Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Numbers Chapters

Numbers 28 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Numbers Chapters

Numbers 28 Verses

1 பின்னும் ஆண்டவர் மோயீசனிடம்: நீ இஸ்ராயேல் மக்களை நோக்கிக் கட்டளையாக அறிவிக்க வேண்டியதாவது:
2 நீங்கள் நமக்குரிய காணிக்கையையும், அப்பங்களையும், மிக்க நறுமணமுள்ள தகனப்பலிகளையும் குறித்த காலத்தில் நமக்குச் செலுத்துவீர்கள்.
3 நீங்கள் செலுத்த வேண்டிய பலிகள் என்னவென்றால்: நித்திய தகனப்பலியாக நாள்தோறும் ஒருவயதான மாசற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைக் (கொண்டு வந்து),
4 காலையில் ஓர் ஆட்டுக்குட்டியையும், மாலையில் ஓர் ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு,
5 ஏப்பி என்னும் (மரக்காலிலே) பத்தில் ஒரு பங்கு மெல்லிய மாவில் கின் என்னும் படியியே நாலில் ஒரு பங்கு மிகத் தெளிந்த எண்ணெயை வார்த்துப் (போசனக் காணிக்கையாக) ஒப்புக்கொடுப்பீர்கள்.
6 இது நீங்கள் சீனாய் மலையில் ஆண்டவருக்கு மிக்க நறுமணமாக ஒப்புக்கொடுத்து வந்த நித்திய தகனப்பலியாம்.
7 அன்றியும், ஆண்டவருடைய புனித இடத்திலே ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்கும் கின் என்னும் படியில் ஒருகாற்படி கொடிமுந்திரிப் பழச்சாற்றையும் பானப்பலியாக ஒப்புக்கொடுப்பீர்கள்.
8 காலையில் படைத்த தகனப்பலிக்கும் போசன பானப் பலிகளுக்கும் ஒப்பாகவே மாலையிலும் மேற்சொல்லிய சடங்கு முறைகளுடன் மற்ற ஆட்டுக்குட்டியையும் பலியிடக்கடவீர்கள்.
9 ஓய்வு நாளிலோவென்றால் ஒரு வயதான மாசற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், எண்ணெய் வார்த்த பத்தில் இரண்டு பங்கு மெல்லிய மாவைப் போசனப் பலியாகவும் கொண்டுவருவீர்கள்.
10 இந்த போசனப் பலியைச் சடங்கு முறைப்படியே ஒவ்வோர் ஓய்வு நாளிலும்நித்தியமாய்ச் செலுத்த வேண்டும்.
11 மாதத்தின் முதல் நாளிலோ ஆண்டவருக்குத் தகனப்பலியாக மந்தையிலிருந்து இரண்டு கன்றுக்குட்டிகளையும், ஓர்ஆட்டுக்கிடாயையும், ஒருவயதான மாசற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் ஒப்புக்கொடுக்க வேண்டும்.
12 போசனப் பலியாக ஒவ்வொரு கன்றுக்குட்டிக்கும் பத்தில் மூன்று பங்கானதும் எண்ணெயில் பிசைந்ததுமான மெல்லிய மாவையும், ஒவ்வோர் ஆட்டுக் கிடாய்க்கும் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும்,
13 ஒவ்வோர் ஆட்டுக்குட்டிக்கும் பத்துப் பாகத்தின் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயில் பிசைந்ததுமான மெல்லிய மாவையும் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தல் வேண்டும். அது ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள முழுத் தகனப் பலியாய் இருக்கும்.
14 அன்றியும், ஒவ்வொரு பலி மிருகத்துக்கும் செய்ய வேண்டிய பானப்பலி என்னவென்றால்: ஒவ்வொரு கன்றுக்குட்டிக்கு கின் (படியில்) அரைப்படியும், ஒவ்வோர்ஆட்டுக்கிடாய்க்கு மூன்றிலொரு பங்கும், ஒவ்வோர் ஆட்டுக் குட்டிக்கு நாலில் ஒரு பங்கும், கொடி முந்திரிப் பழச்சாறு சிந்தக் கடவீர்கள். இது ஆண்டு முழுவதும் மாத மாதமாய்ச் செலுத்த வேண்டிய முழுத்தகனப் பலியாம்.
