Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 38 Verses

1 ஆண்டவரே, நீர் சினம் கொண்டு என்னைக் கடிந்து கொள்ளாதேயும்: சீற்றங் கொண்டு என்னைத் தண்டியாதேயும்.
2 ஏனெனில், உம் அம்புகள் என் மேல் பாய்ந்தன: உம் திருக் கரத்தின் தண்டனையும் என் மேல் விழுந்தது.
3 நீர் சினங்கொண்டதால் என் உடலில் நலமே இல்லை: என் பாவத்தால் என் எலும்புகளெல்லாம் நெக்குவிட்டுப் போயின.
4 என் குற்றங்கள் என் தலைக்கு மேல் பெருகி எழுந்தன: பெரும் சுமைபோல் என்னை மிகவே நசுக்குகின்றன.
5 என் காயங்கள் அழுகி நாற்றம் எடுக்கின்றன: இதற்கு என் அறியாமையே காரணம்.
6 தலை குனிந்து மிகத் தளர்வடைந்து, நாளெல்லாம் துயரத்தில் மூழ்கி வாழ்கிறேன்.
7 என் இடுப்பெல்லாம் வீங்கி நலிவடைந்துள்ளது: என் உடலில் நலமான உறுப்பெதுவுமே இல்லை.
8 நலிவடைந்து நான் மிக நொறுங்குண்டேன்: என் நெஞ்சம் ஏங்கியதால் நான் தேம்பி அழலானேன்.
9 ஆண்டவரே, என் விருப்பம் எல்லாம் நீர் அறிந்துள்ளீர்: என் புலம்பலை நீர் அறியாமலில்லை.
10 என் நெஞ்சம் துடிக்கிறது: பலங்குன்றிப் போனேன், என் கண் பார்வையே மங்கிப் போனது.
11 என் நண்பர், என் தோழர் எல்லாருமே என் துன்ப நேரத்தில் தொலைவில் நின்றார்கள்: என் உறவினரும் என்னை அணுகவில்லை.
12 என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் எனக்குக் கண்ணி வைக்கின்றனர்: எனக்குத் தீமை செய்ய விரும்புவோர், கேடு வருமென அச்சுறுத்துகின்றனர்; எப்போதும் எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்கின்றனர்.
13 யானோவெனில் செவிடன் போல் கேளாமல் இருக்கிறேன்: ஊமை போல் வாய் திறவாமல் நிற்கிறேன்.
14 கேள்வியற்ற மனிதன் போல் ஆனேன்: பேச்சற்றவனுக்கு நிகரானேன்.
15 ஆண்டவரே, என் நம்பிக்கை எல்லாம் உம்மீதே வைத்திருக்கிறேன்: ஆண்டவராகிய என் இறைவா, என் மன்றாட்டை நீர் கேட்டருள்வீர்.
16 என் அடி சறுக்கும் போது, என்னைப் பார்த்து மகிழ்ச்சியுற விடாதீர்: எனக்கெதிராய் பெருமை கொள்ள விடாதீர்" என்று வேண்டுகிறேன்.
17 சறுக்கி விழும் றிலையில் இருக்கிறேன்; என் வருத்தம் எந்நேரமும் என் கண் முன்னே இருக்கின்றது.
18 என் குற்றத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்: நான் செய்த பாவத்தினிமித்தம் நான் பெரிதும் கவலையுற்றிருக்கிறேன்.
19 காரணமின்றி என்னை எதிர்ப்பவர்கள் வலிமை மிக்கவர்கள்: அநியாயமாய் என்னைப் பகைப்பவர் பலராயுளர்!
20 நன்மைக்குத் தீமை செய்பவர் பலர்: நான் நன்மையைக் கடைப்பிடிப்பதால் என்னைத் தாக்குபவர் பலர்.
21 ஆண்டவரே, என்னைக் கைவிடாதேயும்: என் இறைவா, எனக்கு வெகு தொலைவிலிராதேயும்.
22 எனக்கு உதவி புரிய விரைந்து வாரும்: ஆண்டவரே, என் மீட்பரே, விரைந்து வாரும்.
×

Alert

×