Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 25 Verses

1 ஆண்டவரே, என் இறைவா, உம்மை நோக்கி உன் உள்ளம் தாவுகின்றது.
2 உம் மீது நம்பிக்கை வைக்கிறேன்; நான் ஏமாற்றம் அயை விடாதேயும்: என் எதிரிகள் என் நிலையைக் கண்டு அக்களிக்க விடாதேயும்.
3 ஏனெனில், உம்மை நம்பும் எவரும் வெட்கிப்போகார்: கண் மூடித்தனமாய் வாக்குறுதி தவறுவோரே வெட்கிப் போவார்.
4 ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் காட்டியருளும்: உம் நெறிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5 உம் உண்மை என்னும் நெறியில் என்னை நடத்தி எனக்கு அறிவு புகட்டியருளும்: என் மீட்பாரம் இறைவன் நீரே, என்றும் உம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
6 ஆண்டவரே, உம் இரக்கப் பெருக்கத்தை நினைவுகூரும்: ஆதி கால முதல் உள்ள உம் அருளன்பை மறவாதேயும்.
7 இளமையில் நான் செய்த பாவங்களையும் குற்றங்களையும் நினையாதேயும்: உம் அருள் அன்பிற்கேற்ப என்னை நினைவு கூரும், உமது அருள் நன்மையின் பொருட்டென்னை மறவாதேயும்.
8 அண்டவர் நல்லவர், நேர்மையுள்ளவர்: ஆகவே, பாவிகளுக்கு நல்வழி கற்பிப்பார்.
9 நீதி நெறியில் எளியோரை நடத்துவார்: எளியோர்க்குத் தம் வழியைக் கற்பிப்பார்.
10 ஆண்டவருடைய உடன்படிக்கையையும் கட்டளைகளையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய வழிகள் எல்லாம் அருளும் உண்மையும் கொண்டவை.
11 ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு என் பாவத்தை மன்னிப்பீர்: பெரிது நான் செய்த பாவம்.
12 ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் யார்? தான் தேர்ந்துகொள்ள வேண்டிய வழியை அவனுக்குக் கற்பிப்பார்.
13 நலன்கள் மிக்கவனாய் அவன் வாழ்வான்: அவனுடைய வழிவந்தோர் மாநிலத்தை உரிமையாக்கிக் கொள்வர்.
14 தமக்கு அஞ்சி நடப்போரிடம் ஆண்டவர் அன்புறவு கொண்டுள்ளார்: தமது உடன்படிக்கையை அவர்களுக்கு வெளிப்படுத்துகின்றார்.
15 என் கண்கள் எந்தாளும் ஆண்டவரை நோக்கித் திரும்பியுள்ளன: ஏனெனில் கண்ணியில் விழாமல் என் அடிகளை அவர் காத்துக்கொள்வார்.
16 ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கி எனக்கு அருள் கூரும்: ஏனெனில், நான் துணையற்றவனும் துயர் மிக்கவனும் ஆனேன்.
17 என் இதயத்தின் கலக்கத்தைத் தணித்தருளும்: என் கவலைகளினின்று என்னை விடுவித்தருளும்.
18 என் துன்ப துயரத்தைக் கண்ணோக்கும்: என் குற்றங்கள் அனைத்தையும் மன்னியும்.
19 என் எதிரிகளைப் பாரும்; அவர்கள் மிகப்பலர்: கடும் பகைகொண்டு என்னை வெறுக்கின்றனர்.
20 என் உயிரைக் காத்து என்னை விடுவியும்: உம்மிடம் அடைக்கலம் புகுந்த நான் தலைகுனிய விடாதேயும்.
21 மாசின்மையும் நேர்மையும் எனக்குப் பாதுகாப்பாக இருக்கட்டும்; ஏனெனில் ஆண்டவரே, உம்மை நான் நம்பியுள்ளேன்:
22 இறைவா, இஸ்ராயேலர் படும் துன்பங்கள் அனைத்தினின்றும் அவர்களை விடுவித்தருளும்.
×

Alert

×