1
|
ஆண்டவரே, நீர் என்னைப் பரிசோதித்து அறிந்திருக்கிறீர்: |
2
|
நான் அமர்வதும் எழுவதும், என் வாழ்க்கை முழுவதுமே நீர் அறிந்திருக்கிறீர்: என் நினைவுகள் எல்லாம் முன்பிருந்தே உமக்கு வெளிச்சம். |
3
|
நான் நடப்பதும் படுப்பதும் எல்லாமே நீர் அறிந்துள்ளீர்: நான் செல்லும் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தனவே. |
4
|
என் வாயில் வார்த்தை உருவாகு முன்பே, நீர் எல்லாம் அறிந்திருக்கிறீர். |
5
|
எனக்கு முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்: உம் திருக்கரத்தை என் மேல் வைக்கிறீர். |
6
|
இத்தகைய அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது, உன்னதமானது: அதை நான் புரிந்துகொள்ள முடியாது. |
7
|
உமது ஆவியை விட்டு, நான் எங்கே தொலைவில் போகக் கூடும்? உம்முடைய திருமுன்னிலையை விட்டு, நான் எங்கே ஒளியக்கூடும்? |
8
|
நான் வானகத்துக்குப் பறந்து சென்றால், நீர் அங்கே இருக்கிறீர்! பாதாளத்துக்குச் சென்று படுத்துக் கொண்டாலும் அங்கேயும் இருக்கிறீர்! |
9
|
நான் விடியற்காலையில் சிறகடித்துப் பறந்து சென்ற போதிலும், கடல்களின் கடையெல்லைகளில் வாழ்ந்தாலும். |
10
|
அங்கேயும் உமது கரம் என்னை நடத்திச் செல்லும்: உமது வலக்கரம் என்னைத் தாங்கி நிற்கும். |
11
|
இருளாவது என்னை மூடிக்கொள்ளாதோ: ஒளிபோல, இரவும் என்னைச் சூழ்ந்துகொள்ளாதோ' என்று நான் விரும்பினாலும்; |
12
|
இருள் கூட உமக்கு இருட்டாயில்லை, இரவும் உமக்குப் பகலைப் போல வெளிச்சமாயிருக்கிறது: இருளும் உமக்கு ஒளி போலிருக்கும். |
13
|
ஏனெனில், நீரே என் உள் உறுப்புகளை உண்டாக்கினீர், என் தாயின் கருவில் என்னை உருவாக்கியவர் நீரே. |
14
|
இவ்வளவு வியப்புக்குரிய விதமாய் நீர் என்னைப் படைத்ததை நினைத்து நான் உம்மைப் போற்றுகிறேன்; உம்முடைய செயல்கள் அதிசயமுள்ளவை என்று உம்மைப் புகழ்கிறேன்: என்னை முற்றிலும் நீர் நன்கறிவீர். |
15
|
என் உடலின் அமைப்பு உமக்குத் தெரியாததன்று; மறைவான விதத்தில் நான் உருவானதையும், பூமியின் ஆழத்தில் நான் உருப்பெற்றதையும் நீர் தெரிந்திருந்தீர். |
16
|
என் செயல்களை உம் கண்கள் கண்டன, உமது நூலில் எல்லாம் எழுதப்பட்டுள்ளன: எனக்கு வாழ்நாள் எதுவுமே இல்லாத காலத்தில் நீர் எனக்கு நாட்களைக் குறித்தீர். |
17
|
இறைவா, உம்முடைய நினைவுகளை நான் அறிந்து கொள்வது எத்துணைக் கடினம்! அவற்றின் எண்ணிக்கை எத்துணைப் பெரிது! |
18
|
உம் நினைவுகளை அளவிட முற்பட்டால் அவை கடல் மணலிலும் மிகுதியானவையாயுள்ளன. அவற்றை எண்ணி முடித்தாலும் இன்னும் வியப்பில் ஆழ்ந்தவனாய்த் தான் உம் திருமுன் நிற்கிறேன். |
19
|
இறைவா, நீர் தீயவனை ஒழித்துவிட்டால் எவ்வளவு நலம்! பழிகாரர் உம்மிடமிருந்து ஒழிவார்களாக! |
20
|
ஏனெனில் அவர்கள் வஞ்சகமுடன் உம்மை எதிர்க்கிறார்கள்: உம் எதிரிகள் சதி செய்து தலை தூக்குகிறார்கள். |
21
|
ஆண்டவரே, உம்மைப் பகைக்கிறவர்களை நானும் பகைக்கிறேன் அன்றோ? உம்மை எதிர்ப்பவர்களை நானும் வெறுக்கிறேன் அன்றோ? |
22
|
முழுமனத்துடன் நான் அவர்களை வெறுக்கிறேன்: அவர்கள் எனக்கு எதிரிகளாயினர். |
23
|
இறைவா, நீர் என் உள்ளத்தைப் பரிசோதித்து அறியும்: உள் உணர்வுகளை அறிந்தவராய் என்னைச் சோதித்துப் பாரும். |
24
|
தீய வழியில் நான் செல்கின்றேனோ என்று பாரும்: முன்னோர் காட்டிய வழியில் என்னை நடத்தியருளும். |
Psalms 139:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...