Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Romans Chapters

Romans 2 Verses

1 ஆகையால், பிறருக்குத் திர்ப்பிடும் மனிதா, நீ யாராயினும் சரி, சாக்குச் சொல்லுவதற்கு வழியில்லை. ஏனெனில், பிறருக்குத் தீர்ப்பிடுவதால் நீ உனக்கு எதிராகவே தீர்ப்புக் கூறுகிறாய்; தீர்ப்புக்கூறும் நீயே அவற்றைச் செய்கிறாயே!
2 இத்தகைய செயல்களைச் செய்வோருக்குக் கடவுள் இடும் தீர்ப்பு நீதி வழுவாதது என்று நமக்குத் தெரியும்.
3 இவற்றைச் செய்பவர்களின் மேல் தீர்ப்புக் கூறும் நீயும் இவற்றையே செய்து வருகிறாய். நீ மட்டும் கடவுளின் தீர்ப்புக்குத் தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறாயா?
4 அல்லது, அவரது அளவற்ற பரிவையும் சகிப்பையும் பொறுமையையும் புறக்கணிக்கின்றாயா ? கடவுள் பரிவு காட்டுவது உன்னை மனந்திரும்பத் தூண்டுவதற்கே என்பதை அறியாயோ?
5 உன் முரட்டுத் தனம் உன்னை மனந்திரும்ப விடவில்லை; ஆகையால், கடவுளின் சினமும் நீதித் தீர்ப்பும் வெளிப்பட வேண்டிய நாளில் உன்மேல் விழப் போகும் தண்டனையை நீ சேர்த்து வைக்கின்றாய்.
6 அவரோ ஒவ்வொருவனுக்கும் அவனவன் செயல்களுக்கேற்பக் கைம்மாறு தருவார்.
7 நற்செயல் செய்வதில் உறுதி தளராமல், மகிமையும், மாண்பும் அழியாமையும் தேடுவோர்க்கு முடிவில்லாத வாழ்வை வழங்குவார்.
8 ஆனால், கட்சி மனப்பான்மை உள்ளவர்களாய், உண்மைக்குப் பணியாமல், அநியாயத்திற்குப் பணிபவர்களின் தலைமேல் அவருடைய சினமும் வெகுளியும் வந்து விழும்.
9 முதலில் யூதனுக்கும், அடுத்துக் கிரேக்கனுக்கும், தீமை செய்யும் எந்த மனிதனுக்குமே, வேதனையும் நெருக்கடியும் உண்டாகும்.
10 அவ்வாறே, முதலில் யூதனுக்கும், அடுத்துக் கிரேக்கனுக்கும், நன்மை செய்யும் அனைவருக்குமே, மகிமையும் மாண்பும் அமைதியும் கிடைக்கும்.
11 ஏனெனில், ஆளுக்கொரு நீதி என்பது கடவுளிடம் இல்லை.
12 திருச்சட்டத்தை அறியாமல் பாவஞ் செய்தவன் எவனும் திருச்சட்டத்தின் தீர்ப்புக்கு உட்படாமலேயே அழிவுறுவான்; திருச்சட்டத்திற்கு உட்பட்டுப் பாவம் செய்தவன் எவனும் திருச்சட்டத்தினால் தீர்ப்பிடப்படுவான்.
13 ஏனெனில், திருச்சட்டத்தைக் கேட்பதால் மட்டும் யாரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பவர்களே அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
14 திருச்சட்டத்தைப் பெற்றிராத புறவினத்தார் அதில் உள்ள கட்டளைகளை இயல்பாகேவே நிறைவேற்றும்போது, அவர்களுக்குத் திருச்சட்டம் இல்லாத போதிலும் அவர்கள் உள்ளமே சட்டமாய் அமைகிறது.
