Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Hosea Chapters

Hosea 14 Verses

Bible Versions

Books

Hosea Chapters

Hosea 14 Verses

1 இஸ்ரவேலே, நீ விழுந்தாய், தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தாய். எனவே உனது தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி வா.
2 நீ சொல்லப் போவதைப் பற்றி நினைத்துப் பார். கர்த்தரிடம் திரும்பி வா. அவரிடம், "எங்கள் பாவங்களை எடுத்துவிடும். நாங்கள் செய்யும் நன்மைகளை ஏற்றுக்கொள்ளும். நாங்கள் எங்கள் உதடுகளிலிருந்து துதிகளை செலுத்துகிறோம்.
3 அசீரியா எங்களைக் காப்பாற்றாது. நாங்கள் போர்க் குதிரைகளில் சவாரி செய்யமாட்டோம். நாங்கள் மீண்டும் ஒருபோதும் ‘எங்கள் தேவன்’ என்று எங்கள் கைகளால் செய்யப்பட்டப் பொருட்களைக் கூறமாட்டோம். ஏனென்றால் நீர் ஒருவர் தான் அனாதைகள் மீது இரக்கங்காட்டுகிறவர்."
4 கர்த்தர் கூறுகிறார்: "என்னைவிட்டு அவர்கள் விலகியதை நான் மன்னிப்பேன். நான் அவர்களைத் தடையின்றி நேசிப்பேன். ஏனெனில் அவர்களுடன் கோபங்கொண்டதை நிறுத்திவிட்டேன்.
5 நான் இஸ்ரவேலுக்குப் பனியைப் போலிருப்பேன். இஸ்ரவேல் லீலிப் புஷ்பத்தைப் போன்று மலருவான். அவன் லீபனோனின் கேதுரு மரங்களைப்போன்று வளருவான்.
6 அவனது கிளைகள் வளரும். அவன் அழகான ஒலிவ மரத்தைப் போன்றிருப்பான். அவன் லீபனோனின் கேதுரு மரங்களிலிருந்து வரும் இனிய மணத்தைப் போன்று இருப்பான்.
7 இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் எனது பாதுகாப்பின் கீழ் வாழ்வார்கள். அவர்கள் தானியத்தைப் போன்று வளருவார்கள். அவர்கள் திராட்சைக் கொடியைப் போன்று மலருவார்கள். அவர்கள் லீபனோனின் திராட்சைரசம் போல் இருப்பார்கள்."
8 "எப்பிராயீமே, நான் (கர்த்தர்) இனி விக்கிரகங்களோடு எந்தத் தொடர்பும் கொள்ளமாட்டேன். நான் ஒருவனே உங்களது ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறவர். நான் ஒருவனே உன்னைக் கவனித்து வருபவர். நான் எப்பொழுதும் பசுமையாக இருக்கும் தேவதாரு மரத்தைப் போன்றவர். உன் கனி என்னிடமிருந்து வருகிறது."
9 அறிவுள்ள ஒருவன் இவற்றைப் புரிந்துக்கொள்கிறான். விழிப்புள்ள ஒருவன் இவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும். கர்த்தருடைய வழிகள் சரியாக இருக்கின்றன. அவற்றில் நல்லவர்கள் நடப்பார்கள். பாவிகளோ அவற்றில் இடறிவிழுந்து மரிப்பார்கள்.

Hosea 14:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×