Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 28 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 28 Verses

1 ஆண்டவரே, உம்மை நோக்கிக் கூவுகிறேன்; என் பாறை அரணே! என் குரல் உமது செவியில் விழுவதாக! என் குரலுக்கு நீர் செவிசாய்க்கவில்லையேல், படுகுழியில் செல்வோருக்கு ஒப்பாவேன் நான்.
2 உம்மை நோக்கி நான் கூவுகையில், என் வேண்டுதலின் குரலைக் கேட்டருளும்: உமது ஆலயத் தூயகத்தை நோக்கி என் கைகளை நான் உயர்த்தும் போது, என் குரலைக் கேட்டருளும்.
3 பாவிகளோடு என்னை ஒழித்துவிடாதேயும்; தீமை செய்பவர்களோடு என்னைத் தொலைத்து விடாதேயும்: அவர்கள் அயலாரோடு சமாதானப் பேச்சு நிகழ்த்துவார்கள்; ஆனால் அவர்கள் உள்ளத்தில் இருப்பவை தீய எண்ணங்களே.
4 அவர்களின் செயல்களுக்கு ஏற்றவாறு அவர்களுக்குக் கூலி கொடும்; அவர்களுடைய செயல்களின் தீமைக்கு ஏற்றவாறு அவர்களைத் தண்டியும்: அவர்கள் செய்த வேலைக்கு ஏற்றவாறு அவர்களுக்குப் பலனளியும்; தங்கள் செயல்களின் பயனை அவர்கள் அடையச் செய்யும்.
5 ஏனெனில், ஆண்டவருடைய செயல்களை அவர்கள் கவனிப்பதில்லை, அவருடைய கைவேலையை நினைப்பதில்லை: எனவே, ஆண்டவர் அவர்களை ஒழித்து விடுவாராக, மீளவும் எழும்பாதபடி செய்வாராக.
6 ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக: ஏனெனில், என் வேண்டுதலின் குரலைக் கேட்டருளினார்.
7 ஆண்டவர் என் வலிமையும் கேடயமுமாயிருக்கிறார்; என் இதயம் அவர் மீது நம்பிக்கை கொண்டது: எனக்குதவி கிடைத்தது; ஆகவே, என் இதயம் அக்களிக்கின்றது, இன்னிசை பாடி அவரைப் புகழ்கின்றேன்.
8 ஆண்டவர் தம் மக்களுக்கு வலிமை ஆவார்: தம்மால் அபிஷுகம் பெற்றவருக்கு மீட்புத்தரும் பாதுகாப்பும் அவரே.
9 ஆண்டவரே, உம் மக்களைக் காத்தருளும், உம் உரிமைப் பொருளான அவர்களுக்கு ஆசி அளித்தருளும்: மேய்ப்பனாக இருந்து என்றென்றும் அவர்களைத் தாங்கிக் கொள்ளும்.

Psalms 28:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×