1
|
{குடும்ப வாழ்வு} [PS] நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபேசாதே; [QBR] ஒரு நாள் பிறப்பிப்பதை அறியமாட்டாயே. [QBR] |
2
|
உன்னுடைய வாய் அல்ல, மற்றவனே உன்னைப் புகழட்டும்; [QBR] உன்னுடைய உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும். [QBR] |
3
|
கல் கனமும், மணல் பாரமுமாக இருக்கும்; [QBR] மூடனுடைய கோபமோ இந்த இரண்டைவிட பாரமாம். [QBR] |
4
|
கடுங்கோபம் கொடுமையுள்ளது, கோபம் பயங்கரமானது; [QBR] பொறாமையோவென்றால், அதற்கு முன்னே நிற்கக்கூடியவன் யார்? [QBR] |
5
|
மறைவான நேசத்தைவிட வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது. [QBR] |
6
|
நண்பன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; [QBR] சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள். [QBR] |
7
|
திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; [QBR] பசியுள்ளவனுக்கோ கசப்பான ஆகாரங்களும் தித்திப்பாக இருக்கும். [QBR] |
8
|
தன்னுடைய கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, [QBR] அப்படியே தன்னுடைய இடத்தைவிட்டு அலைகிற மனிதனும் இருக்கிறான். [QBR] |
9
|
வாசனைத் தைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, [QBR] ஒருவனுடைய நண்பன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும். [QBR] |
10
|
உன்னுடைய நண்பனையும், உன்னுடைய தகப்பனுடைய நண்பனையும் விட்டுவிடாதே; [QBR] உன்னுடைய ஆபத்துக்காலத்தில் உன்னுடைய சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; [QBR] தூரத்திலுள்ள சகோதரனைவிட சமீபத்திலுள்ள அயலானே சிறப்பானவன். [QBR] |
11
|
என் மகனே, என்னை சபிக்கிறவனுக்கு நான் உத்திரவு கொடுக்கும்படியாக, [QBR] நீ ஞானவானாகி, என்னுடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்து. [QBR] |
12
|
விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; [QBR] பேதைகளோ நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள். [QBR] |
13
|
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய ஆடையை எடுத்துக்கொள், [QBR] அந்நிய பெண்ணுக்காக ஈடுவாங்கிக்கொள். [QBR] |
14
|
ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்த சத்தத்தோடு [QBR] தன்னுடைய நண்பனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும். [QBR] |
15
|
அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் [QBR] சண்டைக்காரியான பெண்ணும் சரி. [QBR] |
16
|
அவளை அடக்கப்பார்க்கிறவன் [QBR] காற்றை அடக்கித் தன்னுடைய வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான். [QBR] |
17
|
இரும்பை இரும்பு கூர்மையாக்கிடும்; [QBR] அப்படியே மனிதனும் தன்னுடைய நண்பனைக் கூர்மையாக்குகிறான். [QBR] |
18
|
அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியை சாப்பிடுவான்; [QBR] தன்னுடைய எஜமானைக் காக்கிறவன் கனமடைவான். [QBR] |
19
|
தண்ணீரில் முகத்திற்கு முகம் ஒத்திருப்பதைப்போல, [QBR] மனிதர்களில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும். [QBR] |
20
|
பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; [QBR] அதுபோல மனிதனுடைய ஆசைகளும் திருப்தியாகிறதில்லை. [QBR] |
21
|
வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; [QBR] மனிதனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை. [QBR] |
22
|
மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடு நொய்யாகக் குத்தினாலும், [QBR] அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது. [QBR] |
23
|
உன்னுடைய ஆடுகளின் நிலைமையை நன்றாக அறிந்துகொள்; [QBR] உன்னுடைய மந்தைகளின்மேல் கவனமாக இரு. [QBR] |
24
|
செல்வம் என்றைக்கும் நிலைக்காது; [QBR] கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ? [QBR] |
25
|
புல் முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், [QBR] மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும். [QBR] |
26
|
ஆட்டுக்குட்டிகள் உனக்கு ஆடையையும், [QBR] கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும். [QBR] |
27
|
வெள்ளாட்டுப்பால் உன்னுடைய உணவுக்கும், [QBR] உன் வீட்டாரின் உணவுக்கும் [QBR] உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானதாக இருக்கும். [PE] |
Proverbs 27:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...