Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Matthew Chapters

Matthew 14 Verses

1 அப்பொழுது இயேசுவைப்பற்றிய பேச்சு சிற்றரசன் ஏரோதின் காதுக்கு எட்டியது.
2 அவன் தன் ஊழியரிடம், "இவர் ஸ்நாபக அருளப்பர். இறந்தோரிடமிருந்து உயிர்த்திருக்கிறார். ஆதலால்தான் புதுமை செய்யும் வல்லமை இவரிடம் செயலாற்றுகிறது" என்று சொன்னான்.
3 அந்த ஏரோது தன் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாள்பொருட்டு அருளப்பரைப் பிடித்து விலங்கிட்டுச் சிறையிலடைத்திருந்தான்.
4 ஏனெனில், அருளப்பர் அவனை நோக்கி, "நீ அவளை வைத்திருக்கலாகாது" என்று சொல்லியிருந்தார்.
5 அவனோ அவரைக் கொன்றுவிட நினைத்தான். ஆனால், மக்கள் அவரை இறைவாக்கினராகக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்.
6 ஏரோதின் பிறப்பு விழாவில் ஏரோதியாளின் மகள் எல்லார்முன்னும் நடனம் ஆடி ஏரோதை மகிழ்வித்தாள்.
7 அதனால் அவள் தன்னிடம் எதைக் கேட்டாலும் கொடுப்பதாக அவன் ஆணையிட்டு உறுதிமொழி கூறினான்.
8 அவளோ தன் தாய் தூண்டிவிட்டபடி, "ஸ்நாபக அருளப்பரின் தலையை ஒரு தட்டில் இப்போதே எனக்குக் கொடும்" என்றாள்.
9 அரசன் வருந்தினான். ஆனால் தன் ஆணையின் பொருட்டும், விருந்தினர்பொருட்டும் அதைக் கொடுக்கக் கட்டளையிட்டான்.
10 ஆள் அனுப்பிச் சிறையில் அருளப்பரது தலையை வெட்டுவித்தான்.
11 அவருடைய தலையைத் தட்டில் கொண்டுவந்து சிறுமியிடம் கொடுக்க, அவளும் தன் தாயிடம் கொண்டுபோனாள்.
12 அவருடைய சீடர் வந்து அவருடலை எடுத்துச்சென்று அடக்கம் செய்துவிட்டு இயேசுவிடம் வந்து அறிவித்தனர்.
13 இதைக் கேட்டதும் இயேசு அங்கிருந்து படகேறித் தனிமையாகப் பாழ்வெளி சென்றார். இதைக் கேட்டு மக்கட்கூட்டம் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தது.
14 அவர் கரையில் இறங்கியபோது பெரும் கூட்டத்தைக் கண்டு அவர்கள்மீது மனமிரங்கி அவர்களுள் பிணியாளிகளைக் குணமாக்கினார்.
15 மாலையானதும் அவருடைய சீடர் அவரிடம் வந்து, "இது பாழ்வெளி ஆயிற்றே; நேரமும் ஆகிவிட்டது; ஊர்களுக்குச் சென்று உணவு வாங்கிக்கொள்ளும்படி கூட்டத்தை அனுப்பிவிடும்" என்றனர்.
16 இயேசுவோ அவர்களிடம், "அவர்கள் போக வேண்டியதில்லை. நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார்.
17 அதற்கு அவர்கள், "இங்கே ஐந்து அப்பமும் இரண்டு மீனும் தவிர வேறொன்றும் எங்களிடமில்லை" என்றனர்.
18 அவர், "அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள்" என்றார்.
19 கூட்டம் பசும்புல் தரையில் அமரும்படி கட்டளையிட்டு, ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, இறைபுகழ் கூறி, அப்பத்தைப் பிட்டுச் சீடருக்கு அளித்தார்; சீடர் கூட்டத்திற்கு அளித்தனர்.
20 அனைவரும் வயிறார உண்டனர். மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தனர்.
21 பெண்களும் சிறுவர்களும் நீங்கலாக, உணவு அருந்திய ஆண்கள் தொகை ஐயாயிரம்.
22 தாம் மக்களை அனுப்பிக்கொண்டிருக்கையில், சீடர்கள் உடனே படகிலேறிக் கடலைக் கடந்து தமக்குமுன் அக்கரைக்குப்போகும்படி இயேசு வற்புறுத்தினார்.
23 கூட்டத்தை அனுப்பியதும் செபிக்க தனியாக மலைமீது ஏறினார். இரவாயிற்று; அங்குத் தனித்திருந்தார்.
24 படகோ, எதிர்காற்றடித்தபடியால் அலைகளால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
25 நான்காம் சாமத்தில் அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்.
26 சீடரோ, அவர் கடல்மேல் நடப்பதைக் கண்டு கலங்கி, "ஐயா! பூதம்" என்று அச்சத்தால் அலறினர்.
27 உடனே இயேசு, "தைரியமாயிருங்கள், நான்தான், அஞ்சாதீர்கள்" என்று அவர்களுக்குச் சொன்னார்.
28 அதற்கு இராயப்பர், "ஆண்டவரே, நீர்தாம் என்றால், நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வரக் கட்டளையிடும்" என்றார்.
29 அவர், "வா" என்றார். இராயப்பரும் படகினின்று இறங்கிக் கடல்மீது நடந்து இயேசுவை நோக்கி வந்தார்.
30 காற்று பலமாயிருப்பதைக் கண்டு அஞ்சி மூழ்கப்போகையில், "ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று அலறினார்.
31 உடனே இயேசு கையை நீட்டி, அவரைப் பிடித்து, "குறைவான விசுவாசம் உள்ளவனே, ஏன் தயங்கினாய் ?" என்றார்.
32 அவர்கள் படகில் ஏறியதும் காற்று ஓய்ந்தது.
33 படகில் இருந்தவர்கள் வந்து அவரைப் பணிந்து, "உண்மையாகவே நீர் கடவுள்மகன்" என்றனர்.
34 அவர்கள் கடலைக் கடந்து கெனேசரேத்தில் கரை சேர்ந்தனர்.
35 அவ்விடத்து மக்கள் அவரை அறிந்துகொண்டதும், சுற்றுப்புறமெங்கும் ஆள் அனுப்பி நோயாளிகள் அனைவரையும் அவரிடம் கொண்டுவந்து,
36 அவருடைய போர்வை விளிம்பையாகிலும் தொடவிடும்படி அவரை வேண்டினர். தொட்டவர் அனைவரும் குணமாயினர்.
×

Alert

×