Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

John Chapters

John 14 Verses

1 உள்ளம் கலங்கவேண்டாம். கடவுள்மீது விசுவாசம்வையுங்கள், என்மீதும் விசுவாசம் வையுங்கள்.
2 என் தந்தையின் இல்லத்திலே உறைவிடங்கள் பல உள்ளன; இல்லாதிருந்தால் உங்களுக்குச் சொல்லி இருப்பேன். ஏனெனில், உங்களுக்கு ஓரிடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்.
3 நான் போய் உங்களுக்கு ஓரிடம் ஏற்பாடு செய்தபின், திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்; அப்போது, நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்.
4 நான் போகும் இடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும்."
5 தோமையார் அவரிடம், "ஆண்டவரே, நீர் செல்லுமிடமே எங்களுக்குத் தெரியாதிருக்க, அங்கே போகும்வழி எப்படித் தெரியும் ?" என்றார்.
6 இயேசு அவரிடம் கூறியதாவது: "நானே வழியும் உண்மையும் உயிரும். என் வழியாயன்றி எவனும் தந்தையிடம் வருவதில்லை.
7 நீங்கள் என்னை அறிந்திருந்தால், என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தவர்களாய் இருக்கிறீர்கள், அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்."
8 "இதைக் கேட்ட பிலிப்பு, "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும், அதுவே போதும்" என்றார்.
9 இயேசு அவரை நோக்கிக் கூறினார்: "பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும், நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா ? "என்னைக் கண்டவன் தந்தையையே கண்டான். பின், ' தந்தையை எங்களுக்குக் காட்டும் ' என்று நீ கேட்பதெப்படி ?
10 நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறதாக நீ விசுவசிக்கிறதில்லையா ? நான் உங்களுக்குக் கூறும் சொற்களை நானாகவே கூறுவதில்லை: என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் என் தந்தையே.
11 நான் சொல்வதை நம்புங்கள்: நான் தந்தையினுள் இருக்கிறேன், தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்பாவிடில், செயல்களின் பொருட்டேனும் நம்புங்கள்.
12 உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: என்னில் விசுவாசங்கொள்பவன் நான் செய்யும் செயல்களையும் செய்வான்; ஏன், அவற்றினும் பெரியனவும் செய்வான்; ஏனெனில், நான் தந்தையிடம் செல்லுகிறேன்.
13 நீங்கள் என் பெயரால் கேட்பதெல்லாம் செய்வேன்; இதனால் தந்தை மகனில் மகிமை பெறுவார்.
14 என் பெயரால் நீங்கள் எதைக்கேட்டாலும், அதை நான் செய்வேன்.
15 உங்களுக்கு என்மீது அன்பிருந்தால், என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்.
16 நானும் தந்தையைக் கேட்பேன்: தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருவார்; அவர் உங்களோடு என்றும் இருப்பார்.
17 அவர் உண்மையின் ஆவியானவர்; உலகம் அவரைப் பெற்றுக்கொள்ள முடியாது; ஏனெனில், உலகம் அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்களோ அவரை அறிவீர்கள்; ஏனெனில், அவர் உங்களோடு தங்கி உங்களுள் இருக்கிறார்.
18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்; உங்களிடம் திரும்பி வருவேன்.
19 இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது; நீங்களோ என்னைக் காண்பீர்கள்; ஏனெனில், நான் வாழ்கிறேன், நீங்களும் வாழ்வீர்கள்.
20 நான் என் தந்தையினுள்ளும், நீங்கள் என்னுள்ளும், நான் உங்களுள்ளும் இருப்பதை நீங்கள் அந்நாளில் அறிந்துகொள்வீர்கள்.
21 என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவனே எனக்கு அன்புகாட்டுகிறவன்; எனக்கு அன்புகாட்டுகிறவன் மேல் என் தந்தையும் அன்புகூர்வார். நானும் அவன்மேல் அன்புகூர்ந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்."
22 யூதாஸ்- இஸ்காரியோத்து யூதாஸ் அல்லன்- அவரை நோக்கி: "ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாது எங்களுக்கு மட்டும் வெளிப்படுத்துவதாகச் சொல்லுகிறீரே, ஏன் அப்படி?" என,
23 இயேசு மறுமொழியாகக் கூறினார்: "ஒருவன் எனக்கு அன்பு செய்தால் என் வார்த்தையைக் கேட்பான்; என் தந்தையும் அவன்மேல் அன்புகூர்வார்; நாங்களும் அவனிடம் வந்து, அவனோடு குடிகொள்வோம்.
24 எனக்கு அன்பு செய்யாதவன் என் வார்த்தைகளைக் கேட்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தையோ என்னுடையதன்று: என்னை அனுப்பிய தந்தையுடையதே.
25 இதெல்லாம் நான் உங்களோடிருக்கும் போதே உங்களுக்குச் சொன்னேன்.
26 தந்தை என் பெயரால் அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியான துணையாளரும் உங்களுக்கு எல்லாம் அறிவுறுத்துவார்; நான் உங்களுக்குக் கூறியதெல்லாம் நினைவூட்டுவார்.
27 சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் சமாதானத்தையே உங்களுக்கு அளிக்கிறேன்; நான் உங்களுக்கு அளிக்கும் சமாதனமோ உலகம் தரும் சமாதானம்போல் அன்று. உள்ளம் கலங்க வேண்டாம், மருள வேண்டாம்.
28 நான் போகிறேன், போய் உங்களிடம் திரும்பிவருவேன் என்று நான் சொன்னதை கேட்டீர்கள்; உங்களுக்கு என்மேல் அன்பிருந்தால், நான் தந்தையிடம் போவதுபற்றி மகிழ்வீர்கள். ஏனெனில், தந்தை என்னிலும் மேலானவர்.
29 இவை நிகழும்போது, நீங்கள் விசுவசிக்கும்பொருட்டு, இவை நிகழ்வதற்கு முன்னதாக, இப்பொழுதே உங்களுக்குச் சொன்னேன்.
30 நான் உங்களோடு பேச இனி அதிக நேரமில்லை; ஏனெனில், இவ்வுலகின் தலைவன் வருகிறான். அவனுக்கோ என்மேல் அதிகாரமில்லை.
31 ஆனால், நான் தந்தைக்கு அன்புசெய்கிறேன் என்பதையும், அவர் எனக்குக் கட்டளையிட்டபடியே நடக்கிறேன் என்பதையும் உலகம் தெரிந்துகொள்ளவேண்டும். எழுந்திருங்கள், இங்கிருந்து போவோம்.
×

Alert

×