மோசேயும் ஆரோனும் அவரது ஆசாரியர்களில் இருவர். அவர் நாமத்தை அழைத்த மனிதர்களில் சாமுவேலும் ஒருவன். அவர்கள் கர்த்தரிடம் ஜெபித்தபோது அவர் அவர்களுக்குப் பதில் தந்தார்.
எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்கள் ஜெபங்களுக்குப் பதில் தந்தீர். ஜனங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு அவர்களைத் தண்டிப்பவர் என்பதையும், மன்னிக்கும் தேவன் நீரே என்பதையும் அவர்களுக்கு நீர் காட்டினீர்.