Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 72 Verses

1 இறைவா, அரசனிடம் உமது நீதி நேர்மை விளங்கச் செய்யும். அரச மகனிடம் உமது நீதித் தன்மை விளங்கச் செய்யும்.
2 நீதியோடு அவர் உம் மக்களை ஆள்வாராக. உம்முடையவரான எளியோரை நேர்மையுடன் நடத்துவாராக.
3 மலைகள் உம் மக்களுக்குச் சமாதானம் தருவனவாக: குன்றுகள் நீதியைக் காப்பனவாக.
4 எளிய மக்களை அவர் காப்பாராக, ஏழைகளின் மக்களை அவர் பாதுகாப்பாராக: கொடியவனை அவர் நொறுக்கி விடுவாராக.
5 கதிரவனைப் போல் அவர் நீடூழி வாழ்வாராக: நிலவைப்போல் தலைமுறை தலைமுறையாய் வாழ்வாராக.
6 புல்வெளியில் விழும் மழை போல் அவர் இருப்பார்: நிலத்தில் பாயும் நீர் போல் அவர் இருப்பார்.
7 அவரது ஆட்சியின் நாளில் நீதி செழித்தோங்குவதாக; சமாதானம் நிலை பெறும் நிலவு இருக்கும் வரையில் சமாதானம் நிலை பெறும்.
8 ஒரு கடலினின்று மறு கடல் வரைக்கும் அவர் அதிகாரம் செலுத்துவார்: நதியினின்று உலகின் எல்லை வரை அவர் ஆள்வார்.
9 அவருடைய எதிரிகள் வந்து அவர் முன் தெண்டனிடுவர்: அவருடைய பகைவர் மண்ணைக் கவ்வுவர்.
10 தார்சிஸ் நாட்டு மன்னர்களும் தீவுகளின் மன்னர்களும் காணிக்கைகள் கொணர்வர்: அராபியா, சாபா நாட்டு வேந்தர்களும் காணிக்கை செலுத்துவர்.
11 மாநிலத்தரசர் அனைவரும் அவரை வணங்குவர்: மக்களினத்தார் அனைவரும் அவருக்கு ஊழியம் செய்வர்.
12 தம்மைக் கூவி அழைக்கும் ஏழைக்கு அவர் விடுதலை தருவார். திக்கற்ற எளியவனை விடுவிப்பார்.
13 ஏழை எளியவர் மீது இரக்கம் கொள்வார். ஏழைகளின் வாழ்வை மலரச் செய்வார்.
14 கொடுமையினின்றும் துன்பத்தினின்றும் அவர்களை விடுவிப்பார். அவர்கள் இரத்தம் அவர் முன்னிலையில் விலை மிக்கது.
15 அவர் நீடூழி வாழ்க: சாபா நாட்டுத் தங்கம் அவருக்குக் காணிக்கையாகட்டும். அவருக்காக வேண்டுதல் என்றும் எழும்பும். என்றும் அவருக்கு ஆசி மொழி கிடைக்கும்.
16 நாட்டில் நிரம்பக் கோதுமை விளையட்டும்; உயர்ந்த மலைகளிலும் அதன் விளைச்சல் லீபானைப் போல் விளங்கட்டும். வயல் வெளிப் புல் போல நகர மக்கள் செழிக்கட்டும்.
17 அவரது பெயர் என்றென்றும் வாழ்த்தப் பெறுவதாக: கதிரோன் இருக்கும் வரை அவரது பேரும் புகழும் நிலைப்பதாக. அவர் வழியாய்ப் பூவுலக இனத்தார் அனைவரும் ஆசி பெறுவர். மக்கள் இனத்தார் அனைவரும் அவரைப் பேறுபெற்றவர் எனப் போற்றிப் புகழ்வர்.
18 இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் போற்றி: அவர் ஒருவரே வியத்தகு செயல்களைச் செய்கிறார்.
19 மாட்சியை விளங்கும் அவரது பெயர் என்றென்றும் வாழ்த்துப் பெறுவதாக: வையகம் அனைத்தும் அவர் புகழால் நிரம்புவதாக. ஆமென், ஆமென்.
20 20.
×

Alert

×