1
|
{யோபுவின் வார்த்தைகள்} [PS] அதற்கு யோபு மறுமொழியாக: [QBR] |
2
|
“ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன்; [QBR] தேவனுக்கு முன்பாக மனிதன் நீதிமானாயிருப்பதெப்படி? [QBR] |
3
|
அவர் அவனுடன் வழக்காட விருப்பமாயிருந்தால், [QBR] ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு பதில் சொல்லமாட்டானே. [QBR] |
4
|
அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; [QBR] அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்? [QBR] |
5
|
அவர் மலைகளை திடீரென்று பெயர்க்கிறார்; [QBR] தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார். [QBR] |
6
|
பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் இடத்திலிருந்து அசையவைக்கிறார். [QBR] |
7
|
அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; [QBR] அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார். [QBR] |
8
|
அவர் ஒருவரே வானங்களை விரித்து, [QBR] சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர். [QBR] |
9
|
அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும், [QBR] அறுமீனையும், தெற்கு மண்டலங்களையும் உண்டாக்கினவர். [QBR] |
10
|
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், [QBR] எண்ணமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். [QBR] |
11
|
இதோ, அவர் என் அருகில் போகிறார், [QBR] நான் அவரைப் பார்க்கமுடியவில்லை; அவர் கடந்துபோகிறார், [QBR] நான் அவரை அறியவில்லை. [QBR] |
12
|
இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை தடுப்பவன் யார்? [QBR] நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்? [QBR] |
13
|
தேவன் தம்முடைய கோபத்தை நிறுத்தமாட்டார்; [QBR] ஒருவருக்கொருவர் துணைநிற்கிற அகங்காரிகள் அவருக்கு அடங்கவேண்டும். [QBR] |
14
|
இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும், [QBR] அவருடன் வழக்காடும் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளவும் நான் எம்மாத்திரம்? [QBR] |
15
|
நான் நீதிமானாயிருந்தாலும் அவருடன் வழக்காடாமல், [QBR] என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்காகக் கெஞ்சுவேன். [QBR] |
16
|
நான் கெஞ்சுவதினாலும், அவர் எனக்கு பதில் கொடுத்தாலும், [QBR] அவர் என் விண்ணப்பத்தைக் கேட்டார் என்று நம்பமாட்டேன். [QBR] |
17
|
அவர் புயலினால் என்னை முறிக்கிறார்; [QBR] காரணமில்லாமல் அநேக காயங்களை எனக்கு உண்டாக்குகிறார். [QBR] |
18
|
நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், [QBR] கசப்பினால் என்னை நிரப்புகிறார். [QBR] |
19
|
பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; [QBR] நியாயத்தைப் பார்த்தால் என் பக்கத்தில் சாட்சி சொல்லுகிறவன் யார்? [QBR] |
20
|
நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; [QBR] நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும். [QBR] |
21
|
நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன்; [QBR] என் வாழ்க்கையை வெறுப்பேன். [QBR] |
22
|
ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; [QBR] சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார். [QBR] |
23
|
வாதையானது உடனே வாதித்துக் கொல்லும்போது, [QBR] அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப் பார்த்து சிரிக்கிறார். [QBR] |
24
|
உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; [QBR] அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; [QBR] அவர் இதைச் செய்கிறதில்லையென்றால், வேறு யார் இதைச் செய்கிறார். [QBR] |
25
|
என் நாட்கள் தபால்காரர் ஓட்டத்திலும் வேகமாயிருக்கிறது; [QBR] அவைகள் நன்மையைப் பார்க்காமல் பறந்துபோகும். [QBR] |
26
|
அவைகள் வேகமாக ஓடுகிற கப்பல்களைப்போலவும், [QBR] இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது. [QBR] |
27
|
என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, [QBR] திடன்கொள்வேன் என்று சொன்னால், [QBR] |
28
|
என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்; [QBR] என்னைக் குற்றமில்லாதவனாக நினைக்கமாட்டீர் என்று அறிவேன். [QBR] |
29
|
நான் பொல்லாதவனாயிருந்தால், [QBR] வீணாகப் போராடவேண்டியது என்ன? [QBR] |
30
|
நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, [QBR] என் கைகளை சோப்பினால் சுத்தம்செய்தாலும், [QBR] |
31
|
நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். [QBR] அப்பொழுது என் உடையே என்னை அருவருக்கும். [QBR] |
32
|
நான் அவருக்கு மறுமொழி சொல்லுகிறதற்கும், [QBR] நாங்கள் ஒன்றுகூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், [QBR] அவர் என்னைப்போல மனிதன் அல்லவே. [QBR] |
33
|
எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க நடுவர் எங்களுக்குள் இல்லையே. [QBR] |
34
|
அவர் தமது கோலை என்னைவிட்டு அகற்றுவாராக; [QBR] அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கவைக்காதிருப்பதாக. [QBR] |
35
|
அப்பொழுது நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்; [QBR] இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை. [PE] |
Job 9:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...