Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Zechariah Chapters

Zechariah 6 Verses

1 மறுபடியும் நான் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இதோ, இரண்டு மலைகளுக்கு இடையிலிருந்து நான்கு தேர்கள் புறப்பட்டு வருவதைக் கண்டேன்; அந்த மலைகள் வெண்கல மலைகள்.
2 முதல் தேரில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாம் தேரில் கருப்புக் குதிரைகளும்,
3 மூன்றாம் தேரில் வெள்ளைக் குதிரைகளும், நான்காம் தேரில் பல வண்ணமுள்ள கொழுத்த குதிரைகளும் பூட்டியிருந்தன.
4 என்னிடம் பேசிய தூதரிடம், "ஐயா, இவை என்ன?" என்று கேட்டேன்.
5 அதற்கு மறுமொழியாக அந்தத் தூதர், "இவை அனைத்துலக ஆண்டவரின் திருமுன் நின்றிருந்த பின், புறப்பட்டு வானத்தின் நாற்றிசைக் காற்றுகளை நோக்கிச் செல்கின்றன.
6 கருப்புக் குதிரைகள் பூட்டிய தேர் வடநாட்டுக்குப் போகிறது; வெண்ணிறக் குதிரைகள் மேற்றிசை நாட்டுக்குப் போகின்றன; பலவண்ணக் குதிரைகளோ தென்னாட்டுக்குப் போகின்றன" என்றார்.
7 கொழுத்த குதிரைகள் வெளிப்பட்டதும், உலகெங்கும் சுற்றி வரத் துடித்தன; அப்போது அவர், "போய்ச் சுற்றி வாருங்கள்" என்றார். உடனே கிளம்பி உலகெங்கும் சுற்றித் திரிந்தன.
8 அவர் என்னைக் கூவியழைத்து, "இதோ, வடநாட்டை நோக்கிப் போகும் குதிரைகள் நமது ஆவியை வடநாட்டின் மேல் இறங்கச் செய்தன" என்று சொன்னார்.
9 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
10 நாடுகடத்தப்பட்டுப் பபிலோனில் இருக்கிறவர்களிடமிருந்து வந்திருக்கிற ஓல்தாயி, தோபியாஸ், இதாயியா ஆகியவர்கள் கொடுப்பதைப் பெற்றுக்கொள்; அன்றைக்கே புறப்பட்டு சொப்போனியாவின் மகன் யோசியாசின் வீட்டுக்குப் போ.
11 அங்கே அவர்கள் தந்த பொன், வெள்ளியைக் கொண்டு முடிசெய்து, தலைமைக் குருவாகிய யோசதேக்கின் மகன் யோசுவாவின் தலையில் அதைச் சூட்டு; சூட்டி,
12 'சேனைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "இதோ, 'தளிர்' என்னும் பெயரினர்; ஏனெனில் இவர் தம் வேரிலிருந்தே தளிர்ப்பார், ஆண்டவரின் திருக்கோயிலைக் கட்டுவார்.
13 இவர் தான் ஆண்டவரின் திருக்கோயிலைக் கட்டுவார், அரச மகிமையைப் பூண்டுகொள்வார், அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்வார். அவருடைய அரியணை அருகில் அர்ச்சகர் ஒருவர் இருப்பார்; இருவர்க்கும் இடையில் நிறைவான சமாதானம் இருக்கும்" என்று சொல்.
14 அந்த மணிமுடி ஆண்டவரின் திருக்கோயிலில் ஓல்தாயி, தோபியாஸ், இதாயியா ஆகியோர்க்கும், சொப்போனியாவின் மகன் யோசியாசுக்கும் நினைவுச் சின்னமாய் இருக்கும்.
15 தொலை நாட்டிலிருப்பவர்களும் வந்து ஆண்டவரின் திருக்கோயிலைக் கட்ட உதவி செய்வார்கள்; அப்போது சேனைகளின் ஆண்டவர் தாம் உங்களிடம் என்னை அனுப்பினார் என்பதை அறிந்து கொள்வீர்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் சொல்லுக்கு நீங்கள் கவனமாய்க் கீழ்ப்படிந்தால், இதெல்லாம் நிறைவேறும்."
×

Alert

×