
52 யெகோவாவுக்கு என்றென்றைக்கும் நன்றி உண்டாகட்டும். [QBR] ஆமென். ஆமென். [PE]
×

Alert

×