1
|
நான் தொல்லைகளில் சிக்குண்டிருந்தபோது, உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் காப்பாற்றினார்! |
2
|
கர்த்தாவே, என்னைப்பற்றிப் பொய் கூறியவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். உண்மையில்லாதவற்றை அந்த ஜனங்கள் கூறினார்கள். |
3
|
பொய்யரே, நீங்கள் பெறப்போவதை அறிவீர்களா? நீங்கள் அடையப்போவதை அறிவீர்களா? |
4
|
வீரனின் கூரிய அம்புகளும், சுடும் தழலும் உன்னைத் தண்டிக்கும். |
5
|
பொய்யர்களின் அருகே வாழ்வது மேசேக்கில் வாழ்வதைப் போன்றதும் கேதாரின் கூடாரங்களண்டையில் வாழ்வதைப் போன்றதுமாகும். |
6
|
சமாதானத்தை வெறுக்கிற ஜனங்களோடு நான் நீண்டகாலம் வாழ்ந்திருக்கிறேன். |
7
|
நான் சமாதானம் வேண்டும் என்றேன். ஆனால் அவர்கள் போரை விரும்புகிறார்கள். |
Psalms 120:7 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...