Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Nahum Chapters

Nahum 3 Verses

1 இரத்தக்கறை படிந்த நகரத்துக்கு ஐயோ கேடு! அதில் பொய்களும் கொள்ளைப் பொருளும் நிறைந்துள்ளன, சூறையாடல் அங்கே ஓயாமல் நடக்கிறது.
2 இதோ சாட்டைகளின் ஓசை, சக்கரங்களின் கிறீச்சொலி, தாவிப்பாயும் குதிரைகள், உருண்டு வரும் தேர்கள்!
3 சீறித் தாக்கும் குதிரை வீரர்கள், மின்னும் வாள், பளபளக்கும் ஈட்டி, வெட்டுண்டவர்களின் கூட்டம், பிணங்களின் குவியல், செத்தவர்களுக்குக் கணக்கில்லை- பிணங்களின்மேல் இடறி விழுகின்றனர்!
4 இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன? பேரழகும் கவர்ச்சியும் நிறைந்தவளாய், தன் வேசித்தனங்களால் மக்களினங்களையும், தன் மயக்கும் கவர்ச்சியால் கோத்திரங்களையும், விற்றுப்போடுகிற அந்த விலைமகளின் கணக்கிலடங்காத வேசித்தனங்களே காரணம்.
5 சேனைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ, நாம் உனக்கெதிராக இருக்கிறோம் உன் முகத்துக்கு மேலாக உன் உள்ளாடையைத் தூக்குவோம்; மக்களினங்கள் உன் அவமானத்தையும், அரசுகள் உன் ஈனத்தையும் பார்க்கும்படி செய்வோம்;
6 அருவருப்பானவற்றை உன்மீது எறிவோம், உன்னை வெறுப்புடன் நடத்திப் பகடிப்பொருள் ஆக்குவோம்;
7 உன்னை ஏறெடுத்துப் பார்ப்பவரெல்லாம் பின்வாங்கி, ' நினிவே பாழாய்ப் போய்விட்டது' என்று சொல்லுவார்கள்; உனக்காக இரங்குவோர் உண்டோ? உனக்கு ஆறுதல் சொல்வாரை எங்கே தேடுவோம்?
8 நைல் நதியின் கரையருகில் நீரால் சூழ்ந்து, கடலை நீரரணாகவும், தண்ணீரை மதிலாகவும் கொண்ட நோ-அமோனை விட நீ சிறப்புற்றாயோ?
9 எத்தியோப்பியாவும் எகிப்தும் அதன் வலிமையாயிருந்தன, அந்த வலிமைக்கு எல்லையில்லை; ஆப்பிரிக்காவும் லிபியும் உதவியாய் இருந்தன.
10 இருந்தும் அந்நாட்டு மக்கள் சிறை பிடிக்கப்பட்டனர், அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டனர்; அதன் குழந்தைகள் தெருக்கள் தோறும் நசுக்கப் பட்டனர், அதன் பெருங்குடி மக்கள் மேல் சீட்டுப் போடப்பட்டது, அந்நாட்டின் பெரிய மனிதர்கள் அனைவரும் சங்கிலிகளால் கட்டி இழுத்துச் செல்லப்பட்டனர்.
11 நீயும் குடிவெறியேறிக் கிடப்பாய், அனைவரும் உன் மேல் அருவருப்புக் கொள்வர்; நீயும் உன் பகைவனிடமிருந்து தப்பப் புகலிடம் தேடியலைய நேரிடும்.
12 உன் அரண்கள் யாவும் முன்பே பழுத்த கனிகள் நிறைந்த அத்தி மரங்களுக்கு ஒப்பானவை; மரங்களைப் பிடித்து உலுக்கினால், பழங்கள் தின்பவன் வாயில் விழும்.
13 இதோ, உன்னிடத்தில் இருக்கும் போர் வீரர்கள் உன்னிடமுள்ள பெண்களே! உன் நாட்டு வாயில்கள் பகைவர்க்குப் பரக்கத் திறந்துள்ளன, உன் தாழ்ப்பாள்கள் நெருப்புக்கு இரையாயின.
14 முற்றுகை நாட்களுக்காகத் தண்ணீர் சேமித்து வை, உன்னுடைய அரண்களை வலிமைப்படுத்து; களி மண்ணைப் பிசைந்துச் சேறாக்கு, செங்கல் அறுக்கச் சட்டங்களை எடு.
15 ஆயினும் நெருப்பு உன்னை விழுங்கும், வாளால் நீ வெட்டுண்டு மடிவாய், வெட்டுக்கிளி போல் உன்னை விழுங்கி விடும். வெட்டுக்கிளிகள் பறந்தோடுகின்றன: வெட்டுக்கிளி போல நீங்கள் பலுகுங்கள், பச்சைக்கிளி போல நீங்கள் பெருகுங்கள்;
16 விண்மீன்களை விட மிகுதியாக உன் வணிகர்களைப் பெருகச்செய்தாய்; வெட்டுக்கிளி இறக்கையை விரித்துப் பறந்தோடி விடுகிறது.
17 உன் காவல் வீரர்கள் பச்சைக் கிளிகளுக்கும், உன் அரசியல் அலுவலர்கள் வெட்டுக்கிளி கூட்டத்திற்கும் நிகர்; குளிர்ந்த நாளில் வேலிகள் மேல் உட்கார்ந்திருக்கின்றன, கதிரவன் எழுந்ததும் பறந்தோடி விடுகின்றன; அதன் பின் எங்கிருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.
18 அசீரிய அரசனே, உன் மேய்ப்பர்கள் துயில் கொண்டனர், உன் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் உறக்கத்தில் ஆழ்ந்தனர், கூட்டுவாரின்றி உன் மக்கள் மலைகளில் சிதறிப்போயினர்.
19 உன் காயத்துக்கு மருந்தில்லை, உன் புண் குணமாகாது; உன்னைப் பற்றிய செய்தி கேட்கும் யாவரும் கைகொட்டுவர்; ஏனெனில் உன் இடைவிடாக் கொடுமையால் துன்புறாதவர் உண்டோ?
×

Alert

×