1
|
பின்னர் அவர் தலைமைக்குருவாகிய யோசுவாவைக் காட்டினார்; இவர் ஆண்டவரின் தூதர் முன்னிலையில் நின்றிருந்தார்; இவர் மேல் குற்றஞ்சாட்ட வந்திருந்த சாத்தான் வலப்பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். |
2
|
ஆண்டவர் சாத்தானைப் பார்த்து, "சாத்தானே, ஆண்டவர் உன்னைக் கண்டிப்பாராக! யெருசலேமைத் தேர்ந்து கொண்ட ஆண்டவர் உன்னைக் கண்டிப்பாராக! நெருப்பிலிருந்து எடுக்கப்பட்ட கொள்ளியல்லவா இவர்?" என்று சொன்னார். |
3
|
யோசுவாவோ அழுக்குப் படிந்த ஆடைகளையுடுத்தவராய்த் தூதர் முன் நின்று கொண்டிருந்தார். |
4
|
தூதரோ தம் முன்னால் நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி, "அழுக்குப் படிந்த ஆடைகளை இவரிடமிருந்து அகற்றுங்கள்" என்றார்; பின் அவரிடம், "இதோ, உன்னிடமிருந்து உன் அக்கிரமத்தை அகற்றிவிட்டேன்; சிறந்த ஆடையை உனக்கு உடுத்தினேன்" என்றார். |
5
|
மேலும், "தலைப்பாகையொன்றை அவர் தலையில் சூட்டுங்கள்" என்றார். அவ்வாறே அவர்கள் அவருக்குத் தலைப்பாகை சூட்டிச் சிறந்த ஆடைகளை உடுத்தினர்; ஆண்டவரின் தூதரோ அவ்விடத்திலேயே நின்று கொண்டிருந்தார். |
6
|
பின்பு, ஆண்டவரின் தூதர் யோசுவாவுக்குச் செய்த அறிக்கை அதுவே: |
7
|
சேனைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நம்முடைய நெறிகளில் வழுவாமல் ஒழுகி நம் கற்பனைகளைக் கடைப்பிடித்தால், நம் இல்லத்தில் நீ ஆளுவாய்; நம் பிராகாரங்களுக்கும் பொறுப்பாய் இருப்பாய்; இங்கே நிற்கும் தூதர்களோடு சேர்ந்து கொள்ள உனக்கு உரிமை தருவோம். |
8
|
தலைமைக் குருவாகிய யோசுவாவே, நீயும், உன் முன்னால் அமர்ந்திருக்கும் உன் நண்பர்களும் கேளுங்கள்; அவர்கள் நல்லடையாளமான மனிதர்கள்: இதோ, நாம் நம் ஊழியனைக் கொண்டு வருவோம்: 'தளிர்' என்பது அவர் பெயர். |
9
|
இதோ, யோசுவாவின் முன்பு நாம் நாட்டுகின்ற கல் இதுவே; இந்த ஒரே கல்லில் ஏழு கண்கள் ஒளிர்கின்றன; நாமே அதில் எழுத்துகளைப் பொறிப்போம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; மேலும் ஒரே நாளில் இந்த நாட்டின் அக்கிரமத்தை அகற்றுவோம். |
10
|
அந்நாளில், ஒவ்வொருவனும் தன் அயலானைத்தன் திராட்சைக்கொடியின் கீழும், அத்திமரத்தின் கீழும் வந்து தங்கி இளைப்பாற அழைப்பான், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்." |
Zechariah 3:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...