Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

John Chapters

John 19 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

John Chapters

John 19 Verses

1 பின்பு பிலாத்து இயேசுவைக் கொண்டுபோய், சாட்டையால் அவரை அடிக்கச்செய்தான்.
2 மேலும் படைவீரர் முள்ளால் ஒரு முடியைப் பின்னி, அவருடைய தலையில் வைத்து, அவருக்குச் சிவப்புப்போர்வை உடுத்தினர்.
3 அருகில் வந்து, "யூதரின் அரசே, வாழி!" என்று சொல்லிக்கொண்டு, அவருடைய கன்னத்தில் அறைமேல் அறை அறைந்தனர்.
4 பிலாத்து மீண்டும் வெளியே வந்து, மக்களைப் பார்த்து, "இதோ! நான் அவனை உங்கள்முன் வெளியே கொண்டுவருகிறேன். அவனிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லையென அறிந்துகொள்ளுங்கள்! " என்றார்.
5 ஆகவே, இயேசு முண்முடி தாங்கி, சிவப்புப் போர்வை அணிந்தவராய் வெளியே வந்தார். பிலாத்து அவர்களை நோக்கி, "பாருங்கள், இதோ! மனிதன்" என்றார்.
6 அவரைக் கண்டதும் தலைமைக்குருக்களும் காவலர்களும், "சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்! " என்று கத்தினர். அப்போது பிலாத்து, "நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறைந்துகொள்ளுங்கள்: நானோ இவனிடம் குற்றம் ஒன்றும் காணவில்லை" என்றார்.
7 அதற்கு யூதர், "எங்களுக்குச் சட்டம் ஒன்று உண்டு; அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில், தன்னைக் கடவுளின் மகன் ஆக்கிக்கொண்டான்" என்றனர்.
8 இவ்வார்த்தையைக் கேட்டுப் பிலாத்து இன்னும் அதிகமாக அஞ்சினார்.
9 மீண்டும் அரண்மனைக்குள் சென்று இயேசுவை நோக்கி, "நீ எங்கிருந்து வந்தவன் ?" என்று கேட்க, இயேசு மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை.
10 அப்போது பிலாத்து, "என்னிடம் ஒன்றும் சொல்லமாட்டாயா ? உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரமுண்டு, விடுவிக்கவும் அதிகாரம் உண்டு, தெரியாதா ?" என்றார்.
11 இயேசுவோ, "மேலிருந்து உமக்கு அருளப்படாதிருந்தால், என்மேல் உமக்கு எவ்வதிகாரமும் இராது. ஆதலால் என்னை உம்மிடம் கையளித்தவன்தான் பெரிய பாவத்துக்குள்ளானான்" என்றார்.
12 அதுமுதல் பிலாத்து அவரை விடுவிக்க வழிதேடினார். யூதர்களோ, "இவனை விடுவித்தால், நீர் செசாருடைய நண்பர் அல்ல. தன்னை அரசனாக்கிக்கொள்ளும் எவனும் செசாரை எதிர்க்கிறான்" என்று கூவினார்கள்.
13 பிலாத்து இவ்வார்த்தைகளைக் கேட்டு, இயேசுவை வெளியே அழைத்துவந்து நீதியிருக்கைமீது அமர்ந்தார். அது ' கல்தளம் ' என்ற இடத்தில் இருந்தது. அந்த இடத்திற்கு எபிரேய மொழியில் கபத்தா என்பது பெயர்.
14 அன்று பாஸ்காவுக்கு ஆயத்தநாள்; ஏறக்குறைய நண்பகல். அப்போது பிலாத்து யூதர்களை நோக்கி, "இதோ! உங்கள் அரசன்! " என்றார்.
15 அவர்களோ, "ஒழிக, ஒழிக! இவனைச் சிலுவையில் அறையும்! " என்று கத்தினார்கள். அதற்குப் பிலாத்து, "உங்கள் அரசனை நான் சிலுவையில் அறைவதா?" என்று கேட்க, தலைமைக்குருக்கள், "செசாரைத் தவிர வேறு அரசர் எங்களுக்கில்லை" என்று சொன்னார்கள்.
16 அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையும்படி அவர்களிடம் கையளித்தார். ஆகவே, அவர்கள் அவரைக் கூட்டிக்கொண்டு போனார்கள்.
17 இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு - எபிரேய மொழியிலே கொல்கொத்தா - எனப்படும் இடத்திற்குச் சென்றார்.
18 அதற்கு ' மண்டை ஓடு ' என்பதுபொருள். அங்கு இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அவரோடு வேறு இருவரை இரு பக்கங்களிலும், இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள்.
19 பிலாத்து அறிக்கை ஒன்று எழுதிச் சிலுவையில் பொருத்தச்செய்தார்; "நாசரேத்தூர் இயேசு யூதரின் அரசன்" என்று அதில் எழுதியிருந்தது.
20 இயேசுவைச் சிலுவையில் அறைந்த இடம் நகருக்கு அருகில் இருந்ததால், யூதர் பலர் அவ்வறிக்கையைப் படித்தனர். அது எபிரேயம், இலத்தின், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதியிருந்தது.
