Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Numbers Chapters

Numbers 7 Verses

1 வேலையெல்லாம் முடிந்து மோயீசன் திருஉறைவிடத்தை நிறுவியபோது, அதையும், அதன் எல்லாப் பொருட்களையும், பலி பீடத்தையும், அதைச் சார்ந்த எல்லாவற்றையும் எண்ணெய் பூசி அபிசேகம் செய்து புனிதப்படுத்தினார்.
2 இஸ்ராயேலின் தலைவர்களும், அந்ததந்தக் கோத்திரத்திலிருந்த வம்சத் தலைவர்களும், எண்ணப்பட்டவர்களை மேற்பார்ப்பதற்கு நியமிக்கப்பட்டவர்களும்,
3 ஆறு கூண்டு வண்டிகளையும் பன்னிரண்டு மாடுகளையும் ஆண்டவர் முன்னிலையில் காணிக்கையாய் வைத்தார்கள். இரு பிரபுக்களுக்கு ஒரு வண்டியும், ஒரு பிரபுவுக்கு ஒரு மாடுமாகக் கொடுத்தார்கள். அவர்கள் அவற்றை உறைவிடத்துக்கு முன்பாகக் கொண்டு வந்தபோது,
4 ஆண்டவர் மோயீசனை நோக்கி:
5 உறைவிடத்தின் உபயோகத்திற்காக நீ அவற்றை அவர்களிடமிருந்து வாங்கி, லேவியருக்கு அவரவருடைய வேலைக்குத் தக்கபடி பங்கிட்டுக் கொடு என்றார்.
6 ஆகையால் மோயீசன் வண்டிகளையும் மாடுகளையும் வாங்கி லேவியரிடம் ஒப்புவித்தார்.
7 இரண்டு வண்டிகளையும் நான்கு மாடுகளையும் ஜேற்சோன் புதல்வருக்கு அவர்கள் தேவைக்குத் தக்கபடி கொடுத்தார்.
8 குருவாகிய ஆரோனின் புதல்வன் இத்தமாருக்குக் கீழ்ப்பட்டிரந்த மேறாரியின் புதல்வருக்கு அவர்கள் தொழிலுக்கும் சேவைக்கும் தக்கபடி நான்கு வண்டிகளையும் எட்டு மாடுகளையும் கொடுத்தார்.
9 ககாத்தின் புதல்வர்களுக்கு வண்டியோ மாடோ ஒன்றும் கொடுக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் கூடாரத்துக்குள்ளேயே வேலை செய்து, சுமக்க வேண்டிய சுமையைத் தோள் மேலே சுமப்பார்கள்.
10 பலிபீடம் அபிசேகம் செய்யப்பட்ட நாளிலே பிரபுக்கள் அதன் முன்பாகத் தங்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.
11 அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி: பலிபீடத்தின் நேர்ச்சைக்காக ஒவ்வொரு பிரபுவும் தனக்குக் குறிக்கப்பட்ட நாளில் காணிக்கை செலுத்தக்கடவான் என்றார்.
12 (அவர்கள் அவ்வாறே செய்தார்கள்). முதல் நாளில் யூதா கோத்திரத்தானாகிய அமினதாபின் புதல்வன் நகஸோன் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
13 அவன் காணிக்கையாவது: புனித இடத்துக்குச் சீக்கல் கணக்குப் படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், மேற்படி சீக்கல் கணக்கில் எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித்தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்திருந்தான்).
14 பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னால் செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அதில் தூபவகைகள் நிறைந்திருந்தன).
15 முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக்கிடாய்,
16 ஒரு வயதுள்ள ஓர் ஆட்டுக்குட்டி, பாவநிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,
17 சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதுள்ள ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை அமினதாபின் புதல்வனாகிய நகஸோனுடைய காணிக்கையாம்.
18 இரண்டாம் நாள் இசக்கார் கோத்திரத்தின் தலைவனும் சூவாரின் புதல்வனுமான நத்தானியேல் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
19 அதாவது, புனித இடத்துச் சீக்கல் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித் தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்திருந்தன).
20 பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னால் செய்யப்பட்டதுமான ஒரு தூபக்கலசம் - (அது தூப வகைகளினாலே நிறைந்திருந்தது).
