Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 53 Verses

1 தேவன் இல்லை என்று அறிவில்லாதவன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; [QBR] அவர்கள் தங்களைக் கெடுத்து, [QBR] அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்; [QBR] நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. [QBR]
2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, [QBR] தேவன் பரலோகத்திலிருந்து மனிதர்களைக் கண்ணோக்கினார். [QBR]
3 அவர்கள் எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; [QBR] நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை. [QBR]
4 அக்கிரமக்காரர்களுக்கு அறிவு இல்லையா? [QBR] அப்பத்தை சாப்பிடுகிறதுபோல் என்னுடைய மக்களைச் சாப்பிடுகிறார்களே; [QBR] அவர்கள் தேவனைக் கூப்பிடுகிறதில்லை. [QBR]
5 உனக்கு விரோதமாக முகாமிடுகிறவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறடித்ததால், [QBR] பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; [QBR] தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய். [QBR]
6 சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; [QBR] தேவன் தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, [QBR] யாக்கோபுக்குச் சந்தோஷமும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். [PE]
×

Alert

×