Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Revelation Chapters

Revelation 12 Verses

1 விண்ணகத்தில் அரியதோர் அறிகுறி தோன்றியது; பெண் ஒருத்தி காணப்பட்டாள். அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்; நிலவின் மேல் நின்று கொண்டிருந்தாள்; தலையின் மீது பன்னிரு விண்மீன்களை முடியாகச் சூடியிருந்தாள்.
2 அவள் கருவுற்றிருந்தாள்; பேறுகால வேதனைப் பட்டுக் கடுந்துயருடன் கதறினாள்.
3 வேறொரு அறிகுறியும் விண்ணகத்தில் தோன்றியது. இதோ நெருப்பு மயமான ஒரு பெரிய பறவைநாகம் காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. தலைகளிலே ஏழு முடிகள் இருந்தன.
4 தன் வாலால் விண்மீன்களில் மூன்றிலொரு பகுதியை மண்மீது இழுத்துப்போட்டது. பேறு காலமான அப்பெண்முன் பறவைநாகம் நின்றது; அவள் பிள்ளையைப் பெற்றவுடன்.
5 அதனை விழுங்கிவிடக்காத்திருந்தது. எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருக்கும் ஓர் ஆண் குழந்தையை அவள் பெற்றெடுத்தாள். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணையுள்ள இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்தப் பெண் பாலைவனத்திற்கு ஓடிப்போனாள்.
6 அங்கே ஆயிரத்து இருநூற்று அறுபது நாட்கள் அவளைப் பேணும்படி கடவுள் ஓரிடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
7 பின் விண்ணகத்தில் ஒரு போர் உண்டாயிற்று. மிக்கேலும் அவருடைய தூதர்களும் பறவைநாகத்தோடு போர் தொடுத்தனர். பறவைநாகமும் அதன் தூதர்களும் போரிட்டனர்.
8 பறவைநாகமும் தோல்வியுற்றது. விண்ணகத்தில் அவர்களுக்கு இடமேயில்லாமல் போயிற்று. அப்பெரிய பறவைநாகம் வெளியே தள்ளப்பட்டது.
9 அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படும் அதுவே ஆதியில் தோன்றிய பாம்பு; உலகனைத்தையும் வஞ்சிப்பதும் அதுவே. அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது. அத்துடன் அதன் தூதர்களும் தள்ளப்பட்டனர்.
10 பின்பு விண்ணகத்தில் நான் பெரும் குரல் ஒன்று கேட்டேன்; அது சொன்னதாவது: "இதோ, வந்துவிட்டது, நம் கடவுள் தரும் மீட்பு. இதோ, அவரது வல்லமையும் அரசும் வெளியாயிற்று; இப்போது அவருடைய மெசியாவின் அதிகாரம் விளங்குகிறது; நம் சகோதரர்களைக் குற்றம் சாட்டியவன் வீழ்த்தப்பட்டான்; நம் கடவுளின் முன்னிலையில் இரவும் பகலும் அவர்களைக் குற்றம் சாட்டியவன் ஒழிந்தான்.
11 அவர்கள் செம்மறியின் இரத்தத்தினாலும், தாங்கள் சான்று பகர்ந்த வார்த்தையினாலும் அவனை வென்றனர். அவர்கள் சாவதற்கும் தயங்கவில்லை; தங்கள் உயிரைப் பொருட்படுத்தவில்லை.
12 ஆகவே, வானமே அங்கு வாழ்வோரே, அகமகிழுங்கள். ஆனால், வையகமே, பெருங்கடலே உங்களுக்கு ஐயோ கேடு! அலகை கடுங் கோபத்துடன் உங்களிடம் வந்துள்ளது. தனக்கு எஞ்சியிருப்பது சிறிது காலமே" என்று அதற்குத் தெரியும்.
13 தான் மண்மீது வீழ்த்தப்பட்டதைக் கண்டதும் பறவை நாகம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அப்பெண்ணைத் துரத்திச் சென்றது.
14 ஆனால் பாலைவனத்தில் குறிக்கப்பட்ட இடத்திற்குப் பறந்து செல்லும்படி பெருங் கழுதின் சிறகுகள் அப்பெண்ணுக்கு அளிக்கப்பட்டன. அங்கே அப்பாம்பின் கையில் பிடிபடாமல் மூன்றரை ஆண்டுக்காலம் பேணப்படுவாள்.
15 அப்பெண்ணை வெள்ளம் அடித்துச் செல்லும் பொருட்டு அவள் பின்னால் பறவைநாகம் தன் வாயினின்று ஆறுபோல் தண்ணீர் பாயச் செய்தது.
16 ஆனால் நிலம் அப்பெண்ணுக்குத் துணை நின்றது. பறவைநாகத்தின் வாயினின்று பாய்ந்த பெருவெள்ளத்தை அது தன் வாயைத் திறந்து உறிஞ்சிவிட்டது.
17 ஆகவே பறவைநாகம் பெண்மீது சினங்கொண்டு, எஞ்சிய அவள் பிள்ளைகளோடு போர் தொடுக்கச் சென்றது. அவர்கள் கடவுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசு தந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள்.
18 அரக்கப்பாம்பு கடற்கரையில் நின்றுகொண்டிருந்தது.
×

Alert

×