உண்மையாகவே அவர் மக்களை நேசிக்கிறார்; [QBR] அவருடைய பரிசுத்தவான்கள் எல்லோரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; [QBR] அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, [QBR] உம்முடைய வார்த்தைகளினால் போதிக்கப்படுவார்கள். [QBR]
அவன் யூதாவைக்குறித்து: “யெகோவாவே, யூதாவின் சத்தத்தைக் கேட்டு, [QBR] அவன் தன்னுடைய மக்களிடத்திற்கு திரும்பிவரச் செய்யும்; [QBR] அவனுடைய கை பலப்படுவதாக; [QBR] அவனுடைய எதிரிகளுக்கு அவனைப் பாதுகாத்து விடுவிக்கிற உதவி செய்கிறவராக இருப்பீராக” என்றான். [QBR]
தன்னுடைய தகப்பனையும், [QBR] தாயையும் குறித்து நான் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன் என்று சொல்லி, [QBR] தன் சகோதரர்களையும், பிள்ளைகளையும் [QBR] ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறவனிடத்தில் அவைகள் இருப்பதாக; [QBR] அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, [QBR] உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள். [QBR]
யெகோவாவே, அவனுடைய ஆஸ்தியை ஆசீர்வதித்து, [QBR] அவன் கையின் செயல்களின்மேல் பிரியமாயிரும்; [QBR] அவனைப் பகைத்து அவனுக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் [QBR] திரும்ப எழுந்திருக்காதபடி அவர்களுடைய இடுப்புகளை நொறுக்கிவிடும்” என்றான். [QBR]
பென்யமீனைக்குறித்து: [QBR] “யெகோவாவுக்குப் பிரியமானவன், [QBR] அவருடன் சுகமாகத் தங்கியிருப்பான்; [QBR] அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, [QBR] அவனுடைய எல்லைக்குள்ளே தங்கியிருப்பார்” என்றான். [QBR]
யோசேப்பைக்குறித்து: “யெகோவாவால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக; [QBR] அது வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளினாலும், [QBR]
அவனுடைய அலங்காரம் அவன் முதற்பிறந்த காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், [QBR] அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; [QBR] அவைகளாலே மக்கள் அனைவரையும் தேசத்தின் கடைசிவரை முட்டித் துரத்துவான்; [QBR] அவைகள் எப்பிராயீமின் பத்தாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள்” என்றான். [QBR]
அவர்கள், மக்களை மலையின்மேல் வரவழைத்து, [QBR] அங்கே நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள்; [QBR] கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருட்களையும் அநுபவிப்பார்கள்” என்றான். [QBR]
அவன் தனக்காக முதல் இடத்தைப் பார்த்துக்கொண்டான்; [QBR] அங்கே தனக்கு நியாயப்பிரமாணிகன் கொடுத்த பங்கு பத்திரமாயிருக்கிறது; [QBR] ஆனாலும் அவன் மக்களுக்கு முன்பாக வந்து, [QBR] மற்ற இஸ்ரவேலுடனே யெகோவாவின் நீதியையும் அவருடைய நியாயங்களையும் செய்வான்” என்றான். [QBR]
“யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; [QBR] அவர் உனக்கு உதவியாக வானங்களின்மேலும் [QBR] தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார். [QBR]