1
|
சகோதர சகோதரிகளே, இப்பொழுது இவை நடக்கும் காலத்தையும் தேதியையும் எழுதத் தேவை இல்லை. |
2
|
கர்த்தர் வரும் நாள் இரவில் திருடன் திடீரென்று வருவது போல் ஆச்சரியமாக இருக்கும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். |
3
|
"நாங்கள் சமாதானத்தோடும், பாதுகாப்போடும் இருக்கிறோம் என்று மக்கள் சொல்வார்கள். அப்பொழுது அவர்களுக்கு அழிவு திடீரென வரும். அவ்வழிவு கர்ப்பவதியின் பிரசவ வேதனை போன்று திடீரென வரும். அவர்கள் தப்பமுடியாது. |
4
|
ஆனால் நீங்கள் இருட்டில் வாழவில்லை. எனவே திருடனைப் போல அந்த நாள் உங்களுக்கு ஆச்சரியத்தைத் தராது. |
5
|
நீங்கள் யாவரும் வெளிச்சத்தைச் சேர்ந்தவர்கள், நீங்கள் பகலுக்குரியவர்கள். நாம் இருளைச் சேர்ந்தவர்கள் இல்லை. நாம் இரவுக்குரியவர்களும் இல்லை. |
6
|
எனவே நாம் ஏனைய மக்களைப் போன்று இருக்கக் கூடாது. நாம் தூங்கிக் கொண்டிருக்கக் கூடாது. விழிப்புடனும், சுயகட்டுப்பாட்டுடனும் இருக்கவேண்டும். |
7
|
தூங்கும் மக்கள் இரவுப்பொழுதில் தூங்குவார்கள். குடித்து வெறிகொள்பவர்கள் இரவுப் பொழுதில் குடிப்பார்கள். |
8
|
ஆனால் நாம் பகலுக்குரியவர்கள். எனவே நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மைக் காத்துக் கொள்வதற்காக விசுவாசம், அன்பு என்னும் மார்புக் கவசத்தை அணிந்து கொள்வோம். நம் தலைக்கவசமாய் இட்சிப்பின் நம்பிக்கை அமையும். |
9
|
[This verse may not be a part of this translation] |
10
|
அவரோடு நாம் அனைவரும் இணைந்து வாழும்பொருட்டு, நமக்காக அவர் இறந்தார். எனவே, இயேசு வரும்போது, நாம் உயிருடன் இருக்கிறோமோ அல்லது இறந்துபோவோமா என்பது முக்கியமில்லை. |
11
|
எனவே ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருங்கள். மேலும் நீங்கள் செய்து கொண்டிருப்பது போல ஒருவரையொருவர் பலப்படுத்துங்கள். |
12
|
சகோதர சகோதரிகளே! உங்களோடு கடுமையாய் உழைப்பவர்களுக்கு மதிப்பளியுங்கள். கர்த்தருக்குள் அவர்களே உங்கள் தலைவர்கள். ஆத்தும அளவில் அவர்களே உங்களுக்கு வழிகாட்டுகிறார்கள். |
13
|
அவர்கள் செய்துகொண்டிருக்கிற செயலுக்காக அவர்களை அன்போடு மதியுங்கள். ஒருவருக்கொருவர் சமாதானமாய் வாழுங்கள். |
14
|
சகோதர சகோதரிகளே! உழைக்காத மக்களை எச்சரிக்கை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். அஞ்சுகிறவர்களை உற்சாகப்படுத்துங்கள். பலவீனமானவர்களுக்கு உதவுங்கள். எல்லாரிடமும் பொறுமையாய் இருங்கள். |
15
|
ஒருவரும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் எப்பொழுதும் நன்மை செய்து கொள்ளவும் எல்லாருக்கும் நன்மை செய்யவும் முயலுங்கள். |
16
|
எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். |
17
|
பிரார்த்தனை செய்வதை நிறுத்தாதீர்கள். |
18
|
தேவனுக்கு எப் பொழுதும் நன்றி செலுத்துங்கள். இயேசு கிறிஸ்துவில் இதையே உங்களிடம் தேவன் விரும்புகிறார். |
19
|
பரிசுத்தாவியானவருக்கான வேலையை நிறுத்தாதீர்கள். |
20
|
தீர்க்கதரிசனங்களை முக்கியமற்ற ஒன்றாக எண்ணாதீர்கள். |
21
|
ஆனால் எல்லாவற்றையும் சோதித்து அறியுங்கள். நல்லவற்றை வைத்துக் கொள்ளுங்கள். |
22
|
எல்லா வகையான தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள். |
23
|
சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முழுமையாகப் பரிசுத்தமாக்கும் பொருட்டு தேவனிடம் பிரார்த்தனை செய்கிறோம். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது உங்கள் ஆவி, ஆன்மா, சரீரம் முழுவதும் குற்றமில்லாததாய் இருக்கும்படி காக்கப்படுவதாக. |
24
|
உங்களை அழைக்கிற தேவன் இவற்றை உங்களுக்குச் செய்வார். அவரை நம்புங்கள். |
25
|
சகோதர சகோதரிகளே! எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். |
26
|
நீங்கள் சந்திக்கும்போது ஒருவரையொருவர் பரிசுத்தமாக முத்தமிட்டுக் கொள்ளுங்கள் |
27
|
அனைத்து சகோதர சகோதரிகளிடமும் இந்த நிருபம் வாசிக்கப்பட வேண்டும் என்று உங்களுக்குக் கர்த்தரின் அதிகாரத்தால் ஆணையிட்டுக் கூறுகிறேன். |
28
|
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களுடன் இருப்பதாக! |
1-Thessalonians 5:19 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...