தேவன் இல்லை என்று அறிவில்லாதவன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; [QBR] அவர்கள் தங்களைக் கெடுத்து, [QBR] அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்; [QBR] நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. [QBR]
அக்கிரமக்காரர்களுக்கு அறிவு இல்லையா? [QBR] அப்பத்தை சாப்பிடுகிறதுபோல் என்னுடைய மக்களைச் சாப்பிடுகிறார்களே; [QBR] அவர்கள் தேவனைக் கூப்பிடுகிறதில்லை. [QBR]
உனக்கு விரோதமாக முகாமிடுகிறவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறடித்ததால், [QBR] பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; [QBR] தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய். [QBR]