Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 14 Verses

1 கடவுள் இல்லை' என்று அறிவிலி தனக்குள் சொல்லிக் கொள்கிறான்; மனிதர் முற்றிலும் கெட்டுப் போயினர்: அக்கிரமத்தையே செய்கின்றனர்; நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை.
2 வானினின்று ஆண்டவர் மனுமக்களைப் பார்க்கின்றார்: அறிவுள்ளவன், கடவுளைத் தேடுபவன் எவனாது உண்டா எனப் பார்க்கின்றார்.
3 எல்லாரும் நெறி தவறிப் போயினர், ஒருங்கே கெட்டழிந்தனர்: நன்மை செய்பவனே இல்லை, இல்லவே இல்லை; ஒருவன்கூட இல்லை.
4 தீமை செய்கிறவர்கள் எல்லாரும் உணவை விழுங்குவது போல் என் மக்களை விழுங்கப் பார்க்கிறார்கள்: இவர்கள் ஆண்டவரது உதவியை நாடுவதில்லை; இவர்கள் நல்லறிவு பெறமட்டார்களா?
5 ஆகவே, அச்சத்தால் நடுங்குவர்: ஏனெனில், கடவுள் நீதிமான்களின் தலைமுறையோடு இருக்கிறார்.
6 எளியவன் திட்டத்தைக் கவிழ்த்து விடப் பார்க்கிறார்கள்: ஆனால் ஆண்டவர் அவனுக்கு ஆதரவளிக்கிறார்.
7 சீயோனிலிருந்து இஸ்ராயேல் மக்களுக்கு மீட்பு வராதோ! ஆண்டவர் தம் மக்களுக்கு நல்ல வாழ்வு அளிக்கும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வர், இஸ்ராயேல் மக்கள் அகமகிழ்வர்.
×

Alert

×