Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Zechariah Chapters

Zechariah 10 Verses

1 இளவேனிற் காலத்தில் ஆண்டவரிடமிருந்து மழை கேளுங்கள்; ஆண்டவர் தாம் மின்னல்களை உண்டாக்குகிறவர்; மனிதர்களுக்கு மழையைத் தருகிறவர் அவரே, பயிர் பச்சைகளை முளைப்பிப்பவரும் அவரே.
2 குலதெய்வங்கள் சொல்வது வீண், குறிசொல்பவர்கள் பொய்களையே பார்த்துச் சொல்லுகிறார்கள்; கனவு காண்கிறவர்கள் ஏமாற்றுக் கனவுகளையே காண்கின்றனர், அவர்களுடைய ஆறுதல் மொழிகள் வெறும் சொற்கள் தான். ஆதலால் மக்கள் ஆடுகளைப் போல் அலைகின்றனர், ஆயனில்லாததால் துன்புறுகின்றனர்.
3 ஆயர்கள் மேல் நாம் சினங்கொண்டோம், வெள்ளாட்டுக் கடாக்களைத் தண்டிப்போம்; சேனைகளின் ஆண்டவர் தம் மந்தையாகிய யூதாவின் வீட்டாரைக் கண்காணிக்கிறார்; வீரமிகும் போர்க் குதிரைகளைப் போல் அவற்றை ஆக்குவார்.
4 யூதாவினின்றே மூலைக்கல் தோன்றும், அதினின்றே கூடாரத்தைத் தாங்கும் முளையும், போர்க்களத்தில் பயன்படும் வில்லும், ஆளுநர் அனைவரும் கிளம்புவார்கள்.
5 தெருவில் சேற்றை மிதிப்பது போலப் பகைவரை மிதிக்கும் மாபெரும் வீரர்களாய்ப் போர்க்களத்தில் விளங்குவர்; ஆண்டவர் அவர்களோடிருப்பதால் வீரத்தோடு போர்புரிவர்; குதிரை மேல் வரும் மாற்றாரை நாணச்செய்வர்.
6 யூதாவின் வீட்டாரை வலிமைப்படுத்துவோம், யூதாவின் வீட்டாரை மீட்டுக்கொள்வோம்; அவர்கள் மட்டில் நாம் இரக்கம் கொண்டுள்ளதால் அவர்கள் திரும்பி வருவார்கள்; ஒருபோதும் நம்மால் புறக்கணிக்கப் படாதவர்கள் போலிருப்பர்; ஏனெனில் நாமே அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்; ஆகவே அவர்களின் மன்றாட்டைக் கேட்டருள்வோம்.
7 அப்போது எப்பிராயீம் மக்கள் வீரரைப் போலாவர், மதுவருந்தியவர்கள் போல் அவர்கள் உள்ளம் மகிழும்; அவர்களுடைய பிள்ளைகள் கண்டு களிப்பார்கள், ஆண்டவரில் அவர்கள் உள்ளம் அக்களிக்கும்.
8 சீழ்க்கையடித்து நாம் அவர்களை ஒன்று கூட்டுவோம், ஏனெனில் அவர்களை மீட்டவர் நாமே; முன் போலவே அவர்கள் பெருகிப் பலுகுவார்கள்.
9 புறவினத்தார் நடுவில் அவர்களை நாம் சிதறடித்தாலும், தொலைநாடுகளில் நம்மை அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்; தங்கள் மக்களோடு வாழ்ந்து திரும்பி வருவார்கள்.
10 எகிப்து நாட்டிலிருந்து அவர்களை மீட்டுக் கொணர்வோம், அசீரியாவிலிருந்து அவர்களைக் கூட்டி வருவோம்; கலகாத், லீபான் நாடுகளுக்கு அவர்களைக் கொண்டு வருவோம், இனி இடமில்லை என்னும்படி வந்து சேருவார்கள்.
11 எகிப்து நாட்டின் கடலை அவர்கள் கடந்து செல்வார்கள், கடலலைகள் அடித்து நொறுக்கப்படும், நைல் நதியின் ஆழங்களெல்லாம் வறண்டுபோகும்; அசீரியாவின் செருக்கு தாழ்த்தப்படும், எகிப்து நாட்டின் கொடுங்கோல் பறிக்கப்படும்.
12 ஆண்டவரில் தான் அவர்கள் வல்லமை இருக்கும், அவருடைய பெயரில் அவர்கள் பெருமை கொள்வர்" என்கிறார் ஆண்டவர்.
×

Alert

×