Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Deuteronomy Chapters

Deuteronomy 33 Verses

1 {மோசே இஸ்ரவேல் கோத்திரங்களை ஆசீர்வதித்தல்} [PS] தேவனுடைய மனிதனாகிய மோசே தான் மரணமடைவதற்கு முன்னே இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது: [QBR]
2 “யெகோவா சீனாயிலிருந்து எழுந்தருளி, [QBR] சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; [QBR] பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, [QBR] பத்தாயிரங்களான பரிசுத்தவான்களுடன் வெளிப்பட்டார்; [QBR] அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது. [QBR]
3 உண்மையாகவே அவர் மக்களை நேசிக்கிறார்; [QBR] அவருடைய பரிசுத்தவான்கள் எல்லோரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; [QBR] அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, [QBR] உம்முடைய வார்த்தைகளினால் போதிக்கப்படுவார்கள். [QBR]
4 மோசே நமக்கு ஒரு நியாயப்பிரமாணத்தைக் கற்பித்தான்; [QBR] அது யாக்கோபின் சபைக்குச் சொந்தமானது. [QBR]
5 மக்களின் தலைவர்களும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் ஒன்றாகக்கூடினபோது [QBR] அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார். [QBR]
6 “ரூபன் மரணமடையாமல் பிழைப்பானாக; [QBR] அவன் மக்கள் குறைவாக இருக்கமாட்டார்கள்” என்றான். [QBR]
7 அவன் யூதாவைக்குறித்து: “யெகோவாவே, யூதாவின் சத்தத்தைக் கேட்டு, [QBR] அவன் தன்னுடைய மக்களிடத்திற்கு திரும்பிவரச் செய்யும்; [QBR] அவனுடைய கை பலப்படுவதாக; [QBR] அவனுடைய எதிரிகளுக்கு அவனைப் பாதுகாத்து விடுவிக்கிற உதவி செய்கிறவராக இருப்பீராக” என்றான். [QBR]
8 லேவியர்களைக்குறித்து: “நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, [QBR] மேரிபாவின் தண்ணீரின் அருகில் வாக்குவாதம்செய்த உன் பரிசுத்த மனிதனிடம் [QBR] உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக. [QBR]
9 தன்னுடைய தகப்பனையும், [QBR] தாயையும் குறித்து நான் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன் என்று சொல்லி, [QBR] தன் சகோதரர்களையும், பிள்ளைகளையும் [QBR] ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறவனிடத்தில் அவைகள் இருப்பதாக; [QBR] அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, [QBR] உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள். [QBR]
10 அவர்கள் யாக்கோபுக்கு உம்முடைய நியாயங்களையும், [QBR] இஸ்ரவேலுக்கு உம்முடைய பிரமாணத்தையும் கற்பித்து, [QBR] உமது சந்நிதானத்திலே தூபவர்க்கத்தையும், [QBR] உமது பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளையும் செலுத்துவார்கள். [QBR]
11 யெகோவாவே, அவனுடைய ஆஸ்தியை ஆசீர்வதித்து, [QBR] அவன் கையின் செயல்களின்மேல் பிரியமாயிரும்; [QBR] அவனைப் பகைத்து அவனுக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் [QBR] திரும்ப எழுந்திருக்காதபடி அவர்களுடைய இடுப்புகளை நொறுக்கிவிடும்” என்றான். [QBR]
12 பென்யமீனைக்குறித்து: [QBR] “யெகோவாவுக்குப் பிரியமானவன், [QBR] அவருடன் சுகமாகத் தங்கியிருப்பான்; [QBR] அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, [QBR] அவனுடைய எல்லைக்குள்ளே தங்கியிருப்பார்” என்றான். [QBR]
13 யோசேப்பைக்குறித்து: “யெகோவாவால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக; [QBR] அது வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளினாலும், [QBR]
14 சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான பழங்களினாலும், [* மோந்த்லி ] [QBR] சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களினாலும், [QBR]