15 திருச்சட்டம் கற்பிக்கும் செயல்முறை தங்கள் உள்ளத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் எண்பிக்கிறார்கள்; ஏனெனில், அவர்களுடைய மனச்சான்று அதற்குச் சாட்சியாய் நிற்கிறது. பிறர் செய்வது குற்றமா, குற்றமில்லையா என அவர்கள் தங்கள் மனத்திற்குள் தீர்ப்பிடுவதும் அதற்குச் சாட்சி.
16 நான் அறிவிக்கும் நற்செய்தியில் உள்ளதுபோல, இயேசுகிறிஸ்துவின் வாயிலாய்க் கடவுள் மனிதர் உள்ளங்களில் மறைந்திருப்பவற்றைத் தீர்ப்பிடும் நாளில் மேற்சொன்னவையெல்லாம் வெளியாகும்.
17 ஆனால் யூதன் என்னும் பெயர் தாங்கியுள்ள நீ திருச்சட்டத்தில் ஊன்றி நிற்கிறாய்;
18 கடவுளைப்பற்றிப் பெருமைப் படுகிறாய்; அவருடைய திருவுளத்தை அறிந்திருக்கிறாய்; திருச்சட்டத்தைக் கற்றறிந்தவனாதலால் நன்மையானதைத் தேர்ந்து தெளிகிறாய்.
19 அறிவும் உண்மையுமே உருவான திருச்சட்டம் உனக்கு உண்டென்கிற துணிவில்,
20 குருடர்களுக்கு வழிகாட்டியாகவும், இருளில், இருப்போருக்கு ஒளியாகவும் அறிவீனர்களுக்கு ஆசானாகவும், குழந்தைகளுக்குப் போதகனாகவும் இருக்க முற்படுகிறாய்.
21 இவ்வாறு பிறனுக்குப் போதிக்கும் நீ, உனக்கே போதித்துக்கொள்ள வில்லையே! திருடாதே எனக் கற்பிக்கும் நீ, திருடுகிறாய்!
22 விபசாரம் செய்யாதே எனச் சொல்லும் நீ, விபசாரம் செய்கிறாய்! தெய்வங்களின் சிலைகளை அருவருக்கும் நீ, கோயில்களைக் கொள்ளையிடுகிறாய்!
23 திருச்சட்டத்தைப் பற்றிப் பெருமைப் படும் நீ, அச்சட்டத்தை மீறிக் கடவுளை இழிவு படுத்துகிறாய்!
24 ஆம், மறை நூலில் உள்ளவாறு 'உங்களால் கடவுளின் பெயர் புறவினத்தாரிடையே பழிப்புக்குள்ளாகிறது'.
25 திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தால் விருத்தசேதனத்தால் பயனுண்டு, மெய்தான்; ஆனால் திருச்சட்டத்தை மீறுபவனாய் இருந்தால், நீ விருத்தசேதனம் பெற்றிருந்தும் பெறாதவனாகிவிட்டாய்.
26 ஆகையால், விருத்தசேதனம் செய்துகொள்ளாத ஒருவன் திருச்சட்டத்தின் முறைமைகளைக் கடைபிடித்தால், விருத்தசேதனம் இல்லாத நிலை, விருத்தசேதனம் உள்ள நிலைபோல் கருதப்படும் அன்றோ?
27 உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ளாமல் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவன் எழுதிய சட்டத்தையும் விருத்த சேதனத்தையும் பெற்றிருந்தும், திருச் சட்டத்தை மீறுகின்ற உனக்குத் தீர்ப்பிடுவான்.
28 ஏனெனில், புறத்திலே மட்டும் யூதனாய் இருப்பவன் யூதனல்லன்; அவ்வாறே புறத்தில், அதாவது, உடலில் மட்டும் செய்யப்படும் விருத்தசேதனமும், விருத்தசேதனமன்று.
29 ஆனால், உள்?ர யூதனாய் இருப்பவனே யூதன்; எழுதிய சட்டத்தின்படியல்லாமல், ஆவியானவர் அருளியபடி உள்ளத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே, விருத்தசேதனம். அத்தகையவன் மனிதரிடமிருந்து அன்று, கடவுளிடமிருந்தே பாராட்டுப் பெறுவான்.
×

Alert

×