Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Lamentations Chapters

Lamentations 2 Verses

1 இரண்டாம் புலம்பல்: ஆலேஃப்: ஆண்டவர் தமது ஆத்திரத்தில், சீயோன் மகளை இருளால் மூடினாரே! இஸ்ராயேலின் மகிமையை வானினின்று தரைமட்டும் அவர் தாழ்த்தி விட்டார்; அவருக்குக் கோபம் வந்த போது தம் கால்மணையை முற்றிலும் மறந்து விட்டார்.
2 பேத்: யாக்கோபின் வீடுகள் யாவற்றையும் ஆண்டவர் இரக்கமின்றி அழித்துவிட்டார்; யூதா என்னும் மகளின் கோட்டைகளைத் தம்முடைய கோபத்தில் தகர்த்து விட்டார்; அரசையும் அதை ஆள்வோரையும் வீழ்த்திச் சாபத்துக்குள்ளாக்கினார்.
3 கீமேல்: தம்முடைய கோபத்தின் ஆத்திரத்தில் இஸ்ராயேலின் வலிமை யெல்லாம் முறித்து விட்டார்; பகைவன் எதிர்த்து வந்தபோது தம் வலக் கையைப் பின்னாலே வாங்கிக் கொண்டார்; சுற்றிலும் பிடித்தெரியும் பெருந்தீயை யாக்கோபின் நடுவிலே மூட்டிவிட்டார்;
4 தாலேத்: எதிரியைப்போல வில்லை நாணேற்றினார், தம்முடைய வலக் கையைப் பலப்படுத்தினார்; பார்ப்பதற்கு அழகாயிருந்த அனைத்திற்கும் அவரே பகைவனாகி அழித்துவிட்டார்; சீயோன் மகளுடைய கூடாரத்தின் மேல் தம் கோபத்தைத் தீ மழைபோலக் கொட்டி விட்டார்.
5 ஹே: ஆண்டவர் பகைவனைப் போல் ஆகி விட்டார், இஸ்ராயேலை வீழ்த்தி விட்டார்; அரண்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்தார், அதனுடைய கோட்டைகளைப் பாழாக்கினார்; யூதா என்னும் மகளுக்கு அழுகையும் ஒப்பாரியும் பெருகச் செய்தார்.
6 வெள: தோட்டத்துக் குடிசை போலத் தன் கூடாரத்தைப் பாழாக்கினார், தம்முடைய இருப்பிடத்தைத் தகர்த்தெறிந்தார்; திருநாட்களும் ஒய்வு நாட்களும் சீயோனில் ஆண்டவர் மறக்கப்படச் செய்து விட்டார். அரசரையும் அர்ச்சகரையும் தம் கோபத்தின் ஆத்திரத்தில் புறக்கணித்துத் தள்ளி விட்டார்.
7 ஸாயின்: ஆண்டவர் தம் பீடத்தின்மேல் வெறுப்புக்கொண்டார், இந்தப் பரிசுத்த இடமே வேண்டாமென்றார்; அவளுடைய அரண்மனை மதில்களையும் மாற்றானின் கைகளில் ஒப்புவித்தார்; திருவிழா நாள் போலப் பேரிரைச்சல் ஆண்டவரின் கோயிலில் எழுப்பினார்கள்.
8 ஹேத்: சீயோன் மகளின் மதிற் சுவரை ஆண்டவர் தகர்த்திடத் தீர்மானித்தார். நூல் போட்டு எல்லைகளை வரையறுத்தார், அழிக்காமல் கையை மடக்க மாட்டார்; அரணும் அலங்கமும் புலம்பச் செய்தார், இரண்டும் ஒருமிக்கச் சரிந்து விழுகின்றன.
9 தேத்: வாயில்கள் விழுந்து மண்ணில் அழுந்தின, தாழ்ப்பாள்களை அவர் முறித்தழித்தார்; அரசர்களும் தலைவர்களும் புறவினத்தாரிடை வாழ்கின்றனர், திருச்சட்டம் இல்லாமல் போயிற்று; சீயோனின் இறைவாக்கினர் காட்சியொன்றும் ஆண்டவரிடமிருந்து கண்டாரல்லர்.
10 இயோத்: சீயோன் மகளின் முதியவர்கள் பேச்சற்றுத் தரையில் அமர்ந்துள்ளார்கள்; தலையினில் சாம்பலைத் தெளித்துக் கொண்டு இடையினில் கோணி உடுத்தியுள்ளனர்; யெருசலேமின் கன்னிப் பெண்களெல்லாம் தலைகளைத் தரையில் நட்டுக் கொண்டார்கள்.
11 காஃப்: கண்ணீர் சிந்தி என் கண்கள் சோர்ந்து போயின, என்னுள்ளம் கலங்கித் துடிக்கின்றது; என் மக்களாம் மகளுடைய துயரங் கண்டு, சிறுவரும் குழந்தைகளும் தெருக்களிலே விழுவதைக் கண்டு உள்ளம் உருகிப் பாகாய்ப் பூமியில் ஒடிச் சிதைகின்றது.
