Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Philippians Chapters

Philippians 4 Verses

1 ஆகவே என் அன்புச் சகோதரர்களே, என் வாஞ்சைக் குரியவர்களே, நீங்கள் என் மகிழ்ச்சி, நீங்களே என் வெற்றி வாகை. அன்புக்குரியவர்களே, நான் கூறியவாறு ஆண்டவருக்குள் நிலைத்திருங்கள்.
2 எயோதியாளைக் கேட்டுக் கொள்கிறேன், சிந்திக்கேயாளையும் கெஞ்சுகிறேன்: நீங்கள் ஆண்டவருக்குள் ஒற்றுமையாக இருங்கள்.
3 என்னோடு தோள்கொடுத்து உழைத்த உண்மையான தோழரே, உம்மையும் கேட்டுக் கொள்கிறேன்: இவர்களுக்கு உதவி செய்யும். ஏனெனில், இவர்கள் கிலேமெண்தோடும் என் உடன் உழியர் பலரோடும் நற்செய்திக்காக என்னோடு போராடினார்கள். அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் நூலில் எழுதப்பட்டுள்ளன.
4 ஆண்டவருக்குள் என்றும் அகமகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன்.: 'அகமகிழுங்கள்.
5 கனிந்த உங்கள் உள்ளம் அனைவர் முன்னும் விளங்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார்.
6 எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால், எல்லாத் தேவைகளிலும் நன்றியோடு கூடிய செபத்திலும் மன்றாட்டிலும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களை ஒப்படையுங்கள்.
7 அப்பொழுது அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவுக்குள் உங்கள் உள்ளத்துக்கும் மனத்துக்கும் அரணாயிருக்கும்.
8 இறுதியாக, சகோதரர்களே, உண்மை எதுவோ, கண்ணியமானது எதுவோ, நீதி எதுவோ, தூயது எதுவோ, இனியது எதுவோ, எதெல்லாம் நற்பண்புடையதோ, எதெல்லாம் புகழ்ச்சிக்குரியதோ, அவற்றையே மனத்தில் கொள்ளுங்கள்.
9 நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்ட போதனைகள், பெற்றுக்கொண்ட படிப்பிணைகள், என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்க்கையில் நீங்கள் பார்த்தவை அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அப்போது சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உங்களோடிருப்பார்.
10 என்மீது உங்களுக்கு இருந்த அக்கறை இப்போதாவது மலர்ந்தது கண்டு ஆண்டவருக்குள் நான் பெரிதும் அகமகிழ்ந்தேன். அந்த அக்கறை ஏற்கனவே உங்களுக்கு இருந்தது. அதைக் காட்ட வாய்ப்புக் கிடைக்கவில்லை.
11 நான் இவ்வாறு சொல்வது எனக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு குறையினாலன்று. ஏனெனில், எந்நிலையிலும் போதுமென்ற மனத்தோடு வாழக் கற்றுக்கொண்டேன். வறுமையிலும் வாழத்தெரியும்.
12 வளமையிலும் வாழத்தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவுற்று வாழவோ, குறைவுற்றுத் தாழவோ, எதற்கும் பயிற்சி பெற்றிருக்கிறேன்.
13 எனக்கு உறுதியூட்டும் இறைவனால் எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.
14 ஆயினும் நான் பட்ட வேதனையில் நீங்கள் பங்கு கொண்டதற்கு நன்றி.
15 பிலிப்பியர்களே, உங்களுக்குத் தெரிந்திருப்பதுபோல், நற்செய்தியை நான் போதிக்கத் தொடங்கின காலத்தில் மக்கதோனியாவை விட்டு, வெளிக்கிளம்பிய பொழுது, உங்களைத் தவிர வேறு எந்தச் சபையும் என் வரவு செலவு கணக்கில் இடம் பெறவில்லை.
16 நான் தெசலோனிக்கேயில் இருந்தபோது என் தேவையைப் போக்க ஒருமுறை மட்டுமன்று, இருமுறை உதவி அனுப்பினீர்கள்.
17 நன்கொடைகளல்ல நான் நாடுவது; நான் நாடுவதெல்லாம் உங்கள் கணக்கில் பெருகிவரும் ஆக்கமே.
18 நீங்கள் அனுப்பியதெல்லாம் பெற்றுக்கொண்டேன். இப்போது என் தேவைக்கு மேல் இருக்கிறது. நீங்கள் அனுப்பிய கொடைகளை எப்பாப்பிரொத்தீத்துவிடமிருந்து பெற்றுக்கொண்டேன். இப்போது என்னிடம் நிறைய இருக்கிறது. உங்கள் கொடைகளோ நறுமணம் வீசும் காணிக்கையும், கடவுளுக்கு உகந்த பலிப்பொருளுமாகும்.
19 மாட்சிமிக்க தம் செல்வத்திற்கேற்ப என் கடவுள் உங்கள் தேவைகள் அனைத்தையும் கிறிஸ்து இயேசுவுக்குள் நிறைவாக்குவார்.
20 நம் தந்தையாகிய கடவுளுக்கு என்றென்றும் மகிமை உண்டாகக. ஆமென்.
21 கிறிஸ்து இயேசுவின் பெயரால் இறைமக்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக் கூறுங்கள். என்னோடிருக்கிற சகோதரர்கள் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.
22 இறைமக்கள் எல்லாரும், சிறப்பாகச் செசாருடைய வீட்டைச் சேர்ந்தவர்களும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.
23 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக.
×

Alert

×