21 யூதரின் தலைமைக்குருக்கள் பிலாத்துவிடம் சென்று, " ' யூதரின் அரசன் ' என்று எழுதவேண்டாம்; ' யூதரின் அரசன் நான் ' என்று அவன் கூறியதாக எழுதும்" என்று கேட்டுக்கொண்டார்கள்.
22 ஆனால் பிலாத்து, "நான் எழுதியது எழுதியதுதான்" என்றார்.
23 அவரைச் சிலுவையில் அறைந்தபின், படைவீரர் அவருடைய உடைகளை நான்கு பாகமாகப் பிரித்து, ஆளுக்கொன்று எடுத்துக்கொண்டனர். அங்கியையும் எடுத்துக்கொண்டனர்; அந்த அங்கி மேலிருந்து அடிவரை தையலில்லாமல் நெய்யப்பட்டிருந்தது.
24 அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, "இதைக் கிழிக்கவேண்டாம்; இது யாருக்கு வரும் என்று பார்க்கச் சீட்டுப்போடுவோம்" என்றார்கள்."என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டார்கள், என் உடைமீது சீட்டுப்போட்டார்கள்" என்று எழுதியுள்ள மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேற வேண்டியிருந்தது. படைவீரர் இப்படிச் செய்துகொண்டிருந்தபோது,
25 இயேசுவின் சிலுவையருகில் அவருடைய தாயும், அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும், மதலேன் மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
26 இயேசு தம் தாயையும் அருகில் நின்றதம் அன்புச் சீடரையும் கண்டு, தம் தாயை நோக்கி, "அம்மா, இதோ! உம் மகன்" என்றார்.
27 பின்பு சீடரை நோக்கி, "இதோ! உன் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவளைத் தம் வீட்டில் ஏற்றுக்கொண்டார்.
28 பின்பு, எல்லாம் நிறைவேறியது என்று அறிந்த இயேசு, "தாகமாயிருக்கிறது" என்றார்; மறைநூல் நிறைவேறவே இப்படிச் சொன்னார்.
29 அங்கே ஒரு பாத்திரம் நிறையக் காடி இருந்தது. அதில் கடற்காளானைத் தோய்த்து, ஈசோப்பில் பொருத்தி, அதை உயர்த்தி அவரது வாயில் வைத்தார்கள்.
30 காடியைச் சுவைத்தபின் இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" என்றார். பின்பு தலைசாய்த்து ஆவியைக் கையளித்தார்.
31 அன்று பாஸ்காவுக்கு ஆயத்த நாள். - அடுத்த நாள் ஓய்வுநாளாகவும் பெருவிழாவாகவும் இருந்தது. - அந்த விழாவின்போது சிலுவையில் சவங்கள் இருத்தலாகாதென்று, கால்களை முறித்துப் பிணங்களை எடுத்துவிடப் பிலாத்துவினிடம் யூதர் விடைகேட்டனர்.
32 ஆகவே, படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையுண்டிருந்த இருவரின் கால்களையும் முறித்தனர்.
33 பின்பு இயேசுவிடம் வந்தனர்; அவர் ஏற்கெனவே இறந்திருப்பதைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை.
34 ஆனால், படைவீரன் ஒருவன் அவருடைய விலாவை ஈட்டியால் குத்தினான்; உடனே இரத்தமும் நீரும் வெளிவந்தன.
35 இதைப் பார்த்தவனே இதற்குச் சாட்சியம் கூறியுள்ளான். - அவனுடைய சாட்சியம் உண்மையானதே; தான் கூறுவது உண்மை என்பது அவனுக்குத் தெரியும். - எனவே, நீங்களும் விசுவாசம் கொள்வீர்களாக.
36 "அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிபடாது" என்று எழுதியுள்ள மறைநூல் வாக்கு நிறைவேறுவதற்கே இவ்வாறு நிகழ்ந்தது.
37 மீண்டும், "தாங்கள் ஊடுருவக்குத்தியவரை நோக்குவார்கள்" என்பது மறைநூலின் வேறொரு வாக்கு.
38 அரிமத்தியாவூர் சூசை என்று ஒருவர் இருந்தார். அவரும் இயேசுவின் சீடர். - ஆனால் யூதர்களுக்கு அஞ்சி அதைக் காட்டிக்கொள்ளவில்லை. - மேற்சொன்ன நிகழ்ச்சிகளுக்குப்பின், அவர் இயேசுவின் சடலத்தை எடுத்துவிடப் பிலாத்திடம் விடைகேட்டார். பிலாத்து விடையளித்தார். அவர் வந்து இயேசுவின் சடலத்தை எடுத்தார். -
39 முன்னொருநாள் இரவில் இயேசுவைப் பார்க்கப்போன - நிக்கொதேமுகூட அங்கு வந்தார். அவர் வெள்ளைப் போளமும் அகில்தூளும் கலந்து நூறு இராத்தல் கொண்டுவந்தார்.
40 இயேசுவின் சடலத்தை எடுத்து, யூதரின் அடக்க முறைப்படி பரிமளப்பொருட்களுடன் துணிகளில் சுற்றிக் கட்டினார்கள்.
41 அவர் சிலுவையில் அறையுண்ட இடத்தில் தோட்டம் ஒன்று இருந்தது. அத்தோட்டத்தில், புதுக் கல்லறை ஒன்று இருந்தது. அதில் யாரையும் அதுவரை வைத்ததில்லை.
42 அருகிலேயே அந்தக் கல்லறை இருந்ததாலும், அன்று யூதரின் பாஸ்காவுக்கு ஆயத்த நாளானதாலும் இயேசுவை அதில் வைத்தனர்.

John 19:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×