உன் கழுத்து தந்தக் கோபுரம் போலுள்ளது. உன் கண்கள் பத்ரபீம் வாயிலருகே உள்ள எஸ்போன் குளங்கள்போல உள்ளன. உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கியுள்ள லீபனோனின் கோபுரம் போன்றுள்ளது.
நான் இம்மரத்தில் ஏறவிரும்புகிறேன். இதன் கிளைகளைப் பற்றிக்கொள்வேன். இப்போது உன் மார்பகங்கள் திராட்சைக் குலைகளைப் போலவும், உன் சுவாசத்தின் வாசனை கிச்சிலிப் பழங்கள் போலவும் இருப்பதாக.
தூதாயீம் பழத்தின் மணம் வீசும் எல்லா வகைப் பூக்களும் நம் வாசலருகில் உள்ளன. ஆம் என் அன்பரே உமக்காக நான் பல மகிழ்ச்சியான பொருட்களை சேர்த்து வைத்திருக்கிறேன். அவை பழையதும் புதியதுமாக அருமையாக உள்ளன.