Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Luke Chapters

Luke 7 Verses

1 இவை எல்லாம் மக்களுக்குச் சொல்லி முடித்தபின் இயேசு கப்பர்நகூம் ஊருக்கு வந்தார்.
2 நூற்றுவர்தலைவன் ஒருவனுடைய ஊழியன் நோயுற்றுச் சாகக்கிடந்தான். தலைவன் அவன்மீது மிகுந்த பற்றுக்கொணடிருந்தான்.
3 இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு, யூதரின் மூப்பரை அவரிடம் அனுப்பித் தன் ஊழியனைக் காப்பாற்ற வருமாறு வேண்டினான்.
4 அவர்களும் இயேசுவிடம் வந்து, வருந்திக் கேட்டதாவது: " உம்மிடம் இவ்வரம் பெறுவதற்கு அவர் தகுதியுள்ளவரே.
5 ஏனெனில், நம் மக்கள்மீது அவருக்கு அன்பு மிகுதி. நமக்கெனச் செபக்கூடம் கட்டியிருக்கிறார்."
6 இயேசு அவர்கள்கூடப் போனார். வீட்டுக்குச் சற்றுத் தொலைவிலிருந்தபொழுதே அவரிடம் நூற்றுவர் தலைவன் நண்பர்களை அனுப்பி," ஆண்டவரே, இவ்வளவு தொந்தரை வேண்டாம்; நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்.
7 அதனால்தான் நானும் உம்மிடம் வரத் தகுதியற்றவன் எனக் கருதினேன். ஒரு வார்த்தை சொல்லும். என் ஊழியன் குணமாகட்டும்.
8 ஏனெனில், நான் அதிகாரத்திற்கு உட்பட்டவனாயினும் எனக்கு அடியிலும் படைவீரர் உள்ளனர். ஒருவனை நோக்கி, ' போ ' என்றால், போகிறான்; வேறொருவனை நோக்கி, ' வா ' என்றால், வருகிறான். என் ஊழியனைப் பார்த்து, ' இதைச் செய் ' என்றால், செய்கிறான் " என்றான்.
9 அதைக் கேட்ட இயேசு அவனை வியந்து தம்மைப் பின்தொடரும் மக்கட் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, "இஸ்ராயேல் மக்களிடையிலும் இத்துணை விசுவாசத்தை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்லுகிறேன் " என்றார்.
10 அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்து ஊழியன் உடல்நலத்தோடு இருப்பதைக் கண்டார்கள்.
11 அதன்பின் நயீன் என்ற ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் திரளான மக்களும் அவரோடு சென்றுகொண்டிருந்தனர்.
12 இயேசு ஊர்வாயிலை நெருங்கியபொழுது, இறந்த ஒருவனைத் தூக்கிவந்தனர். தாய்க்கு அவன் ஒரே பிள்ளை. அவளோ கைம்பெண். ஊராரும் அவளோடு பெருங்கூட்டமாக இருந்தனர்.
13 அவளைக் கண்டு ஆண்டவர் அவள்மீது மனமிரங்கி, "அழாதே." என்றார்.
14 பின்பு முன்னால் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிவந்தவர்கள் நின்றார்கள். நின்றதும், "இளைஞனே, உனக்கு நான் சொல்லுகிறேன், எழுந்திரு" என்றார்.
15 இறந்தவன் எழுந்து உட்கார்ந்து பேசத்தொடங்கினான். தாயிடம் அவனை ஒப்படைத்தார்.
16 அனைவரையும் அச்சம் ஆட்கொள்ள, "நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியுள்ளார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்" என்று அவர்கள் கடவுளை மகிமைப்படுத்தினார்கள்.
17 அவரைப்பற்றிய பேச்சு யூதேயா முழுவதிலும் சுற்றுப்புறமெங்கும் பரவியது.
18 அருளப்பனின் சீடர் இவற்றையெல்லாம் அவருக்குத் தெரிவித்தனர்.
19 அருளப்பர் தம் சீடருள் இருவரை அழைத்து, "வரப்போகிறவர் நீர்தாமோ ? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமோ?" என்று கேட்டுவர ஆண்டவரிடம் அனுப்பினார்.
20 அவர்கள் அவரிடம் வந்து, "' வரப்போகிறவர் நீர்தாமோ? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமோ? என்று கேட்குமாறு ஸ்நாபக அருளப்பர் எங்களை உம்மிடம் அனுப்பினார்" என்று சொன்னார்கள்.
21 அந்நேரத்தில் நோய் நோக்காடுகளாலும், பொல்லாத ஆவிகளாலும் வருந்தியவர்களைக் குணமாக்கி, குருடர் பலருக்குப் பார்வை அளித்துக்கொண்டிருந்தார்.
22 அவர் அவர்களுக்கு மறுமொழியாக, "நீங்கள் போய்க் கண்டதையும் கேட்டதையும் அருளப்பருக்கு அறிவியுங்கள்: குருடர் பார்க்கின்றனர், முடவர் நடக்கின்றனர், தொழுநோயாளர் குணமடைகின்றனர், செவிடர் கேட்கின்றனர், இறந்தவர் உயிர்க்கின்றனர், எளியவருக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
23 என்னைப்பற்றி இடறல்படாதவன் பேறுபெற்றவன்" என்றார்.
24 அருளப்பருடைய தூதர்கள் சென்ற பின்பு அவரைப்பற்றி மக்கட்கூட்டத்திற்கு இயேசு சொன்னதாவது: "எதைப் பார்க்கப் பாலைவனத்திற்குப் போனீர்கள்? காற்றில் அசையும் நாணலையோ?
25 பின் எதைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடை அணிந்த மனிதனையோ? இதோ! அலங்கார ஆடை அணிந்து இன்பமாய் வாழ்வோர் அரச மாளிகையில் உள்ளனர்.