21 முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக் கிடாய், ஒரு வயதான ஓர் ஆட்டுக் குட்டி,
22 பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய், சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக் கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள்,
23 ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை சூவாரின் புதல்வனாகிய நத்தானியேலுடைய காணிக்கையாம்.
24 மூன்றாம் நாளிலே சாபுலோன் கோத்திரத்தின் தலைவனும் ஏலோனின் புதல்வனுமான எலியாப் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
25 அதாவது புனித இடத்துச் சீக்கல் கணக்குப்படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித்தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்திருந்தன).
26 பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னால் செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).
27 முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக்கிடாய், ஒரு வயதான ஓர் ஆட்டுக் குட்டி,
28 பாவநிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,
29 சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக் கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை ஏலோனின் புதல்வனாகிய எலியாபுடைய காணிக்கையாம்.
30 நான்காம் நாளிலே ரூபன் கோத்திரத்தின் தலைவனும் செதெயூரின் புதல்வனுமான எலிசூர் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
31 அதாவது: புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித் தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்திருந்தன).
32 பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னால் செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).
33 முழுத் தகனப்பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக்கிடாய்,
34 ஒரு வயதான ஓர் ஆட்டுக்குட்டி, பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,
35 சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக் கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை செதெயூரின் புதல்வனாகிய எலிசூருடைய காணிக்கையாம்.
36 ஐந்தாம் நாளிலே சிமையோன் கோத்திரத்தின் தலைவனும் சுரிஸதையின் புதல்வனுமான சலமியேல் என்பவன தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
37 அதாவது, புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித்தட்டு- (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்திருந்தன).
38 பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக்கலசம்- (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).
39 முழத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக்கிடாய், ஒரு வயதான ஓர் ஆட்டுக் குட்டி,
40 பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,
41 சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை சூரிஸதையின் புதல்வனாகிய சலமியேலுடைய காணிக்கை.
42 ஆறாம் நாளிலே காத் கோத்திரத்தின் தலைவனும் துயேலின் புதல்வனுமான எலியஸாப் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
43 அதாவது: புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித்தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்திருந்தன).
44 பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக்கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).
45 முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக் கிடாய்,
46 ஒரு வயதான ஆட்டுக்குட்டி, பாவநிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,
47 சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக் கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை துயேலின் புதல்வனாகிய எலியஸாபுடைய காணிக்கையாம்.
48 ஏழாம் நாளிலே எபிராயீம் கோத்திரத்தின் தலைவனும் அமியூதின் புதல்வனுமான எலிஸ்மா தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
49 அதாவது புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கிண்ணம், ஏழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித்தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்திருந்தன).
50 பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).
51 முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக்கிடாய், ஒரு வயதான ஓர் ஆட்டுக்குட்டி,
52 பாவநிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக்கிடாய்,
53 சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை அமியூதின் புதல்வனாகிய எலிஸ்மாவுடைய காணிக்கையாம்.
54 எட்டாம் நாளிலே மனஸே கோத்திரத்தின் தலைவனும் பதசூரின் புதல்வனுமான கமலியேல், தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
55 அதாவது: புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித் தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தன).
56 பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).
57 முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக்கிடாய், ஒரு வயதான ஓர் ஆட்டுக் குட்டி,
58 பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,
59 சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை பதசூரின் புதல்வனாகிய கமலியேலுடைய காணிக்கையாம்.
60 ஒன்பதாம் நாளிலே பெஞ்சமின் கோத்திரத்தின் தலைவனும் செதேயோனின் புதல்வனுமான அபிதான் தலைவன் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
61 அதாவது: புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித் தட்டு (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தன).
62 பத்துச் சீக்கல் நிறையுள்ளதம் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது ).
63 முழுத்தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக் கிடாய், ஒரு வயதாள ஓர் ஆட்டுக்குட்டி,
64 பாவ நிவாரணப்பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,
65 சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய்கள். ஐந்து வெள்ளாட்டுக்கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக் குட்டிகள். இவை செதெயோனின் புதல்வனாகிய அபிதானுடைய காணிக்கையாம்.
66 பத்தாம் நாளிலே தான் கோத்திரத்தின் தலைவனும், அமிசதாயின் புதல்வனுமான ஐயேசர் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
67 அதாவது: புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித் தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தன).