15 மேலும், பாவ நிவாரணப் பலியாக ஒரு வெள்ளாட்டுக்கிடாயையும், அதற்கடுத்த பானச் சிந்து தலையும் ஆண்டவருக்குச் செலுத்தவும் வேண்டும்.
16 முதல் மாதத்தின் பதினாலாம் நாள் ஆண்டவருடைய பாஸ்கா.
17 பதினைந்தாம் நாள் திருவிழா. ஏழு நாள் வரையிலும் புளிப்பில்லாத அப்பங்களை உண்ண வேண்டும்.
18 அவற்றில் முதல் நாள் புனிதமானதும் வணக்கத்துக்குறியதுமாகையால், அன்று விலக்கப்பட்ட வேலையும் செய்யலாகாது.
19 அப்பொழுது நீங்கள் ஆண்டவருக்கு முழுத்தகனப் பலிக்காக மந்தையிலிருந்து இரண்டு கன்றுக்குட்டிகளையும், ஓர் ஆட்டுக்கிடாயையும், ஒரு வயதான மாசற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
20 அவைகளுக்கேற்ற காணிக்கையாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவிலே ஒவ்வொரு கன்றுக்குட்டிக்கும் பத்தில் மூன்று பங்கையும் வெள்ளாட்டுக்கிடாய்க்குப் பத்தில் இரண்டு பங்கையும்,
21 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வோர் ஆட்டுக்குட்டிக்கும் பத்துப் பாகத்தின் பத்தில் ஒரு பங்கையும்,
22 உங்கள் பாவ நிவர்த்திக்குப் பாவ நிவாரணப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் செலுத்தக் கடவீர்கள்.
23 காலையிலே அன்றாடம் செலுத்தும் முழுத் தகனப் பலியையும் அன்று சேர்த்துச் செலுத்தக்கடவீர்கள்.
24 இவ்விதமாகவே அந்த ஏழு நாளும் நாள்தோறும் நெருப்பை வளர்த்து, ஆண்டவருக்கு மிக்க நறுமணமாகத் தகனப் பலியைச் செலுத்துவீர்கள். அந்த மணம் தகனப் பலியிலிருந்தும், ஒவ்வொரு பலிக்கும் அடுத்த பானப் பலியிலிருந்தும் எழும்பும்.
25 ஏழாம் நாளும் உங்களுக்கு மிக ஆடம்பரமுள்ளதும் புனிதமுள்ளதுமாய் இருக்கும். அதில் யாதொரு சாதரணமான வேலையும் செய்யலாகாது.
26 வாரம் கடந்த பின்பு நீங்கள் ஆண்டவருக்குப் புதிய போசனப் பலியாக முதற் கனிகளைச் செலுத்தும் நாளும் அவ்விதமே புனிதமும் வணக்கத்துக்குரியதுமாய் இருக்கும். அதில் யாதொரு சாதாரண வேலையும் செய்யலாகாது.
27 மேலும், ஆண்டவருக்கு நறுமணமுள்ள முழுத் தகனப்பலியாக ஒரு மந்தையில் எடுக்கப்பட்ட இரண்டு இளங்காளைகளையும் ஓர் ஆட்டுக் கிடாயையும், ஒரு வயதான மாசற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக்கடவீர்கள்.
28 அந்தப் பலிகளுக்கடுத்த போசனப்பலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒவ்வொரு காளைக்கும் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஆட்டுக் கிடாய்க்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
29 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வோர் ஆட்டுக்குட்டிக்கும் பத்துப் பாகத்தின் பத்தில் ஒரு பங்கையும் ஒப்புக்கொடுப்பதோடு,
30 பாவம் நிவாரணமாகும்படிக்குப் பலியிடப்படும் ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் கொண்டு வரவேண்டும். அன்றியும், (வழக்கப்படி) நித்திய முழுத்தகனப் பலியையும் அதைச் சேர்ந்த பானப்பலியையும் படைக்கக்கடவீர்கள்.
31 இந்த பலிமிருகங்களும் அவைகளுக்கடுத்த பானப்பலிகளும் மாசற்றவைகளாய் இருக்கவேண்டும்.

Numbers 28:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×