Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Leviticus Chapters

Leviticus 7 Verses

1 குற்ற நிவர்த்தியாக ஒப்புக்கொடுக்கப்படும் பலியின் ஒழுங்கு முறையாவது: அது மிகவும் பரிசுத்தமானது.
2 ஆகையால் தகனப் பலி மிருகம் கொல்லப்படும் இடத்திலேயே குற்ற நிவர்த்திப் பலிமிருகமும் வெட்டப்படும். அதன் இரத்தம் பீடத்தைச் சுற்றிலும் ஊற்றப்படும்.
3 அதன் வாலும், குடல்களை மூடிய கொழுப்பும்,
4 இரண்டு சிறுநீரகங்களும், விலாவை அடுத்த கொழுப்பும், ஈரலின் மேலும் சிறுநீரகங்களின் மேலும் இருக்கிற சவ்வும் படைக்கப்படும்.
5 குரு அவற்றைப் பலிபீடத்தின் மேல் எரிக்கக் கடவார். அது குற்ற நிவர்த்தியின் பொருட்டு ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்படும் நறுமணமுள்ள தகனப் பலியாம்.
6 இது மிகவும் பரிசுத்தமானதால் இதன் இறைச்சியைக் குரு குலத்தைச் சேர்ந்த ஆடவர் மட்டும், பரிசுத்த இடத்தில் வைத்து உண்பார்கள்.
7 பாவ நிவாரணப் பலி போன்றே குற்ற நிவர்த்திப்பலியும். அவ்விரண்டிற்கும் ஒழுங்கு முறை ஒன்றே. அவற்றைப் படைக்கும் குருவுக்கே அவை சொந்தம்.
8 தகனப் பலிமிருகத்தை ஒப்புக்கொடுக்கிற குரு அதன் தோலைத் தமக்காக வைத்துக் கொள்வார்.
9 அடுப்பிலே ஏற்றிச் சமைக்கப் படும் மிருதுவான மாவின் பலியும், இரும்புத் தட்டின் மேலும் சட்டியிலும் சமைக்கப் பட்டவை எல்லாமும் அததைச் செலுத்துகிற குருவுக்குச் சொந்தமாகும்.
10 எண்ணெயில் பிசைந்ததும் சமைக்கப் படாததுமானவை ஆரோனின் புதல்வரெல்லாருக்கும் சரிபாகமாகப் பங்கிடப்படும்.
11 ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கப்படுகிற சமாதானப் பலியைச் சார்ந்த ஒழுங்கு முறையாவது:
12 ஒருவன் நன்றிக் கடனிற்காகப் பலி ஒப்புக் கொடுப்பதாயிருந்தால், அவன் எண்ணெய் தெளிக்கப்பட்ட புளியாத அப்பங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளியாத பணியாரங்களையும், சமைக்கப்பட்ட மிருதுவான மாவையும், எண்ணெய் கலந்த பலகாரங்களையும் ஒப்புக்கொடுப்பானாக.
13 நன்றியறிதலாகச் செலுத்தப்படும் சமாதானப் பலியின் போது அவன் புளித்த மாவினால் செய்யப்பட்ட அப்பங்களையும் சேர்த்து ஒப்புக்கொடுக்கட்டும்.
14 இந்தப் படைப்புக்களில் ஒவ்வொன்று முதற் பலனாக ஆண்டவருக்குச் செலுத்தப்படும். அது பலியின் இரத்தத்தைத் தெளிக்கிற குருவைச் சேரும்.
15 அதன் இறைச்சியோ அதே நாளில் உண்ணப்பட வேண்டும். அதில் யாதொன்றையும் விடியற்காலை வரை வைத்திருக்கக் கூடாது.
16 ஒருவன் நேர்ச்சியின் பொருட்டோ, தன் சொந்த விருப்பத்தினால் உந்தப்பட்டோ பலி செலுத்தினால், அதுவும் அதே நாளில் உண்ணப்படும். மீதி ஏதேனும் இருக்குமாயின் மறுநாள் உண்ணலாம்.
17 ஆனால், மூன்றாம் நாள் அதில் ஏதாவது மீதியிருக்குமானால், அதுவெல்லாம் சுட்டெரிக்கப்படவேண்டும்.
18 ஒருவன் சமாதானப் பலியின் இறைச்சியில் மீதியானதை மூன்றாம் நாள் உண்பானாயின், அந்தக் காணிக்கை வீணாகி, அதைச் செலுத்தினவனுக்குப் பலனின்றிப் போய்விடும். அதனோடு இத்தகைய இறைச்சியால் தன்னையே தீட்டுப்படுத்தும் எவனும் குற்றவாளியாவான்.
19 தீட்டான எந்தப் பொருளிலேனும் பட்ட இறைச்சி உண்ணப்படாமல் நெருப்பிலே சுட்டெரிக்கப்படக் கடவது. மற்ற இறைச்சியை, தூய்மையாயிருக்கிறவன் உண்ணலாம்.
