இப்போது எழுந்திருந்து நான் நகரைச் சுற்றி வருவேன். அங்குள்ள வீதிகளிலும் சந்துக்கங்களிலும் என் நேசரைத் தேடுவேன். நான் அவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் என்னால் அவரைக் காணமுடியவில்லை.
காவலர்கள் என்னைவிட்டுப் போனதும், நான் என் நேசரைக் கண்டுபிடித்தேன். அவரைப் பற்றிக் கொண்டேன். என் தாய் வீட்டில் என்னைப் பெற்றெடுத்த, என் தாயின் அறைக்கு அவரை நான் அழைத்துச் செல்லும்வரை நான் அவரைப் போகவிடவில்லை.
பெரும் ஜனங்கள் கூட்டத்தோடு வனாந்தரத்திலிருந்து வருகின்ற அந்தப் பெண் யார்? மேகங்களின் கூட்டத்தைப்போல வெள்ளைப் போளத்திலும், சாம்பிராணியிலும், சகல நறுமணத்திலும், வரும் புகைபோல அவர்களுக்குப் பின்னால் புழுதி எழும்புகிறது.
அதன் தூண்கள் வெள்ளியால் ஆனது. அதன் இருக்கை நீலங்கலந்த சிவப்பு நிறமான துணியால் மூடப்பட்டிருந்தது. எருசலேமின் பெண்கள் அதன் உட்பகுதியை மிகப் பிரியத்தோடு அன்பால் அலங்கரித்திருக்கிறார்கள்.
சீயோனின் பெண்களே! வெளியே வாருங்கள். சாலொமோன் அரசனைப் பாருங்கள். திருமண நாளில் அவனது தலைமேல் அவன் தாய் அணிவித்த கிரீடத்தை பாருங்கள். அந்த நாளில் அவன் மிகுந்த சந்தோஷமாய் இருந்தான்.