Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Zechariah Chapters

Zechariah 11 Verses

1 லீபானே, உன் வாயில்களைத் திற, நெருப்பு உன் கேதுரு மரங்களை எரிக்கட்டும்.
2 தேவதாரு மரங்களே, புலம்பியழுங்கள்; ஏனெனில் கேதுரு மரங்கள் வீழ்ந்தன, சிறந்த மரங்கள் பாழாயின. பாசான் நாட்டுக் கருவாலி மரங்களே, புலம்பியழுங்கள்; ஏனெனில் அடர்ந்த காடு வெட்டி வீழ்த்தப்பட்டது.
3 ஆயர்களின் புலம்பல் கேட்கிறது, ஏனெனில் அவர்கள் பெருமை பாழாகிவிட்டது; சிங்கங்களின் கர்ச்சனை கேட்கிறது, ஏனெனில் யோர்தான் காடு அழிக்கப்பட்டது.
4 என் கடவுளாகிய ஆண்டவர் கூறிய வாக்கு இதுவே: "அடிக்கப்படப்போகும் ஆடுகளை மேய்;
5 அவற்றை வாங்குகிறவர்கள் அவற்றைக் கொல்லுகிறார்கள்; ஆயினும் அவர்களுக்குத் தண்டனை கிடைப்பதில்லை; அவற்றை விற்கிறவர்களோ, 'ஆண்டவர்க்குப் புகழ் உண்டாவதாக! எங்களுக்குச் செல்வம் சேர்ந்தது' என்று சொல்லுகிறார்கள்; அவற்றின் சொந்த இடையர்களே அவற்றின் மீது இரக்கம் காட்டுகிறதில்லை.
6 இனி, இந்த நாட்டில் வாழ்கிறவர்கள் மேல் நாம் இரக்கம் காட்டமாட்டோம், என்கிறார் ஆண்டவர். இதோ, ஒவ்வொருவனையும் அவன் அயலானுடைய கையிலும், அரசனுடைய கையிலும் சிக்கும்படி, மனிதர்களை நாம் கையளிக்கப்போகிறோம்; அவர்கள் நாட்டைப் பாழ்படுத்துவார்கள்; அவர்கள் கையிலிருந்து யாரையும் நாம் தப்புவிக்கமாட்டோம்."
7 அவ்வாறே கொல்லப்படப்போகிற ஆடுகளை நான் ஆட்டு வணிகருக்காக மேய்க்கும் ஆயனானேன். நான் இரண்டு கோல்களை எடுத்து, 'பரிவு' என்று ஒன்றுக்கும், 'ஒன்றிப்பு' என்று மற்றதற்கும் பெயரிட்டேன்; ஆடுகளை மேய்த்து வந்தேன்.
8 ஒரே மாதத்தில் நான் மூன்று இடையர்களை அகற்றினேன்; அவர்களை என்னால் பொறுக்க முடியவில்லை; அவர்களும் என்னை வெறுத்தார்கள்.
9 ஆகையால், "உங்களை இனி நான் மேய்க்கப் போவதில்லை; சாகிறது சாகட்டும், அழிக்கப்படுவது அழிக்கப்படட்டும்; எஞ்சியிருப்பவை ஒன்றன் சதையை மற்றொன்று பிடுங்கித் தின்னட்டும்" என்று சொல்லி,
10 'பரிவு' என்கிற என் கோலையெடுத்து, மக்களினங்கள் யாவற்றுடனும் நான் செய்திருந்த உடன்படிக்கை முறியும்படி கோலை ஒடித்துப் போட்டேன்.
11 அன்றே உடன்படிக்கை முறிந்தது; என்னைக் கவனித்துக் கொண்டிருந்த ஆட்டு வணிகர், இது ஆண்டவரின் வாக்கு என்பதை உணர்ந்து கொண்டார்கள்.
12 அப்போது நான் அவர்களைப் பார்த்து, "உங்களுக்குச் சரியென்றுபட்டால், எனக்குக் கூலி கொடுங்கள்; இல்லையேல், வேண்டாம்" என்று சொன்னேன். அப்போது அவர்கள் எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிப் பணங்களை நிறுத்தனர்.
13 ஆண்டவர் என்னைப் பார்த்து, "சிறந்த மதிப்பாக உன்னை மதிப்பிட்டு அவர்கள் கொடுத்த இப்பணத்தைக் கருவூலத்தில் எறிந்து விடு" என்றார். அவ்வாறே அந்த முப்பது வெள்ளிப் பணங்களை ஆண்டவரின் இல்லத்திலிருந்த கருவூலத்தில் போட்டு விட்டேன்.
14 யூதாவுக்கும் இஸ்ராயேலுக்கும் இருந்த சகோதர ஒருமைப்பாடு முறியும்படி, 'ஒன்றிப்பு' என்னும் என் இரண்டாம் கோலையும் ஒடித்துப் போட்டேன்.
15 பின்பு ஆண்டவர் எனக்குக் கூறிய வாக்கு இதுவே: "இன்னொரு முறை மதியற்ற இடையனுக்குரிய கருவிகளை எடுத்துக் கொள்.
16 ஏனெனில் இதோ, அழிந்து போவதைக் காப்பாற்றாதவனும், காணாமற் போனதைக் தேடாதவனும், காயம் பட்டதைக் குணமாக்காதவனும், நலமுடனிருப்பதை உண்பிக்காதவனும், ஆனால் கொழுத்தவற்றின் இறைச்சியைத் தின்பவனும், அவற்றின் குளம்புகளைக் கூடத் தறிப்பவனாகிய ஓர் இடையனை இந்த நாட்டில் தோன்றச் செய்வோம்.
17 மந்தையைக் கைவிடுகிற பயனற்ற இடையனுக்கு ஐயோ கேடு! அவன் கையையும் வலக்கண்ணையும் வாள் வெட்டுவதாக! அவனுடைய கை முற்றும் உலர்ந்து போகட்டும், அவனது வலக்கண் இருண்டு குருடாகட்டும்! "
×

Alert

×