68 பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).
69 முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக் கிடாய், ஒரு வயதான ஓர் ஆட்டுக்குட்டி,
70 பாவநிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,
71 சமாதானப்பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக் குட்டிகள் - இவை அமிசதாயின் புதல்வனாகிய ஐயேசருடைய காணிக்கையாம்.
72 பதினோராம் நாளிலே ஆசேர் கோத்திரத்தின் தலைவனும் ஒக்கிரானின் புதல்வனுமாகிய பெகியேல் தலைவன் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
73 அதாவது: புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித்தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தன).
74 பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).
75 முழுத்தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக்கிடாய், ஒரு வயதான ஓர் ஆட்டுக் குட்டி,
76 பாவநிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,
77 சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக்கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை ஒக்கிரானின் புதல்வனாகிய பெகியேலுடைய காணிக்கையாம்.
78 பன்னிரண்டாம் நாளிலே நெப்தலி கோத்திரத்தின் தலைவனும் ஏனானின் புதல்வனுமான ஐரா தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
79 அதாவது: புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித் தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தன).
80 பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).
81 முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக் கிடாய்,
82 ஒரு வயதான ஓர் ஆட்டுக்குட்டி, பாவநிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக்கிடாய்,
83 சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக் குட்டிகள். இவை ஏனானின் புதல்வனாகிய ஐராவுடைய காணிக்கையாம்.
84 பலிபீடத்தின் நேர்ச்சைக்காக அபிசேகம் செய்யப்பட்டபோது, இஸ்ராயேல் தலைவர்களால் ஒப்புக்கொடுக்கப்பட்டவையாவன: வெள்ளிக் கிண்ணங்கள் பன்னிரண்டு, வெள்ளித் தட்டுகள் பன்னிரண்டு, பொன்னால் செய்யப்பட்ட தூபக் கலசங்கள் பன்னிரண்டு.
85 ஒவ்வொரு வெள்ளிக் கிண்ணமும் நூற்றுமுப்பது சீக்கல் நிறையும், ஒவ்வொரு தட்டும் எழுபது சீக்கல் நிறையுமாக இந்தப் பாத்திரங்களின் வெள்ளியெல்லாம் புனித இடத்து நிறைக் கணக்குப்படி இரண்டாயிரத்து நானூறு சீக்கல்.
86 தூபவகைகளால் நிறைந்த, பொன்னால் செய்யப்பட்ட பன்னிரண்டு தூபக்கலசங்கள். ஒவ்வொரு பொற்கலசமும் புனித இடத்தின் நிறைக்கணக்குப் படி பத்துச் சீக்கலும், கலசங்களின் பொன்னெல்லாம் நூற்றிருபது சீக்கலும் இருக்கும்.
87 முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட மாடுகள் பன்னிரண்டு, ஆட்டுக்கிடாய்கள் பன்னிரண்டு, ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் பன்னிரண்டு, அவைகளுக்கான உணவு தானியங்கள், பாவ நிவாரணப்பலிக்காகப் பன்னிரண்டு, வெள்ளாட்டுக்கிடாய்கள்,
88 சமாதானப் பலிக்காக மாடுகள் இருபத்து நான்கு, ஆட்டுக்கிடாய்கள் அறுபது, வெள்ளாட்டுக் கிடாய்கள் அறுபது, ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் அறுபது. இவைகளெல்லாம் பலிபீடத்தின் நேர்ச்சைக்காக அபிசேக நாளின்போது ஒப்புக்கொடுக்கப்பட்டன.
89 மோயீசன் கடவுளின் ஆலோசனை கேட்கும் பொருட்டு எப்பொழுது உடன்படிக்கையின் கூடாரத்திற்குள் புகுவாரோ அப்பொழுது இரக்கத்தின் இருப்பிடத்தினின்று தனக்கு விடை கொடுக்கிறவருடைய குரலைக் கேட்டுக் கொண்டிருப்பார். இரக்கத்தின் இருப்பிடம் சாட்சியப் பெட்டியின்மேல் இரண்டு கெருபீம்கள் நடுவே இருந்தது. அதனின்றே குரல்வரும்.
×

Alert

×