Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 69 Verses

1 தேவனே, என்னைக் காப்பாற்றும்; [QBR] வெள்ளங்கள் என்னுடைய ஆத்துமாவரை பெருகிவருகிறது. [QBR]
2 ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, [QBR] ஆழமான தண்ணீரில் இருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. [QBR]
3 நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; [QBR] என்னுடைய தொண்டை வறண்டுபோனது; [QBR] என் தேவனுக்கு நான் காத்திருக்கும்போது, [QBR] என்னுடைய கண்கள் பூத்துப்போனது. [QBR]
4 காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறார்கள்; [QBR] வீணாக எனக்கு எதிரிகளாகி என்னை அழிக்கவேண்டும் என்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; [QBR] நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதானது. [QBR]
5 தேவனே, நீர் என்னுடைய புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; [QBR] என்னுடைய குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை. [QBR]
6 சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, [QBR] உமக்காகக் காத்திருக்கிறவர்கள் என்னால் வெட்கப்பட்டுப் போகாமலிருப்பார்களாக; [QBR] இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் வெட்கமடையாதிருப்பார்களாக. [QBR]
7 உமக்காக நிந்தையைச் சகித்தேன்; [QBR] அவமானம் என்னுடைய முகத்தை மூடினது. [QBR]
8 என்னுடைய சகோதரர்களுக்கு வேற்று மனிதனும், என்னுடைய தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன். [QBR]
9 உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரிந்தது; [QBR] உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது. [QBR]
10 என்னுடைய ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; [QBR] அதுவும் எனக்கு நிந்தையாக முடிந்தது. [QBR]
11 சணலாடையை என்னுடைய உடையாக்கினேன்; [QBR] அப்பொழுதும் அவர்களுக்குப் பழமொழியானேன். [QBR]
12 வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்; [QBR] மதுபானம் குடிக்கிறவர்களின் பாடலானேன். [QBR]
13 ஆனாலும் யெகோவாவே, உதவிக்காலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன்; [QBR] தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும். [QBR]
14 நான் அமிழ்ந்து போகாதபடிக்குச் சேற்றிலிருந்து என்னைத் தூக்கிவிடும்; [QBR] என்னைப் பகைக்கிறவர்களிடத்திலிருந்தும் ஆழமான தண்ணீர்களில் இருந்தும் நான் நீங்கும்படி செய்யும். [QBR]
15 வெள்ளங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், [QBR] பாதாளம் என்மேல் தன்னுடைய வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக. [QBR]
16 யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும், [QBR] உம்முடைய தயை நலமாயிருக்கிறது; [QBR] உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கண்ணோக்கியருளும். [QBR]
17 உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; [QBR] நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாகச் செவிகொடுத்தருளும். [QBR]
18 நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைசெய்யும்; [QBR] என்னுடைய எதிரிகளுக்காக என்னை மீட்டுவிடும். [QBR]
19 தேவனே நீர் என்னுடைய நிந்தையையும் [QBR] என்னுடைய வெட்கத்தையும் என்னுடைய அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; [QBR] என்னுடைய எதிரிகள் எல்லோரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள். [QBR]
20 நிந்தை என்னுடைய இருதயத்தைப் பிளந்தது; [QBR] நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; [QBR] எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், [QBR] ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், [QBR] ஒருவனும் இல்லை. [QBR]
21 என்னுடைய ஆகாரத்தில் கசப்பு கலந்து கொடுத்தார்கள், [QBR] என்னுடைய தாகத்திற்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள். [QBR]
22 அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், [QBR] அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாக இருக்கட்டும். [QBR]
23 அவர்களுடைய கண்கள் காணாதபடி இருளாகட்டும்; [QBR] அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடச்செய்யும். [QBR]
24 உம்முடைய கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றும்; [QBR] உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக. [QBR]
25 அவர்கள் குடியிருப்பு பாழாகட்டும்; [QBR] அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக. [QBR]
26 தேவனே நீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, [QBR] நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே. [QBR]
27 அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக. [QBR]
28 ஜீவபுத்தகத்திலிருந்து அவர்கள் பெயர் கிறுக்கப்பட்டுப்போவதாக; [QBR] நீதிமான்கள் பெயரோடே அவர்கள் பெயர் எழுதப்படாதிருப்பதாக. [QBR]
29 நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; [QBR] தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. [QBR]
30 தேவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து, [QBR] அவரை நன்றி சொல்லி மகிமைப்படுத்துவேன். [QBR]
31 கொம்பும் விரிகுளம்புமுள்ள காளை எருதைவிட, [QBR] இதுவே யெகோவாவுக்குப் பிரியமாக இருக்கும். [QBR]
32 சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்; [QBR] தேவனைத் தேடுகிறவர்களே, உங்களுடைய இருதயம் வாழும். [QBR]
33 யெகோவா எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், [QBR] கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணிக்கமாட்டார். [QBR]
34 வானமும் பூமியும் கடல்களும் அவைகளில் வாழ்கிற அனைத்தும் அவரைத் துதிக்கட்டும். [QBR]
35 தேவன் சீயோனைக் காப்பாற்றி, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; [QBR] அப்பொழுது அங்கே குடியிருந்து அதை உரிமையாக்கிக்கொள்வார்கள். [QBR]
36 அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள்; [QBR] அவருடைய பெயரை நேசிக்கிறவர்கள் அதில் குடியிருப்பார்கள். [PE]
×

Alert

×