12 லாமேத்: கத்தியால் குத்துண்டோர் சாய்வது போல நகரத்தின் தெருக்களில் வீழும் போதும், தங்களின் தாய்மார் மடிதனிலே ஆவியைத் துறக்கச் சாயும் போதும், தாய்மாரை நோக்கி, "உணவெங்கே?" எனக் கேட்டுக் கதறினார்கள்.
13 மேம்: யெருசலேம் மகளே! யாருக்கு நீ நிகரென்பேன்? உன்னை நான் யாருக்கு ஒப்பிடுவேன்? சீயோன் மகளே கன்னிப் பெண்ணே, உன்னை யாருக்குச் சமமாக்கித் தேற்றுவேன்? உன் அழிவு கடல் போலப் பெரிதாயிற்றே! உன்னைக் குணமாக்க வல்லவன் யார்?
14 உன் தீர்க்கதரிசிகள் உனக்குப் பொய்களையும் மடைமகளையும் பார்த்துச் சொன்னார்கள்; அடிமைத்தனத்திற்கு உள்ளாகாதபடி உன் அக்கிரமத்தை உனக்கெடுத்துக் காட்டவில்லை; பொய்யான வாக்குகளும் கற்பனைகளும் உனக்குச் சொல்லி உன்னை வஞ்சித்தார்கள்.
15 சாமேக்: இவ்வழியாய்க் கடந்து செல்லும் மக்களெல்லாம் உன்னைக் கண்டு கைகளைத் தட்டினார்கள்; யெருசலேம் மக்களைப் பார்த்துச் சீழ்க்கையடித்துத் தலையசைத்து, "நிறையழகு நகரிதுவோ? உலகுக்கெல்லாம் மகிழ்ச்சியாய் விளங்குமந்த நகரிதுவோ?" என்று அவர்கள் சொன்னார்கள்.
16 பே: பகைவரெல்லாம் உனக்கெதிராய் வாய்திறந்து பற்களை நற நறவெனக் கடித்தார்கள்; "நாமதனை விழுங்கிடுவோம், நாம் காத்திருந்த நாளும் இதோ வந்திட்டது, அதனைக் கண்டடைந்தோம், கண்களால் பார்த்தோம்" என்றார்கள்; சீழ்க்கையடித்துப் பரிகாசம் செய்திட்டார்கள்.
17 ஆயின்: ஆண்டவர் நினைத்ததை நிறைவேற்றி விட்டார், எச்சரித்ததைச் செயலிலே காட்டிவிட்டார், நெடுநாளாய்த் திட்டமிட்டிருந்தவாறே, அழித்திட்டார், இரக்கமே காட்டவில்லை; பகைவன் உன்னைப் பற்றி மகிழச் செய்தார், எதிரிகளின் வலிமையைப் பெருகச் செய்தார்.
18 சாதே: சீயோன் மகளே, ஆண்டவரை நோக்கிப் புலம்பிக் கூக்குரலிடு; இரவும் பகலும் உன் கண்களினின்று வெள்ளம் போலக் கண்ணீர் வழிந்தோடட்டும்; ஓய்வென்பது உனக்கிருக்கக் கூடாது, கண்விழிகள் சும்மாயிருக்க விட்டிடாதே.
19 கோப்: எழுந்திரு, இரவில் முதற் சாமத்தின் தொடக்கத்திலேயே குரலெழுப்பு; ஆண்டவரின் திருமுன் உன் இதயத்தை வழிந்தோடும் தண்ணீராய் வார்த்திடுக! தெரு தோறும் மூலையினில் பசியால் வாடி மயங்கிடும் உன் மக்களின் உயிருக்காக உன்னுடைய கைகளை மேலுயர்த்தி அவரிடத்தில் இப்பொழுது இறைஞ்சிடுவாய்.
20 ரேஷ்: ஆண்டவரே, பார்த்தருளும், கடைக்கண்ணோக்கும்! யாருக்கிதைச் செய்தீரென எண்ணிப்பாரும்? தம் வயிற்றின் கனிகளை- கையிலேந்திய குழந்தைகளைப் பெற்றவளே பசியினால் உண்ணவேண்டுமா? ஆண்டவரின் கோயிலில் அர்சசகரும் இறைவாக்கினரும் கொல்லப்பட வேண்டுமா?
21 ஷின்: இளைஞரும் முதியோரும் தெருக்களிலே தரையில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்; என்னுடைய கன்னிப் பெண்கள், வாலிபர்கள் வாளுக்கு இரையாகி மாய்ந்து விட்டார்; உம்முடைய கோபத்தின் நாளினிலே அவர்களை இரக்கமின்றிக் கொன்று போட்டீர்.
22 தௌ: எப்பக்கமும் நடுக்கம் தரும் தன் எதிரிகளைத் திருவிழாக் கூட்டம்போல் கொண்டு வந்தீர்; ஆண்டவர் சினங்கொண்ட அந்த நாளில் ஒருவனும்- தப்பவில்லை, பிழைக்க வில்லை; அவர்களைச் சீராட்டி நான் வளர்த்தேன், பகைவனோ அவர்களைக் கொன்றெழித்தான்.
×

Alert

×