Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Leviticus Chapters

Leviticus 18 Verses

1 மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2 நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
3 நீங்கள் முன் குடியிருந்த எகிப்து நாட்டின் வழக்கப்படி ஒழுகவும் வேண்டாம்; நாம் உங்களை அழைத்துப் போகிற கானான் நாட்டாரின் நடத்தைக்கு ஒத்த வண்ணம் நடக்கவும் வேண்டாம். அவர்களுடைய முறைமைகளைக் கைக்கொள்ளவும் வேண்டாம்.
4 நமது நீதி முறைகளின்படி நடந்து, நம்முடைய கட்டளைகளை நிறைவேற்றி, நம்முடைய சட்ட நெறியின்படி ஒழுகக் கடவீர்களாக. ஆண்டவராகிய நாமே உங்கள் கடவுள்.
5 நமது கட்டளைகளையும் நீதி நெறிகளையும் கைக்கொள்ளக்கடவீர்கள். அவைகளின்படி நடப்பவன் அவைகளால் வாழ்வு பெறுவான்.
6 எந்த மனிதனாயினும் தனக்கு நெருங்கின உறவுள்ள பெண்ணைச் சார்ந்து, அவளுடைய நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது.
7 நாம் ஆண்டவர். உன் தந்தையின் நிருவாணத்தையும் உன் தாயின் நிருவாணத்தையும் நீ வெளிப்படுத்த வேண்டாம். அவள் உன் தாயென்று (மதித்து), அவளுடைய நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது.
8 உன் தந்தையினுடைய மனைவியின் நிருவாணத்தையும் வெளிப்படுத்தலாகாது. அவளுடைய நிருவாணம் உன் தந்தையின் நிருவாணமே.
9 உன் தந்தைக்கோ தாய்க்கோ வீட்டிலேயாவது வெளியிலேயாவது பிறந்த புதல்வியாகிய உன் சகோதரியின் நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது.
10 உன் புதல்வனுடைய மகளின் நிருவாணத்தையோ, உன் புதல்வியின் மகளுடைய நிருவாணத்தையோ வெளிப்படுத்தலாகாது. அவளுடைய நிருவாணம் உன்னுடைய நிருவாணமே.
11 உன் தந்தையினுடைய மனைவியின் வயிற்றில் அவனுக்குப் பிறந்த புதல்வி அவள் உனக்குச் சகோதரியே.
12 உன் தந்தையின் சகோதரியின் நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது. ஏனென்றால், அவளுடைய மாமிசமும் உன் தந்தையின் மாமிசமும் ஒன்றுதான்.
13 உன் தாயின் சகோதரியின் நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது. ஏனென்றால், அவளுடைய மாமிசமும் உன் தாயின் மாமிசமும் ஒன்றுதான்.
14 உன் தந்தையின் சகோதரியின் நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது. அவன் மனைவியோடு சேரலும் ஆகாது. ஏனென்றால், அவளுக்கும் உனக்கும் உறவு உண்டு.
15 உன் மருமகளுடைய நிருவாணத்தையும் வெட்கத்தையும் வெளிப்படுத்தலாகாது. ஏனென்றால், அவள் உன் மகனின் மனைவி.
16 உன் சகோதரனுடைய மனைவியின் நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது. ஏனென்றால், அவளுடைய நிருவாணம் உன் சகோதரனுடைய நிருவாணமே.
17 உன் மனைவியினுடைய நிருவாணத்தை ஒருவருக்கும் காட்டலாகாது. அவள் புதல்வியின் நிருவாணத்தையும் வெளிப்படுத்தலாகாது. அவளுடைய புதல்வனின் மகளின் நிருவாணத்தையும் வெளிப்படுத்தலாகாது. ஏனென்றால், இவர்கள் அவளுக்கு நெருங்கிய உறவு .
18 அது முறை கேடு. உன் மனைவி இருக்கையில், அவளோடு கூட அவளுடைய சகோதரியையும் மனைவியாகக் கொண்டு அவளுடைய நிருவாணத்தை வெளிப்படுத்தலாகாது.
19 மாத விடாயுள்ள பெண்ணோடு சேர்ந்து, அவள் அசுத்தத்தை வெளிப்படுத்தலாகாது.
20 பிறனுடைய மனைவியோடு படுத்தலாகாது. அவளோடு சேர்ந்து, இரத்தக் கலப்பினால் உன்னைத் தீட்டுப் படுத்தலாகாது.
21 உன் பிள்ளைகளில் எவனையும் மொலோக் விக்கிரகத்திற்கு நேர்ந்து கொள்ளும்படி கொடுக்கவும் கூடாது; உன் கடவுளுடைய திருப்பெயரை இழிவு படுத்தவும் கூடாது.
22 நாமே ஆண்டவர். பெண்ணோடு சேர்க்கை கொள்வது போல் ஆணோடு சேர்க்கை கொள்ளாதே. அது வெறுப்புக்குரிய தீச் செயல்.
23 எந்த மிருகத்தோடும் நீ புணர்ச்சி செய்து, அதனால் உன்னைத் தீட்டுப் படுத்தலாகாது. மிருகத்தோடு புணரும்படி எந்தப் பெண்ணும் அதற்குத் தன் மடியை வெளிப்படுத்தலாகாது. அது பெரும் தீச்செயல் அல்லவா ?
24 நாம் உங்கள் முன்னின்று துரத்தப் போகிற எல்லா இனத்தாரும் இப்படிப்பட்டவைகளால் தங்களை மாசுபடுத்தியிருக்கிறார்கள். நீங்கள் அவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப் படுத்தாதிருங்கள்.
25 அப்படிப்பட்ட தீச்செயல்களால் அவர்களுடைய நாடும் தீட்டுப்படுத்தப் பட்டது. ஆதலால், அதன் பாவங்களை நாம் விசாரிப்போம். இந்நாடும் தன் குடிகளைக் கக்கிப்போடும்படி செய்வோம்.
26 நீங்களோ நமது கட்டளைகளையும் நீதி நெறிகளையும் கைக்கொண்டு, வெறுப்புக்குரிய அத்தீச் செயல்களில் ஒன்றையும் செய்யாதீர்கள். குடிமகனும் அந்நியனும் அவற்றை விலக்கக் கடவார்கள்.
27 உங்களுக்கு முன்னிருந்த இந்நாட்டுக் குடிகள் வெறுக்கத்தக்க மேற்சொன்ன தீச்செயல்களையெல்லாம் செய்து தங்கள் நாட்டைத் தீட்டுப் படுத்தினார்கள்.
28 ஆகையால், நீங்கள் அப்படிப் பட்டவைகளைச் செய்தால், நாடு முன்பே தன் குடிகளைக் கக்கினது போல் உங்களையும் கக்கிப் போடுமென்று எச்சரிக்கையாய் இருங்கள்.
29 மேற் சொன்ன வெறுப்புக் குரிய தீச் செயல்களில் எவற்றையேனும் செய்பவன் தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக் கடவான்.
30 நமது கட்டளைகளைக் கைக் கொள்ளுங்கள். உங்களுக்கு முன் இருந்தவர்கள் செய்த தீச்செயல்களை நீங்களும் செய்து, அவற்றாலே தீட்டுப்படாத படிக்கு எச்சரிக்கையாய் இருங்கள். நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்றார்.
×

Alert

×