Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Philippians Chapters

Philippians 3 Verses

1 இறுதியாக, என் சகோதரர்களே, ஆண்டவருக்குள் அகமகிழுங்கள். எழுதினதையே மீண்டும் எழுதுவது எனக்குத் தொல்லையில்லை. உங்களுக்கு நல்லதுதான்.
2 அந்த நாய்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். அந்தக் கெட்ட ஊழியர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள்.
3 அந்தப் போலி விருத்தசேதனக்காரர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். நாமே கடவுளின் ஆவிக்கேற்ப உண்மை வழிபாடு செலுத்துகிறோம். கிறிஸ்து இயேசுவில் நாம் பெருமை பாராட்டுகிறோமே தவிர, உடலைச் சார்ந்ததில் நம்பிக்கை கொள்வதில்லை. நானும் இத்தகையவற்றில் நம்பிக்கை வைக்க முடியும்.
4 இத்தகையவற்றில் நம்பிக்கை கொள்ள முடியும் என ஒருவன் நினைத்தால், நான் அவனை விட மிகுதியாய் நினைக்கமுடியும். நான் எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டேன். நானும் இஸ்ராயேல் இனத்தவன்.
5 நான் பென்யமீன் குலத்தவன், எபிரேயர் குலத்தில் பிறந்த எபிரேயன். திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன்.
6 அதன்மேல் எனக்கிருந்த ஆர்வத்தால் திருச்சபையைத் துன்புறுத்தினேன். திருச்சட்டத்துக்குரிய நீதியைப் பொறுத்தமட்டில் குற்றமற்றவனாயிருந்தேன்.
7 ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன்.
8 ஆம், என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவை அறிதலாகிய ஒப்பற்ற செல்வத்தின் பொருட்டு அவையெல்லாம் இழப்பு எனக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ளவும், அவரோடு ஒன்றித்திருக்கவும் எல்லாவற்றையும் குப்பையெனக் கருதுகிறேன்.
9 இறைவனுக்கு ஏற்புடையவனாகும் தகுதி எதுவும் எனக்குச் சொந்தமாயில்லை. திருச்சட்டத்தால் இறைவனுக்கு ஏற்புடையவன் ஆகாத இந்நிலையில் கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினால் தான், இறைவனுக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். அந்த ஏற்புடைமையோ கடவுள் அளிக்கும் கொடை. விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது.
10 இனி நான் விரும்புவதெல்லாம் அவரை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே. அதாவது, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையைத் துய்த்துணர வேண்டும். அவரது சாவின் சாயலை என்னுள் ஏற்று அவருடைய பாடுகளில் பங்குபெற வேண்டும்.
11 அப்போது தான், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுதலை நான் அடைவேன் என நம்பக் கூடும்.
12 இவையெல்லாம் அடைந்துவிட்டேன் என்றோ நிறைவு எய்தி விட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. எதற்காக கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டாரோ. அதை நான் பற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து ஓடுகிறேன்.
13 ஆம், சகோதரர்களே, முடிவை நான் பற்றிக் கொண்டு விட்டேன் என்று எண்ணவில்லை. ஆனால் ஒன்று மட்டும் செய்கிறேன்.
14 கடந்ததை மறந்துவிட்டு முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு பரிசுபெற வேண்டி இலக்கை நோக்கி முனைந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள் என்னைக் கடவுள் மேலுலகுக்கு அழைப்பதே அப்பரிசாகும்.
15 எனவே நிறைவெய்திய நமக்கு இத்தகைய மனநிலையே இருத்தல் வேண்டும். எதைப்பற்றியாவது நீங்கள் வேறுபாடான கருத்துக் கொண்டிருந்தால் அதைப்பற்றிய உண்மையை கடவுளே உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
16 நாம் எவ்வளவு முன்னேறி இருந்தாலும், அதே வழியில் தொடர்ந்து நடப்போம்.
17 சகோதரர்களே, நீங்கள் அனைவரும் ஒரு மிக்க என்னைப்போல் நடங்கள். நாங்கள் உங்களுக்கு முன்மாதிரி, அந்த முன்மாதிரியைப் பின்பற்றுபவர்களைக் கவனியுங்கள்.
18 கிறிஸ்துவின் சிலுவைக்கு எதிரிகளாய் நடப்போர் பலர் உள்ளனர். இதை உங்களுக்குப் பலமுறை கூறியுள்ளேன். இப்போதும் கண்ணீரோடு சொல்லுகிறேன்.
19 அழிவே அவர்கள் முடிவு, வயிறே அவர்கள் கடவுள், மானக்கேடே அவர்கள் மகிமை. அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்ததே.
20 நமக்கோ வானகமே தாய்நாடு. அங்கிருந்து மீட்பர் வருவாரெனக் காத்திருக்கிறோம்.
21 ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே அந்த மீட்பர். அவர் அனைத்தையும் தமக்குக் கீழ்ப்படுத்த வல்ல ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை, மாட்சிமைக்குரிய தம் உடலின் சாயலாக உருமாற்றுவார்.
×

Alert

×