Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 137 Verses

1 பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, [QBR] அங்கே சீயோனை நினைத்து அழுதோம். [QBR]
2 அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்களுடைய கின்னரங்களைத் தூக்கிவைத்தோம். [QBR]
3 எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்களுடைய பாடல்களையும், [QBR] எங்களையும் பாழாக்கினவர்கள் மகிழ்ச்சி பாடல்களை விரும்பி: [QBR] சீயோனின் பாட்டுகளில் சிலவற்றை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள். [QBR]
4 யெகோவாவின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி? [QBR]
5 எருசலேமே, நான் உன்னை மறந்தால் என்னுடைய வலதுகை தன்னுடைய தொழிலை மறப்பதாக. [QBR]
6 நான் உன்னை நினைக்காமலும், [QBR] எருசலேமை என்னுடைய முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாகக் கருதாமலும்போனால், [QBR] என்னுடைய நாவு என் மேல் வாயோடு ஒட்டிக்கொள்வதாக. [QBR]
7 யெகோவாவே, எருசலேமின் நாளில் ஏதோமியர்களை நினையும்; [QBR] அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரம்வரை இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே. [QBR]
8 பாபிலோன் மகளே, பாழாகப்போகிறவளே, [QBR] நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான். [QBR]
9 உன்னுடைய குழந்தைகளைப் பிடித்து, [QBR] கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான். [PE]
×

Alert

×