Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Proverbs Chapters

Proverbs 24 Verses

1 தீய மனிதர்களைக் கண்டு பொறாமைப்படாதே. அவர்களோடு இருக்கவும் விரும்பாதே.
2 ஏனென்றால், அவர்கள் மனம் கொள்ளையைச் சிந்திக்கின்றது. அவர்களுடைய உதடுகளும் வஞ்சனைகளைப் பேசுகின்றன.
3 ஞானத்தால் வீடு கட்டப்படுகிறது. விவேகத்தால் அது உறுதிப்படுத்தப்படும்.
4 அறிவினால் அவ்வீட்டின் அறைகள் விலை உயர்ந்தனவும், மிகவும் அலங்காரமுள்ளனவுமான எவ்விதப் பொருளாலும் நிறைக்கப்படும்.
5 ஞானமுள்ள மனிதன் வல்லவனாய் இருக்கிறான். கற்றறிந்த மனிதன் துணிவும் பேராற்றலும் வாய்ந்தவனாக இருக்கிறான்.
6 ஏனென்றால், அவன் ஒழுங்குடன் போரை நடத்துவான். எங்கே அதிக யோசனைகள் உண்டோ அங்கே பாதுகாப்பும் உண்டு.
7 மதியீனனுக்கு ஞானம் எட்டா உயரமானது. சபை வாயிலில் அவன் வாயைத் திறவான்.
8 தீமையைச் செய்ய நினைக்கிறவன் மதிகெட்டவன் எனப்படுவான்.
9 மதியீனனின் சிந்தனை பாவமாகும். புறங்கூறுபவன் மனிதருக்கு வெறுப்பைத் தருவான்.
10 துயர நாளில் சோர்ந்துபோய் அவ நம்பிக்கை கொள்வாயானால் உன் திடன் குறைந்துபோகும்.
11 சாவுக்குக் கூட்டிப்போகப் படுகிறவர்களை விடுவி. நரகத்திற்கு இழுக்கப்படுகிறவர்களை மீட்கவும் நீ பின்வாங்காதே.
12 எனக்கு ஆற்றல் போதாது என்று நீ சொல்வாயானால், இதயத்திலுள்ளதைக் காண்கிறவர் அறிகிறார்; உன் ஆன்மாவின் காவலரை ஒன்றும் ஏமாற்றுவதில்லை. அவர் அவனவன் செயல்களுக்குத் தக்கபடி பதிலளிக்கிறார்.
13 என் மகனே, தேன் உன் வாய்க்கு இனிப்பாய் இருக்கிறது; அதை உண். தேனென்றால் உன் தொண்டைக்கு மிகவும் இனிமையாம்.
14 அவ்வாறே உன் ஆன்மாவுக்கு ஞானத்தின் போதகமுமாம். அதை நீ கண்டுபிடித்தால், (உன்) முடிவில் உனக்கு நம்பிக்கை உண்டாகும்; உன் நம்பிக்கையும் வீணாகாது.
15 ஓ தீயவனே, நீதிமானின் வீட்டில் கண்ணிவையாதே; அவனுடைய இளைப்பாற்றியை நீ குலையாதே.
16 ஏனென்றால், நீதிமான் ஏழு முறை விழுந்தாலும் எழுந்திருப்பான். அக்கிரமிகளோ தீமையில் விழுந்து அழிவார்கள்.
17 உன் பகைவன் விழும்போது நீ மகிழ வேண்டாம். அவன் அழிவுறும்போது நீ மனத்தில் அக்களிக்க வேண்டாம்.
18 (ஏனென்றால்) ஆண்டவர் அதைக்கண்டு, உன்மீது வருத்தமுற்று, அவன்மேல் வைத்த கோபத்தை அகற்றி, அதை உன்மேல் திருப்பினாலும் திருப்புவார்.
19 மகா தீயவரோடு பிடிவாதம் செய்யாதே. அக்கிரமிகள்மேல் பொறாமை கொள்ளாதே.
20 ஏனென்றால், எதிர்காலத்தில் தீயோருக்கு நம்பிக்கை இராது. அக்கிரமிகளுடைய விளக்கும் அவிக்கப்படும்.
21 என் மகனே, ஆண்டவருக்கும் அரசனுக்கும் அஞ்சியிரு. புறங்கூறுபவர்களுடன் கலந்து கொள்ளாதே.
22 ஏனென்றால், திடீரென அவர்களுக்குக் கேடு நேரிடும். இவருடைய அழிவையும் அறிந்தவன் யார் ?
23 இதுவும் ஞானிகள் கற்றுக் கொடுப்பார்கள். அதாவது: நியாயத் தீர்ப்பில் ஒருதலைச் சார்பு கொள்தல் நன்றன்று.
24 அக்கிரமியை நோக்கி: நீ நீதிமான் என்று (தவறாய்ச்) சொல்கிறவர்கள் மக்களால் சபிக்கப்படுவார்கள்; அவன் குலத்தினர் அவர்களை வெறுப்பார்கள்.
25 அவனைக் கண்டிக்கிறவர்கள் புகழப்படுவார்கள்; அவர்கள்மேல் ஆசியும் வரும்.
26 நேர்மையான சொற்களை மொழிகிறவனுடைய உதடுகளை (மக்கள்) முத்தமிடுகிறார்கள்.
27 நீ வெளியில் உன் வேலையைத் தயாராக்கி உன் வயலையும் பண்படுத்து. பின்பு நீ உன் வீட்டைக் கட்டலாம்.
28 அக்கிரமமாய் நீ உன் அயலானுக்கு விரோதச் சாட்சியாய் இராதே. எவனையும் உன் உதடுகளால் ஏமாற்றாதே.
29 எனக்குச் செய்ததுபோல் அவனுக்கும் செய்வேன் என்று கூறாதே. அவனவன் செயலுக்குத் தக்கபடியே (நான்) பதிலளிப்பேன்.
30 சோம்பேறியான மனிதனின் வயல் வழியாயும், மதிகெட்ட மனிதனின் கொடி முந்திரித் தோட்டத்தின் வழியாயும் நடந்து சென்றேன்.
31 இதோ, எங்கே பார்த்தாலும் காஞ்சொறி நிறைந்து முட்கள் செறிந்து மூடியிருந்தன. அன்றியும், கற்சுவரும் அழிந்து போயிருந்தது.
32 நான் அதைக் கண்டபோது என் இதயத்தில் பதித்து, உதாரணத்தால் படிப்பினையை அடைந்து கொண்டேன்.
33 கொஞ்சம் தூங்குவேன்; சிறிது தூங்கி விழுவேன்; இனைப்பாறச் சற்றே கைகட்டுவேன் என்பாயோ ?
34 அப்போது வறுமை ஓட்டக்காரன் போலும், பிச்சை ஆயுதம் தாங்கிய மனிதன் போலும் உன்னிடம் வரும்.
×

Alert

×