20 தீட்டுள்ளவனாய் இருக்கிறவன் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட சமாதானப் பலியின் இறைச்சியை உண்டால், அவன் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக்கடவான்.
21 அப்படியே மனிதனுடைய தீட்டையோ மிருகத்தினுடைய தீட்டையோ, அல்லது தீட்டுப்படுத்தக் கூடிய வேறெந்தப் பொருளின் தீட்டையோ, தொட்டபின் (மேற்சொன்ன) இறைச்சியை உண்பவன் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக்கடவான் என்றருளினார்.
22 மேலும் ஆண்டவர் மேயீசனை நோக்கி:
23 நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது:ஆடு, மாடு, வெள்ளாடு இவற்றின் கொழுப்பை நீங்கள் உண்ணலாகாது.
24 தானாய்ச் செத்த மிருகத்தினுடைய கொழுப்பையும் கொடிய மிருகத்தால் கொல்லப்பட்ட மிருகத்தினுடைய கெழுப்பையும் நீங்கள் பலவிதமாய்ப் பயன்படுத்தலாம்.
25 ஆண்டவருக்குத் தகனப் பலியாக ஒப்புக்கொடுக்கப்பட வேண்டிய கொழுப்பை உண்டவன் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக்கடவான்.
26 பறவையானாலும் சரி, மிருகமானாலும் சரி. நீங்கள் யாதொரு உயிரினத்தின் இரத்தத்தையும் உண்ணலாகாது.
27 எவனேனும் இரத்தத்தை உண்டிருந்தால், அவன் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக்கடவான் என்றருளினார்.
28 மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
29 நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது: ஆண்டவருக்குச் சமாதானப்பலி செலுத்துபவன் அதனுடன் சொந்தப் பலியாகிய பானபோசனப் பலியையும் செலுத்தக்கடவான்.
30 அவன் பலிமிருகத்தினுடைய கொழுப்பையும் மார்பையும் கைகளில் ஏந்திக்கொண்டு, அவ்விரண்டையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த பின் குருவிடம் ஒப்புவித்து விடுவான்.
31 இவர் கொழுப்பைப் பலிப் பீடத்தின் மேல் எரிப்பார். மார்போ ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் உரியதாகும்.
32 சமாதானப்பலி மிருகங்களுடைய வலது முன்னந் தொடை புதுப்பலனாகக் குருவுக்குச் சொந்தமாகும்.
33 ஆரோனின் புதல்வரில் இரத்தத்தையும் கொழுப்பையும் ஒப்புக் கொடுப்பவனுக்கு வலது முன்னந்தொடை சொந்தமாகும்.
34 ஏனென்றால் இஸ்ராயேல் மக்களுடைய சமாதானப் பலிகளில், எழுச்சியாகிய மார்பையும், பிரித்தலாகிய முன்னந் தொடையையும் நாமே எடுத்து, ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் கொடுத்துள்ளோம். இது இஸ்ராயேல் குடிகள் அனைவராலும் மாறாத கட்டளையாய் அனுசரிக்கப்பட வேண்டியது என்றருளினார்.
35 மேயீசன் ஆரோனையும் அவர் புதல்வர்களையும் குருத்துவ அலுவலுக்கென அபிசேகம் செய்த நாளில், அவர்களுக்குத் திருமறைச் சடங்குகளிலே ஏற்பட்ட பலனும் அதுவே.
36 இஸ்ராயேல் மக்கள் மாறாத கட்டளையாய்த் தலைமுறை தோறும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று ஆண்டவரால் கட்டளையிடப் பட்டதும் அதுவே.
37 பாவப் பரிகாரமாகவும் குற்ற நிவர்த்திக்காகவும் ஒப்புக்கொடுக்கப்படும் பலி, அபிசேகப் பலி, சமாதானப் பலி ஆகிய பலிகளுக்கடுத்த ஒழுங்கு முறையும் அதுவே.
38 சீனாய்ப் பாலைநிலத்திலிருந்த இஸ்ராயேல் மக்கள் தங்கள் காணிக்கைகளை ஆண்டவருக்குச் செலுத்த வேண்டுமென்று ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்ட போதே அதைச் சீனாய் மலையில் திட்டப்படுத்தி அருளினார்.
×

Alert

×