1
|
இவை, லேமுவேல் அரசன் சொன்ன ஞான மொழிகள். இவற்றை அவனதுதாய் அவனுக்குக் கற்பித்தாள். |
2
|
ஜெபத்தின் மூலம் பெற்ற நீயே என் அன்பிற்குரிய மகன். |
3
|
உனது வல்லமையைப் பெண்களிடம் இழக்காதே. பெண்கள் அரசர்களை அழித்திருக்கிறார்கள். எனவே உன்னை அவர்களிடத்தில் தராதே. |
4
|
லேவமுவேலே, அரசர்கள் மதுவைக் குடிப்பது அறிவுள்ள செயல் அல்ல. ஆளுபவர்கள் மதுவை விரும்புவது அறிவுடையது அல்ல. |
5
|
அவர்கள் மிகுதியாகக் குடித்துவிட்டு சட்டங்களை மறந்துவிடுவார்கள். பின் அவர்கள் ஏழை ஜனங்களின் உரிமைகளை எடுத்துவிடக்கூடும். |
6
|
ஏழை ஜனங்களுக்கு மதுவைக் கொடு. திராட்சைரசத்தை துன்பப்படுகிற ஜனங்களுக்குக் கொடு. |
7
|
பிறகு அவர்கள் அதனைக் குடித்துவிட்டு தாம் ஏழை என்பதை மறக்கட்டும். அவர்கள் குடித்துவிட்டு தம் எல்லா துன்பங்களையும் மறக்கட்டும். |
8
|
ஒருவன் தனக்குத்தானே உதவிக்கொள்ள முடியாவிட்டால், நீ அவனுக்கு உதவவேண்டும். எவனால் பேசமுடியாதோ, அவனுக்காக பேசு. துன்பப்படுகிற அனைத்து ஜனங்களுக்கும் நீ உதவ வேண்டும். |
9
|
சரியென்று தெரிந்தவற்றின் பக்கம் நில். நேர்மையாக நியாயம்தீர்த்துவிடு. ஏழை ஜனங்களின் உரிமையைக் காப்பாற்று. தேவையிலிருக்கும் ஜனங்களுக்கு உதவு. |
10
|
"பரிபூரணமுள்ள மனைவியைக்" கண்டுபிடிப்பது கடினம். ஆனால் அவள் நகைகளைவிட அதிக விலைமதிப்புடையவள். |
11
|
அவள் கணவன் அவளைச் சார்ந்திருப்பான். அவன் ஒருபோதும் ஏழையாகமாட்டான். |
12
|
தன் வாழ்வு முழுவதும் அவள் தன் கணவனுக்கு நன்மையே செய்வாள். அவனுக்கு ஒருபோதும் துன்பம் உண்டாக்கமாட்டாள். |
13
|
அவள் எப்பொழுதும் ஆட்டு மயிரையும் சணல்நூலையும் சேகரிப்பாள். தனது கைகளினாலேயே ஆடைகளை மகிழ்ச்சியோடு தயாரிப்பாள். |
14
|
அவள் வெகுதூரத்திலிருந்து வரும் கப்பல்களைப்போன்றவள். எல்லா இடங்களிலிருந்தும் உணவு கொண்டுவருவாள். |
15
|
அதிகாலையில் எழும்பி தன் குடும்பத்துக்கு உணவு சமைப்பாள். வேலைக்காரர்களுக்கு அவர்களுடைய பங்கைக் கொடுப்பாள். |
16
|
அவள் நிலத்தைப் பார்த்து வாங்குவாள். அவள் பணத்தைச் சம்பாதித்துச் சேர்த்து திராட்சைக் கொடிகளை நடுவாள். |
17
|
அவள் கடினமாக உழைப்பாள். அவள் தனது எல்ல வேலைகளையும் செய்யும் பலம் கொண்டவள். |
18
|
தன் உழைப்பால் உருவான பொருட்களை விற்கும்போது எப்பொழுதும் அவள் லாபத்தை அடைவாள். அவள் இரவில் அதிக நேரம் வேலைச் செய்த பிறகே ஓய்வெடுக்கிறாள். |
19
|
அவள் தனக்குத் தேவையான நூலைத் தானே தயாரிக்கிறாள்.தனக்குத்தேவையானஆடைகளைத் தானே நெய்கிறாள். |
20
|
ஏழைகளுக்கு எப்போதும் அள்ளித் தருகிறாள். தேவையானவர்களுக்கு உதவி செய்கிறாள். |
21
|
பனிக் காலத்தில் அவள் தன் குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டாள். ஏனென்றால் அனைவருக்கும் நல்ல வெப்பமான ஆடைகளை அவள் தந்துள்ளாள். |
22
|
அவள் கம்பளங்களைச் செய்து படுக்கையில் விரிக்கிறாள். மிக அழகான புடவையை அணிகிறாள். |
23
|
ஜனங்கள் அவளது கணவனை மதிக்கின்றனர். அவன் அந்நாட்டுத் தலைவர்களுள் ஒருவன். |
24
|
அவள் ஒரு நல்ல வியாபாரி. அவள் ஆடைகளையும் கச்சைகளையும் தயாரிக்கிறாள். இவற்றை வியாபாரிகளிடம் விற்கிறாள். |
25
|
அவள் போற்றப்படுவாள். ஜனங்கள் அவளை மதிக்கின்றனர். அவள் எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்குகிறாள். |
26
|
அவள் ஞானத்தோடு பேசுகிறாள். ஜனங்கள் அன்போடும் கருணையோடும் இருக்கவேண்டும் என்று அவள் போதிக்கின்றாள். |
27
|
அவள் ஒருபோதும் சோம்பேறியாக இருப்பதில்லை. தன் வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் அக்கறையோடு பார்த்துக்கொள்கிறாள். |
28
|
அவளது குழந்தைகள் அவளைப் பற்றி நல்லவற்றைக் கூறுவார்கள். அவளது கணவனும் அவளைப் பாராட்டிப் பேசுகிறான். |
29
|
"எத்தனையோ நல்ல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் நீதான் சிறந்தவள்" என்கிறான். |
30
|
ஒரு பெண்ணின் தோற்றமும் அழகும் உன்னை ஏமாற்றலாம். ஆனால் கர்த்தருக்கு பயப்படுகிற பெண்ணே பாராட்டுக்குரியவள். |
31
|
அவளுக்குப் பொருத்தமான பரிசைக் கொடு. எல்லோரும் அறியும்வகையில் அவளது செயல்களைப் பாராட்டு. |
Proverbs 31:16 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...