15 பழமையான மலைகளில் உண்டாகும் விலையுயர்ந்த பொருட்களினாலும், [QBR] நித்திய மலைகளில் கிடைக்கும் அரிதான பொருட்களினாலும், [QBR]
16 நாடும் அதின் நிறைவும் கொடுக்கும் அருமையான தானியங்களினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக. [QBR] முட்செடியில் காட்சியளித்தவரின் தயவு யோசேப்புடைய தலையின்மேலும், [QBR] தன் சகோதரர்களில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக. [QBR]
17 அவனுடைய அலங்காரம் அவன் முதற்பிறந்த காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், [QBR] அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; [QBR] அவைகளாலே மக்கள் அனைவரையும் தேசத்தின் கடைசிவரை முட்டித் துரத்துவான்; [QBR] அவைகள் எப்பிராயீமின் பத்தாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள்” என்றான். [QBR]
18 “செபுலோனைக்குறித்து: செபுலோனே, [QBR] நீ வெளியே புறப்பட்டுப்போகும்போதும், இசக்காரே, [QBR] நீ உன் கூடாரங்களில் தங்கும்போதும் சந்தோஷமாயிரு. [QBR]
19 அவர்கள், மக்களை மலையின்மேல் வரவழைத்து, [QBR] அங்கே நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள்; [QBR] கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருட்களையும் அநுபவிப்பார்கள்” என்றான். [QBR]
20 “காத்தைக்குறித்து: [QBR] காத்திற்கு விசாலமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; [QBR] அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து, [QBR] புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான். [QBR]
21 அவன் தனக்காக முதல் இடத்தைப் பார்த்துக்கொண்டான்; [QBR] அங்கே தனக்கு நியாயப்பிரமாணிகன் கொடுத்த பங்கு பத்திரமாயிருக்கிறது; [QBR] ஆனாலும் அவன் மக்களுக்கு முன்பாக வந்து, [QBR] மற்ற இஸ்ரவேலுடனே யெகோவாவின் நீதியையும் அவருடைய நியாயங்களையும் செய்வான்” என்றான். [QBR]
22 “தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், [QBR] அவன் பாசானிலிருந்து பாய்வான்” என்றான். [QBR]
23 “நப்தலியைக்குறித்து: நப்தலி யெகோவாவுடைய தயவினாலே திருப்தியடைந்து, [QBR] அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். [QBR] நீ மேற்குத் திசையையும் தெற்குத் திசையையும் சொந்தமாக்கிக்கொள்” என்றான். [QBR]
24 ஆசேரைக்குறித்து: “ஆசேர் குழந்தை பாக்கியமுடையவனாக, தன் சகோதரர்களுக்குப் பிரியமாயிருந்து, [QBR] தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான். [QBR]
25 இரும்பும் வெண்கலமும் உன் காலணியின் கீழிருக்கும்; [QBR] உன் நாட்களுக்குத்தக்கதாக உன் பெலனும் இருக்கும் என்றான். [QBR]
26 “யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; [QBR] அவர் உனக்கு உதவியாக வானங்களின்மேலும் [QBR] தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார். [QBR]
27 அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; [QBR] அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; [QBR] அவர் உனக்கு முன்னின்று எதிரிகளைத் துரத்தி, [QBR] அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார். [QBR]
28 இஸ்ரவேல் சுகமாகத் தனித்து குடியிருப்பான்; [QBR] யாக்கோபின் ஊற்றானது [† வாசஸ்தலம்] தானியமும் திராட்சைரசமும் உள்ள தேசத்திலே இருக்கும்; [QBR] அவருடைய வானமும் பனியைப் பெய்யும். [QBR]
29 இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; யெகோவாவால் இரட்சிக்கப்பட்ட மக்களே, [QBR] உனக்கு ஒப்பானவன் யார்? [QBR] உனக்கு உதவிசெய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; [QBR] உன் எதிரிகள் உன்னை நிந்தித்துப் பேசி அடங்குவார்கள்; [QBR] அவர்களுடைய மேடுகளை [‡ முதுகுகளை.] மிதிப்பாய்” என்று சொன்னான். [PE]
×

Alert

×