26 பின் எதைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினருக்கும் மேலானவரைத்தான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
27 இவரைப்பற்றித்தான், 'இதோ! என் தூதரை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்' என்று எழுதியுள்ளது.
28 "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பெண்களிடம் பிறந்தவர்களுள் அருளப்பருக்கு மேலானவர் யாருமில்லை. ஆயினும் கடவுளுடைய அரசில் மிகச் சிறியவன் அவரினும் பெரியவன்.
29 அருளப்பர் சொன்னதை மக்கள் எல்லாரும் கேட்டு, அவர் கொடுத்த ஞானஸ்நானத்தைப் பெற்று, கடவுளின் திட்டம் ஏற்றத்தக்கது என்று காட்டினார்கள். ஆயக்காரரும்கூட ஞானஸ்நானம் பெற்றனர்.
30 ஆனால் பரிசேயரும் சட்டவல்லுநரும் அவர் கொடுத்த ஞானஸ்நானத்தைப் பெறாமல் கடவுளுடைய திட்டத்தை, தங்களைப் பொறுத்தமட்டில், வீணாக்கினார்கள்.
31 " இத்தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன் ? இவர்கள் யாருக்கு ஒப்பானவர்கள்?
32 பொது இடத்தில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் அழைத்து, ' நாங்கள் குழல் ஊதினோம், நீங்கள் ஆடவில்லை; நாங்கள் புலம்பினோம், நீங்கள் அழவில்லை ' என்று கூறும் சிறுவரைப் போன்றவர்கள் இவர்கள்.
33 ஏனெனில், ஸ்நாபக அருளப்பர் வந்தபோது அப்பம் உண்ணவில்லை, திராட்சை இரசம் குடிக்கவுமில்லை. ' அவரைப்பேய்பிடித்தவன்' என்று சொல்லுகிறீர்கள்.
34 மனுமகன் வந்தபோதோ உண்டார்; குடித்தார். 'அவரை இதோ! போசனப் பிரியன், குடிகாரன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் நண்பன் ' என்று சொல்லுகிறீர்கள்.
35 ஆனால் தேவஞானம் சரி என்று அதை ஏற்றுக்கொண்ட மக்கள் அனைவராலும் விளங்கிற்று."
36 பரிசேயன் ஒருவன் அவரைத் தன்னுடன் உண்பதற்கு அழைத்தான். அவரும் பரிசேயனுடைய வீட்டுக்கு வந்து உணவருந்த அமர்ந்தார்.
37 இதோ! பாவி ஒருத்தி அந்நகரிலே இருந்தாள். பரிசேயனுடைய வீட்டில் அவர் உணவருந்தப்போகிறார் என்று அறிந்து பரிமளத்தைலம் நிறைந்த படிகச்சிமிழ் ஒன்றை எடுத்து வந்தாள்.
38 அவருடைய கால்மாட்டில் பின்புறமாக இருந்து, அழுதுகொண்டே அவர் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து அவற்றைக் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு அப்பாதங்களில் தைலம் பூசினாள்.
39 அவரை அழைத்த பரிசேயன் இதைக் கண்டு, "இவர் இறைவாக்கினராய் இருந்தால் தம்மைத்தொடும் இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார். இவளோ பாவி" என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.
40 இயேசு அவனை நோக்கி, " சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும் " என்றான்.
41 "கடன் கொடுப்பவன் ஒருவனுக்கு கடன்காரர் இருவர் இருந்தனர். ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கடன்பட்டிருந்தனர்.
42 கடனைத் திருப்பிக்கொடுக்க அவர்களால் முடியாமற்போகவே இருவர்கடனையும் மன்னித்துவிட்டான். அவர்களுள் யார் அவனுக்கு அதிகமாக அன்புசெய்வான்?"
43 யாருக்கு அதிகக் கடனை மன்னித்தானோ அவன்தான் என்று நினைக்கிறேன்" என்றான் சீமோன். " நீர் சொன்னது சரி என்றார் அவர்.
44 பின்பு அப்பெண்ணின் பக்கம் திரும்பி, சீமோனிடம், " இவளைப் பார்த்தீரா? நான் உம் வீட்டுக்குள் வந்தபொழுது, நீர் என் பாதங்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவளோ என் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து அவற்றைக் கூந்தலால் துடைத்தாள்.
45 நீர் எனக்கு முத்தமளிக்கவில்லை; இவளோ, நான் உள்ளே வந்ததுமுதல் என் பாதங்களை முத்தம் செய்து ஓயவில்லை.
46 நீர் என் தலையில் எண்ணெய் பூசவில்லை; இவளோ என் பாதங்களுக்குப் பரிமளத்தைலம் பூசினாள்.
47 அதனால் நான் உமக்குச் சொல்வதாவது: அவள் செய்த பாவங்கள் பல மன்னிக்கப்பட்டன. அவள் காட்டிய பேரன்பே அதற்குச் சான்று. குறைவாக மன்னிப்புப் பெறுபவனோ குறைவாக அன்புசெய்கிறான் " என்றார்.
48 பின் அவளை நோக்கி, " உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.
49 " பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?" என்று அவரோடு பந்தி அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
50 அவரோ அப்பெண்ணை நோக்கி, "உன் விசுவாசம் உன்னை மீட்டது, சமாதானமாய்ப் போ" என்றார்.
×

Alert

×